Sunday, November 02, 2008

சபரிமலை நடை பயணம் - #3

மணிகண்டனும் அவர்களுடைய விருப்பப்
படியே அவர்களுடன் கல்லிலும் முள்ளிலும்
நடந்து *பொன்னம்பல மேட்டுக்குச் சென்றார்.
அவருக்குக் கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தையானது.

அவருடைய பக்தர்களின் கால்களுக்கும்
கல்லும் முள்ளும் மெத்தையானது.
 [* பொன்னம்பலமேடு என்கிற
காந்தமலை பம்பையாற்றின்
கரையில் இருந்து பன்னிரண்டு
கல் தூரத்திலுள்ளது.
ஐயப்ப பக்தர்கள் முக்கியத்துவம்
கொடுக்கும் திருக்கோயில்களுள்
இதுவும் ஒன்று ]

மஹிஷியின் கொடுமைக்குள்ளாகி
இருந்த தேவர்கள் முன்பே
பொன்னம்பல மேட்டில் மணி
கண்டசொரூபத்தை பிரதிஷ்டை
செய்து, தங்களைக் காத்து இரட்சிக்குமாறு
வேண்டிக் கொண்டனர். அங்கே
கோயில் கொண்டிருக்கும்
மணிகண்டனை ''பூதநாதன்'' என்பார்கள்.
--------------------------------------------------

இந்திரனும், தேவர்களும் மணிகண்டனின்
துணையோடு போருக்கு வருவதை
அறிந்த மஹிஷியின் சினம் எரிமலையாய்
பொங்கியது. பன்னிரண்டு வயதே நிரம்பிய
மணிகண்டன் தன்னுடன் போரிட
வந்திருப்பதை கண்டு நகைத்தாள்.

மணிகண்டனுக்கும் மஹிஷிக்கும்
நேருக்கு நேர் போர் படு உக்கிரமாய்
நடந்தது. மணிகண்டன் மஹிஷியைத்
தமது கைளால் பற்றி வெகு வேகமாய்
சுழற்றி வீசினார். அவள் பம்பைநதியை
அடுத்து ஓடும் அல்சா நதிக்கரையில் விழுந்தாள்.

தீயவர்கள் தங்கள் ஆற்றலில் இறுமாப்படைகிற
போது அவர்களை இறைவனே வதம்
செய்கிறான். மஹிஷியின் விஷயத்திலும்
அதுதான் நடந்தது.

மணிகண்டன் சாதாரண மனிதப்
பிறவியல்ல என்பதை உணர்ந்த மஹிஷிமுகி,
தன் முற்பிறவிப்பையும் அறிந்து தனக்குப்
பாவ விமோசனம் அளிக்க வேண்டினாள்.

சாப விமோசனம் பெற்ற மஹிஷி
மணிகண்டனிடம்,'' ஐயனே தங்களால்
நான் சாப விமோசனம் பெற்றேன்.
என்னை மனைவியாக ஏற்றுகொள்ள
வேண்டும்'' என்றாள்.

அவளது மனவேதனை உணர்ந்த
ஐயன் அவளை நோக்கி '
' *நீ மஞ்ச மாதா என்ற நாமத்துடன்
இங்கே கோயில் கொள்வாயாக,
என்னை தரிசிக்க வருகிற பக்தர்கள்
உன்னையும் வணங்கிச்செல்வர்.

என்னை முதல் முறையாய்
தரிசிப்பதற்கென்று வரும் பக்தன்
(கன்னி ஐயப்பன்) வாராது இருக்கின்றானோ
அன்று நான் உன்னை மணந்து கொள்வேன்''
என்றார். 

அதாவது "என்னைத் தரிசிப்பதற்குரிய
நாள்களில் என்றாவது கன்னியாத்திரை
செய்யும் பக்தன் (கன்னிச்சாமி) வராமல்
இருக்கிறானோ அன்றைக்கு உன்னை
மணந்து கொள்வேன்" என்றான்.
------------------------------------------

[ * மஞ்ச மாதாவே இன்று மாளிகை
புறத்து அம்மனாய் அறியப்படுகிறாள்.
சபரி மலை பதினெட்டாம்
படியில் மஞ்சமாதாவிற்கென்று
ஓர் ஆலயம் இருப்பதைக் காணமுடியும்.
அக்கோயிலின் கதவுகள்
ஒருபோதும் திறக்கப்படுவதில்லை ]
----------------------------------------------------------------

பந்தள மன்னன் இராஜசேகரன்
மணிகண்டனுக்குக் கோயில் கட்டும்
திருப்பணியைத் தொடங்கினான்.
பம்பா நதியில் நீராடி, விநாயக பூஜை
நடத்திய மன்னன் அப்பெருமானின்
அருளைப் பெற்று அடிக்கல் நாட்டினான்.

திருப்பணி தொடங்கப்பட்டபோது
வானம் மழை பொழிந்தது.
ஐயப்பனின் திருத்தோற்றம்,
யோகப்பட்டம் அணிந்த முட்டுக்களுடனும்
சின்முத்திரையுடனும் கூடிய
வலத் திருக்கையுடனும்,
அபயஹஸ்தம் அளிக்கும் இடது
திருக்கையுடனும், ஒன்றாய்ப் பொருந்தி
விளங்கும்.

தாமரைப்பாதங்களும், யோகாசனத்துடன்
கூடிய தவநிலையில் ஐயப்பன் விக்கிரம்
ஒரு மகர சங்கராந்தி ஆகவேதினத்தன்று
பஞ்சமி உத்திரம் கூடிய சுப முகூர்த்தத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தர்ம சாஸ்தா மெய்யப்பனாகி
பதினெட்டாம் படிக்கோயிலுள் அமர்ந்து
விண்ணையும், மண்ணையும்
காக்கும் தனது பரிபாலனத்தைத்
தொடங்கினர். தொடர்ந்து மாளிகைபுறத்தம்மன்,
வாபரன், கடுத்த சுவாமி, விநாயகர், 
யசி, நாகர் திருவிக்கிரங்களும் பிரதிஷ்டை 
செய்யப்பட்டன.

சபரிமலை நடை பயணம் தொடக்க
முனையான எருமேலி என்ற திருத்தலத்திலிருந்து
வனப்பிரதேசம் ஆரம்பமாகிறது.

மலைகளும் காடுகளும் நிறைந்த
கரடுமுரடான பாதை, நடப்பது சிரமம்.
ஐயப்பனின் பிரதான துணைவன் வாபரன்.

வாபரனுடைய கோயில் எருமேலிக் கோட்டத்தில்
உள்ளது. சபரிமலைச் செல்லும்
காட்டுவழியில் ஏழு கோட்டைகள் உள்ளன.
முதலாவது கோட்டை எருமேலி.

இங்கு ஓர் ஐயப்பன் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்குச் சற்று தொலைவில்
எருமேலி பேட்டை என்ற இடம் உண்டு.
அங்குள்ள வாபர் கோயில் மார்கழி மாதம்
பேட்டைத் துள்ளல் என்ற விழா நடக்கும்.

பேட்டையில் இருந்து எருமேலி வருவது
சுவாமி வேட்டை முடித்து வருவதான ஐதீகம்.

அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர்
தொலைவிலுள்ள பெரும்தோடு இருக்கிறது.

இங்கு நதியில் நீராடி இளைப்பாறலாம்.
ஐயப்பன் இந்த இடத்தில் பூதகணத்தவர்களுடன்
தங்கி இளைப்பாறியதாய் நம்பப்டுகிறது.

அடுத்துச் செல்கிற இடம் காளை கட்டு.
இது இரண்டாவது கோட்டை. எருமேலியிலிருந்து
ஒன்பது கி.மீ.

இங்கு நந்திப்பெருமான் தேவனாக
விளங்குகிறார். மஹிஷி அரக்கியை
ஐயப்ப சுவாமி வதம் செய்து ஆனந்த
தாண்டவம் ஆடிய இடம் இது.

அரக்கியை அழித்து ஆனந்தத்
தாண்டவம் ஆடிய காட்சியை
நந்திகேசுவரர் தரிசித்ததால்
'காளைக்கட்டி' என்று அத்தலம்
பெயர் பெற்றது.

மூன்றாவது உடும்பறைக் கோட்டை.
இங்கே பூதநாதர் வியாக்ரபாதன் என்ற
பெயரில் குடிகொண்டுள்ளார். இந்த
இடத்தில் ஐயப்பனனோடு அவருடைய
பூதகணங்களுக்கும் பூஜைகள் நடக்கிறது.

நான்காவது கோட்டை கரிமலை.
இங்கு கரிமலை பகவதியும், கொச்சுக் கடுத்த
சுவாமியும் கோயில் கொண்டு
உள்ளார்கள். கரிமலை ஏற்றம் சிரமமானது.

ஐந்தாவது கோட்டை சபரிபீடம்.
இதனை அடைவதற்கு முன் நீலிமலையைக்
கடக்க வேண்டும். பக்தர்கள் மலர்
முதலியன கொண்டு நீலிமலையை
பூஜித்தப்பின் மலை ஏறுவர்.

ஆறாவது கோட்டை சரங்குத்தி.
இங்கு அஸ்திர பைரவன் என்ற தேவன்
வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

சபரிமலை நடைப்பயணம் தொடக்க
முனையான எருமேலி என்ற திருத்தலத்திலிருந்து
வனப்பிரதேசம் ஆரம்பமாகிறது. மலைகளும்
காடுகளும் நிறைந்த கரடுமுரடான பாதை,
நடப்பது சிரமம். ஐயப்பனின்
பிரதான துணைவன் வாபரன்.

வாபரனுடைய கோயில் எருமேலிக்
கோட்டத்தில் உள்ளது. சபரிமலைச்
செல்லும் காட்டுவழியில் ஏழு
கோட்டைகள் உள்ளன.

முதலாவது கோட்டை எருமேலி.
இங்கு ஓர் ஐயப்பன் கோயில் உள்ளது.

இக்கோயிலுக்குச் சற்று தொலைவில் எருமேலி
பேட்டை என்ற இடம் உண்டு. அங்குள்ள
வாபர் கோயில் மார்கழி மாதம் 
பேட்டைத் துள்ளல் என்ற விழா நடக்கும்.
பேட்டையில் இருந்து எருமேலி
வருவது சுவாமி வேட்டை முடித்து 
வருவதான ஐதீகம்.

அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர்
தொலைவிலுள்ள பெரும்தோடு இருக்கிறது.

இங்கு நதியில் நீராடி
இளைப்பாறலாம். ஐயப்பன் இந்த இடத்தில்
பூதகணத்தவர்களுடன் தங்கி
இளைப்பாறியதாய் நம்பப்படுகிறது.

அடுத்துச் செல்கிற இடம் காளைக் கட்டு.
இது இரண்டாவது கோட்டை.
எருமேலியிலிருந்து ஒன்பது கி.மீ.

இங்கு நந்திப்பெருமான் தேவனாக
விளங்குகிறார். மஹிஷி என்ற அரக்கியை 
ஐயப்ப சுவாமி வதம் செய்து ஆனந்த
தாண்டவம் ஆடிய இடம் இது.
அரக்கியை அழித்து ஆனந்தத் 
தாண்டவம் ஆடிய காட்சியை நந்திகேசுவரர்
தரிசித்ததால் 'காளைக்கட்டி' என்று 
அத்தலம் பெயர் பெற்றது.

மூன்றாவது உடும்பறைக்கோட்டை.
இங்கே பூதநாதர் வியாக்ரபாதன் என்ற 
பெயரில் குடிகொண்டுள்ளார்.இந்த
இடத்தில் ஐயப்பனனோடு அவருடைய 
பூதகணங்களுக்கும் பூஜைகள் நடக்கிறது.

நான்காவது கோட்டை கரிமலை.
இங்கு கரிமலை பகவதியும், கொச்சுக் 
கடுத்த சுவாமியும் கோயில் கொண்டு
உள்ளார்கள். கரிமலை ஏற்றம் சிரமமானது.

ஐந்தாவது கோட்டை சபரிபீடம்.
இதனை அடைவதற்கு முன் நீலிமலையைக் 
கடக்க வேண்டும்.பக்தர்கள் மலர்
முதலியன கொண்டு நீலிமலையை 
பூஜித்தப்பின் மலை ஏறுவர்.

ஆறாவது கோட்டை சரங்குத்தி.
இங்கு அஸ்திர பைரவன் என்ற தேவன் 
வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

ஏழாவது கோட்டை சுவாமி ஐய்யப்பனின் 
சந்நிதானமாகிய பதினெட்டாம் படியாகும்.
படியின் வலதுபுறம் கருப்பசாமியும் இடதுபுறம் 
கடுத்த சுவாமியும் வீற்றிருக்கிறார்கள். 
தர்ம சாஸ்தாவான மூல ஸ்தானத்தில் 
கன்னி மூலையில் மகாகணபதி, வாயுமூலையில் 
மாளிகைபுறத்தம்மனும் வடக்குப்பக்கத்தில் 
வாபர சுவாமியும் பரிவார தேவதைகளாய் 
விளங்குகிறார்கள். 

ஐயப்பமார்கள் தலையில் இருமுடிக்கட்டுடன் 
சரணம் சொல்லிக் கொண்டே படி 
ஏறுகிறார்கள். அந்தச் சரணம்தான் அவர்களைப் 
பதினெட்டு படிகளையும் கடக்க உதவுகிறது.

மணிகண்டன் தமது திருக்கையில் 
தாங்கியிருந்த பதினெட்டு ஆயுதங்களே 
பதினெட்டு படிகள் என்றோர் ஐதீகம்.
ஐந்து இந்திரியங்கள், எட்டு ராகங்கள், 
மூன்று குணங்கள், வித்தை, அவித்தை 
ஆகியவைகள் குறிக்கப்படுவது 
உட்பொருளாய் உள்ளது.

திருக்கோயில் பகவான் யோகாசன 
நிலையில் 'தத்வமஸி' என்ற சின்மய 
முத்திரை காட்டி அமர்ந்து
இருக்கிறார்.

அன்பொடு
கிருஷ்ணன்
சிங்கப்பூர்



Monday, October 27, 2008

சபரி நடை பயணம் - #2

காலம் ஓடுகிறது நதியின் வேகத்தில்;
நதியைப் போலவே ஓசையில்லாமல்.
பன்னிரண்டு வயதுப் பாலகனானார்
மணிகண்டன்.

மன்னன் இராஜசேகரன் முதுமையின்
காரணமாக ஆட்சியதிகாரத்தைக் கொடுத்து
மணிகண்டனுக்கு முடி சூட்டுவதுதென்று
தீர்மானித்தான்.

முடிசூட்டுவிழாவிற்கான ஏற்பாடுகளைச்
செய்யும்படி உத்தரவிட்டான் மன்னன்.
அதிகாரத்தை தன் கையில் வைத்துக்
கொண்டால் பிற்காலத்தில் அரசை
நாம் கைக்கொண்டு விடலாம் என்ற
நம்பிக்கையில் இருந்தான் அமைச்சன்.

முடி சூட்டு விழாவிற்கு முன்
மணிகண்டனைக் கொன்றுவிடவும்
துணிந்தான்.

மாந்திரீகர்களைக் கொண்டு சில
துர்தேவதைகளை மணிகண்டன் மீது
ஏவிவிட்டான். அதனால் மணிகண்டனுடைய
உடலில் பிணிகள் தோன்றலாயிற்று.
மனிதப் பிறவி எடுத்தால் அதற்குரிய
வினைகளையும் அனுபவித்தாக
வேண்டுமல்லவா. கொப்புளம் சிரங்கு, கட்டி வந்து
அவதிப்பட்டார்.

ஐந்தெழுத்து மந்திரத்தில் வாராத
நலனுண்டா? தீராத பிணியுண்டா?.
அத்தனை மந்திரங்களுக்கும்
உயிர்ப்பியப்பான மந்திரமன்றோ அது.
சிவனே அனைத்துக்கும் மூலம்.
சிவனின் அருளால் தீயசக்திகள் விலகி,
நோயும் குணமடைந்தது.

தன்னுடைய கொலைத் திட்டம்
தோற்றதில் அமைச்சன் மேலும்
அழிவுப் பாதையிலேயே சிந்தனையை
ஓடவிட்டான்.

மணிகண்டனை எப்படியும் கொன்று
தீர்ப்பதில் குறியாய் இருந்தான்.
இன்னொரு சதித்திட்டம் அவனுள் உருவானது.
கோப்பெருந்தேவியை அந்தப்புரத்தில்
கண்டு தான் தீட்டிய திட்டத்தைச்
சொன்னான் அமைச்சன்.

''அரசி, தாங்கள் தவறாக நினைக்காவிட்டால்
ஒன்று சொல்வேன். அரச மரபிலுதித்த
இராஜராஜன் இருக்க, வனத்தில்
கண்டெடுத்த யாரோ ஒருவனுக்கு
முடிசூட்டுவது முறையாகத் தெரியவில்லை''
என்றான்.

அரசி அவனுடைய சொற்களை
ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்.
''கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்''
என்பது போல் அமைச்சன் அவளை
வேறு விதமாய் சிந்திக்க விடவில்லை.
தொடர்ந்த துர்போதனைகள் செய்து
அவளுடைய அறிவை மழுங்கடித்தான்.

அமைச்சன் ஒரு புதிய சூழ்ச்சித்
திட்டத்தை அரசியிடம் விவரித்தான்.
அதன்படி, "அரசி கடுமையான
தலைவலி அவதிப்படுவது போல
நடிக்க வேண்டும். அரண்மனை
வைத்தியர்கள் அளிக்கும் சிகிச்சைகளிலும்
பலனில்லை என்றாக்க வேண்டும்.
அப்போது அமைச்சன் அழைத்துவரும்
மருத்துவர் புலிப்பால் கொடுத்தால்தான்
அந்நோய் தீரும் என்பார்கள்.
மணிகண்டன் தாய்ப்பாசத்தில்
தானே புலிப்பால் கொண்டு வருவதாய்ச்
சொல்வான். அவன் புலியைத் தேடி
வனஞ்சென்று அங்கே புலிபோன்ற
கொடிய விலங்குகளால் கொல்லப்படுவான்.''

அமைச்சனின் யோசனை அரசிக்குத்
தகுதியாய் தெரிந்தது. அவள் அன்றே
தலைவலி நாடகத்தை அரங்கேற்றினாள்.
அரசிக்குக் கடுமையான தலைவலி
என்ற செய்தியை அறிந்த அரசன்
அந்தப்புரத்துக்கு விரைந்தான்.
உடனே மருத்துவர்களை அழைத்து
வர ஆணை பிறப்பித்தான்.
மருத்துவர்கள் வந்து வகைவகையாய்
மருந்துகள் கொடுத்தும் அரசியின்
தலைவலி தீரவில்லை.
எப்படித் தீரும்? உண்மையான நோயாக
இருந்தாலல்லவா மருந்தில் தீரும்.

இத்தருணத்தில் அமைச்சனின் ஏற்பாட்டில்
போலி மருத்துவன் அரசியின்
உடல் நிலையைப் பரிசோதிப்பது போல்
பாசாங்கு செய்தான்.

''அரசே! பெண்களுக்கு இத்தகைய
தலைவலி வெகு அபூர்வமாகவே வரும்.
இது சாதாரண மருந்துகளில் தீரக்கூடிய
தலைவலியல்ல இது. அரசே நான்
ஒரு மூலிகை தருவேன் அதைப் புலிப்பாலில்,
அதுவும் அப்போது கறந்த பாலில்
கரைத்து குடித்து விட்டால்
பிறகு அடுத்த பிறவிக்கும்
அரசியாருக்குத் தலைவலி தலைகாட்டாது."
என்றான் போலி மருத்துவன்.

வெளுத்ததெல்லாம் பால் என்று
நம்பும் அரசன் செய்வதறியாது கலங்கினான்.

மணிகண்டனை அழைத்து,
'புலிப்பாலை எப்படிக் கொண்டு வருவது?' -
அதைக் கொண்டு வந்தால்தான் உன்
அன்னையின் தலைவலி தீரும்
என்று மருத்துவர் சொல்கிறார்.
உனக்கு ஏதும் வழி தெரிந்தால்
சொல் என்றான்.

மணிகண்டன் அரசனைப் பார்த்து,
'தந்தையே இதற்காகவா வருந்துகிறீர்கள்?'
நானே சென்று புலியைக் கொண்டு
வருவேன் என்றார்.

'மகனே! இது ஆபத்தான வேலை.
நான் உன்னை இதில் பணயம்
வைக்கமாட்டேன்' என்றான்
அரசன் பதற்றத்துடன்.

'தந்தையே இது ஒரு மகன்
தாய்க்குச் செய்கிற கடமை.
நான் காட்டில் கண்டெடுக்கப்பட்டவன்.
எனக்குக் காட்டு மிருகங்களிடம்
அச்சமில்லை' என்றார்.

அமைச்சனின் சூழ்ச்சியும்,
அரசியின் தலைவலி நாடகமும்
மனிதர்களிடையே இயல்பாய்
உள்ளதுதான் 'புலிப்பாலுக்கு மணிகண்டன்
கானகம்செல்வது'
இறைவனின் திருவுள்ளப்படியேயாகும்.

வனத்தில் முடிக்க வேண்டிய காரியம்
ஒன்றையும் இறைவன் திட்டமிட்டிருந்தான்.
அது மணிகண்டனின் அவதார நோக்கம்.

மணிகண்டனை புலிப்பால்
கொண்டு வருவதற்கு காட்டுக்கு
அனுப்பியது முதல்,
மன்னன் இராஜசேகரன் அளவற்ற
மனத்தவிப்புடன் இருந்து வந்தான்.

மணிகண்டனைப் பற்றி எந்த செய்தியும்
தெரியவில்லையே என்று வருந்திக்கொண்டு இருந்த சமயம், மணிகண்டன் வருகிற
செய்தி அரசனுக்கு எட்டியது.

மின்னல் வேகத்தில் அரண்மனை
வாயிலுக்கு விரைந்தான். வேங்கைப் புலி
மேல் அமர்ந்து மணிகண்டன்
வருவதை, அவனது முன்னும் பின்னும்
இரு பக்கங்களிலும் புலிகள் கூட்டமாய்
தொடர்வதைக் கண்டான் மன்னன்.
ஓடிச்சென்று மைந்தனைத் தழுவினான்.

மணிகண்டன் அரசனை வணங்கி,
'தங்கள் ஆணைப்படி,
புலிகளைக் கொண்டு வந்துவிட்டேன்.
மருத்துவரைஅழைத்து தேவையான
அளவு பால் கறந்து எடுத்துக்கொள்ளச்
சொல்லுங்கள் ' என்றார்.

மணிகண்டன் காட்டுக்குச் சென்றதுமே
அரசியின் தலைவலி நீங்கிவிட்டது என்றும்,
இனி புலிப்பால் தேவைப்படாது,
புலிகளைக் காட்டுக்கே அனுப்பிவிடலாம்
என்று அரசன் கூறினான்.

அரசியும், அமைச்சனும் கண்களில் நீர்மல்கி, 'தேவரீரை இன்னாரென்று அறியாமல் பிழை புரிந்து
விட்டோம். எங்களை மன்னித்து நற்கதி அருளவேண்டும்' என்று மண்டியிட்டு வேண்டினர்.

மணிகண்டன் அரசியையும்,
அமைச்சனையும் மன்னித்து அருளினார்.
உலகில் மன்னிக்க முடியாத தவறென்று
எதுவும் இல்லை.

மன்னித்தல் மாண்பு,
மன்னிப்பதற்கும் கருணை மனம் வேண்டும்.
மன்னிப்பதன் மூலம் தவறு செய்தவர்
திருந்தி வாழ வாய்ப்பளிக்கிறீர்கள் என்று தம்முடைய செய்கையின் மூலம் மணிகண்டன்
உலகோருக்கு உணர்த்தி விட்டார்.

மணிகண்டன் மன்னரைத் தழுவி,
''தந்தையே, ஒரு தெய்வீக காரியமாகவே
நான் இங்கே வந்ததும்,
தங்களுடைய அரண்மனையில்
தங்கியிருந்ததும்,
இப்போது அந்தக் காரியம் நடந்தேறியதும்
என் மனித அவதாரத்தன்மையை
பூர்த்தியாக்கியுள்ளது" என்றார்.

மணிகண்டன் தெய்வத்தின் அவதாரம்
என்பதனை மக்கள் உணர்ந்தனர்.
என்னை தரிசிக்க என் திருக்கோயிலுக்கு
வரும் பக்தர்கள் விரதங்களை முறையாகக்
கடைப்பிடித்தால்தான் பலன்கிடைக்கும்.
புண்ணிய தினமான மகர சங்கராந்தியன்று
என்னைத் தரிசிப்பது சிறப்பு.

கேரளத்திலுள்ள பதினெட்டுத்
திருக்கோயில்களில் நான் குடிகொண்டிருப்பேன்.
அவற்றுள் சபரிமலையே முக்கிய திருத்தலமாகும்.

பதினெட்டு தத்துவங்களையும் கடந்து
வருபவர்கள்தான் என்னை அடைய முடியும்.

'' நான் உங்களை எல்லாம் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதோ புறப்படுகிறேன்.
எமது பிரிவை எண்ணி வருந்தாதீர்கள்.
உமக்குள்ளே யாம் பூரணமாய்
வியாபித்திருக்கிறோம்'' என்று கூறிப்
பேரொளிப் பிழம்பாய் மாறி மறைந்தார்.

உலகம் தர்மநெறியைக் கடைப்பிடிக்கும்
வரை அமைதியாய் இருக்கும். மக்கள்
அதர்ம வழியில் நடக்கத துவங்கினால்
அமைதி குலைந்து விடும்.

(தொடரும்)

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை

தமிழ் எமது மொழி இன்பத்தமிழ் எங்கள் மொழி

http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com
http://singaporekovilgal.blogspot.com