Sunday, November 02, 2008

சபரிமலை நடை பயணம் - #3

மணிகண்டனும் அவர்களுடைய விருப்பப்
படியே அவர்களுடன் கல்லிலும் முள்ளிலும்
நடந்து *பொன்னம்பல மேட்டுக்குச் சென்றார்.
அவருக்குக் கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தையானது.

அவருடைய பக்தர்களின் கால்களுக்கும்
கல்லும் முள்ளும் மெத்தையானது.
 [* பொன்னம்பலமேடு என்கிற
காந்தமலை பம்பையாற்றின்
கரையில் இருந்து பன்னிரண்டு
கல் தூரத்திலுள்ளது.
ஐயப்ப பக்தர்கள் முக்கியத்துவம்
கொடுக்கும் திருக்கோயில்களுள்
இதுவும் ஒன்று ]

மஹிஷியின் கொடுமைக்குள்ளாகி
இருந்த தேவர்கள் முன்பே
பொன்னம்பல மேட்டில் மணி
கண்டசொரூபத்தை பிரதிஷ்டை
செய்து, தங்களைக் காத்து இரட்சிக்குமாறு
வேண்டிக் கொண்டனர். அங்கே
கோயில் கொண்டிருக்கும்
மணிகண்டனை ''பூதநாதன்'' என்பார்கள்.
--------------------------------------------------

இந்திரனும், தேவர்களும் மணிகண்டனின்
துணையோடு போருக்கு வருவதை
அறிந்த மஹிஷியின் சினம் எரிமலையாய்
பொங்கியது. பன்னிரண்டு வயதே நிரம்பிய
மணிகண்டன் தன்னுடன் போரிட
வந்திருப்பதை கண்டு நகைத்தாள்.

மணிகண்டனுக்கும் மஹிஷிக்கும்
நேருக்கு நேர் போர் படு உக்கிரமாய்
நடந்தது. மணிகண்டன் மஹிஷியைத்
தமது கைளால் பற்றி வெகு வேகமாய்
சுழற்றி வீசினார். அவள் பம்பைநதியை
அடுத்து ஓடும் அல்சா நதிக்கரையில் விழுந்தாள்.

தீயவர்கள் தங்கள் ஆற்றலில் இறுமாப்படைகிற
போது அவர்களை இறைவனே வதம்
செய்கிறான். மஹிஷியின் விஷயத்திலும்
அதுதான் நடந்தது.

மணிகண்டன் சாதாரண மனிதப்
பிறவியல்ல என்பதை உணர்ந்த மஹிஷிமுகி,
தன் முற்பிறவிப்பையும் அறிந்து தனக்குப்
பாவ விமோசனம் அளிக்க வேண்டினாள்.

சாப விமோசனம் பெற்ற மஹிஷி
மணிகண்டனிடம்,'' ஐயனே தங்களால்
நான் சாப விமோசனம் பெற்றேன்.
என்னை மனைவியாக ஏற்றுகொள்ள
வேண்டும்'' என்றாள்.

அவளது மனவேதனை உணர்ந்த
ஐயன் அவளை நோக்கி '
' *நீ மஞ்ச மாதா என்ற நாமத்துடன்
இங்கே கோயில் கொள்வாயாக,
என்னை தரிசிக்க வருகிற பக்தர்கள்
உன்னையும் வணங்கிச்செல்வர்.

என்னை முதல் முறையாய்
தரிசிப்பதற்கென்று வரும் பக்தன்
(கன்னி ஐயப்பன்) வாராது இருக்கின்றானோ
அன்று நான் உன்னை மணந்து கொள்வேன்''
என்றார். 

அதாவது "என்னைத் தரிசிப்பதற்குரிய
நாள்களில் என்றாவது கன்னியாத்திரை
செய்யும் பக்தன் (கன்னிச்சாமி) வராமல்
இருக்கிறானோ அன்றைக்கு உன்னை
மணந்து கொள்வேன்" என்றான்.
------------------------------------------

[ * மஞ்ச மாதாவே இன்று மாளிகை
புறத்து அம்மனாய் அறியப்படுகிறாள்.
சபரி மலை பதினெட்டாம்
படியில் மஞ்சமாதாவிற்கென்று
ஓர் ஆலயம் இருப்பதைக் காணமுடியும்.
அக்கோயிலின் கதவுகள்
ஒருபோதும் திறக்கப்படுவதில்லை ]
----------------------------------------------------------------

பந்தள மன்னன் இராஜசேகரன்
மணிகண்டனுக்குக் கோயில் கட்டும்
திருப்பணியைத் தொடங்கினான்.
பம்பா நதியில் நீராடி, விநாயக பூஜை
நடத்திய மன்னன் அப்பெருமானின்
அருளைப் பெற்று அடிக்கல் நாட்டினான்.

திருப்பணி தொடங்கப்பட்டபோது
வானம் மழை பொழிந்தது.
ஐயப்பனின் திருத்தோற்றம்,
யோகப்பட்டம் அணிந்த முட்டுக்களுடனும்
சின்முத்திரையுடனும் கூடிய
வலத் திருக்கையுடனும்,
அபயஹஸ்தம் அளிக்கும் இடது
திருக்கையுடனும், ஒன்றாய்ப் பொருந்தி
விளங்கும்.

தாமரைப்பாதங்களும், யோகாசனத்துடன்
கூடிய தவநிலையில் ஐயப்பன் விக்கிரம்
ஒரு மகர சங்கராந்தி ஆகவேதினத்தன்று
பஞ்சமி உத்திரம் கூடிய சுப முகூர்த்தத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தர்ம சாஸ்தா மெய்யப்பனாகி
பதினெட்டாம் படிக்கோயிலுள் அமர்ந்து
விண்ணையும், மண்ணையும்
காக்கும் தனது பரிபாலனத்தைத்
தொடங்கினர். தொடர்ந்து மாளிகைபுறத்தம்மன்,
வாபரன், கடுத்த சுவாமி, விநாயகர், 
யசி, நாகர் திருவிக்கிரங்களும் பிரதிஷ்டை 
செய்யப்பட்டன.

சபரிமலை நடை பயணம் தொடக்க
முனையான எருமேலி என்ற திருத்தலத்திலிருந்து
வனப்பிரதேசம் ஆரம்பமாகிறது.

மலைகளும் காடுகளும் நிறைந்த
கரடுமுரடான பாதை, நடப்பது சிரமம்.
ஐயப்பனின் பிரதான துணைவன் வாபரன்.

வாபரனுடைய கோயில் எருமேலிக் கோட்டத்தில்
உள்ளது. சபரிமலைச் செல்லும்
காட்டுவழியில் ஏழு கோட்டைகள் உள்ளன.
முதலாவது கோட்டை எருமேலி.

இங்கு ஓர் ஐயப்பன் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்குச் சற்று தொலைவில்
எருமேலி பேட்டை என்ற இடம் உண்டு.
அங்குள்ள வாபர் கோயில் மார்கழி மாதம்
பேட்டைத் துள்ளல் என்ற விழா நடக்கும்.

பேட்டையில் இருந்து எருமேலி வருவது
சுவாமி வேட்டை முடித்து வருவதான ஐதீகம்.

அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர்
தொலைவிலுள்ள பெரும்தோடு இருக்கிறது.

இங்கு நதியில் நீராடி இளைப்பாறலாம்.
ஐயப்பன் இந்த இடத்தில் பூதகணத்தவர்களுடன்
தங்கி இளைப்பாறியதாய் நம்பப்டுகிறது.

அடுத்துச் செல்கிற இடம் காளை கட்டு.
இது இரண்டாவது கோட்டை. எருமேலியிலிருந்து
ஒன்பது கி.மீ.

இங்கு நந்திப்பெருமான் தேவனாக
விளங்குகிறார். மஹிஷி அரக்கியை
ஐயப்ப சுவாமி வதம் செய்து ஆனந்த
தாண்டவம் ஆடிய இடம் இது.

அரக்கியை அழித்து ஆனந்தத்
தாண்டவம் ஆடிய காட்சியை
நந்திகேசுவரர் தரிசித்ததால்
'காளைக்கட்டி' என்று அத்தலம்
பெயர் பெற்றது.

மூன்றாவது உடும்பறைக் கோட்டை.
இங்கே பூதநாதர் வியாக்ரபாதன் என்ற
பெயரில் குடிகொண்டுள்ளார். இந்த
இடத்தில் ஐயப்பனனோடு அவருடைய
பூதகணங்களுக்கும் பூஜைகள் நடக்கிறது.

நான்காவது கோட்டை கரிமலை.
இங்கு கரிமலை பகவதியும், கொச்சுக் கடுத்த
சுவாமியும் கோயில் கொண்டு
உள்ளார்கள். கரிமலை ஏற்றம் சிரமமானது.

ஐந்தாவது கோட்டை சபரிபீடம்.
இதனை அடைவதற்கு முன் நீலிமலையைக்
கடக்க வேண்டும். பக்தர்கள் மலர்
முதலியன கொண்டு நீலிமலையை
பூஜித்தப்பின் மலை ஏறுவர்.

ஆறாவது கோட்டை சரங்குத்தி.
இங்கு அஸ்திர பைரவன் என்ற தேவன்
வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

சபரிமலை நடைப்பயணம் தொடக்க
முனையான எருமேலி என்ற திருத்தலத்திலிருந்து
வனப்பிரதேசம் ஆரம்பமாகிறது. மலைகளும்
காடுகளும் நிறைந்த கரடுமுரடான பாதை,
நடப்பது சிரமம். ஐயப்பனின்
பிரதான துணைவன் வாபரன்.

வாபரனுடைய கோயில் எருமேலிக்
கோட்டத்தில் உள்ளது. சபரிமலைச்
செல்லும் காட்டுவழியில் ஏழு
கோட்டைகள் உள்ளன.

முதலாவது கோட்டை எருமேலி.
இங்கு ஓர் ஐயப்பன் கோயில் உள்ளது.

இக்கோயிலுக்குச் சற்று தொலைவில் எருமேலி
பேட்டை என்ற இடம் உண்டு. அங்குள்ள
வாபர் கோயில் மார்கழி மாதம் 
பேட்டைத் துள்ளல் என்ற விழா நடக்கும்.
பேட்டையில் இருந்து எருமேலி
வருவது சுவாமி வேட்டை முடித்து 
வருவதான ஐதீகம்.

அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர்
தொலைவிலுள்ள பெரும்தோடு இருக்கிறது.

இங்கு நதியில் நீராடி
இளைப்பாறலாம். ஐயப்பன் இந்த இடத்தில்
பூதகணத்தவர்களுடன் தங்கி
இளைப்பாறியதாய் நம்பப்படுகிறது.

அடுத்துச் செல்கிற இடம் காளைக் கட்டு.
இது இரண்டாவது கோட்டை.
எருமேலியிலிருந்து ஒன்பது கி.மீ.

இங்கு நந்திப்பெருமான் தேவனாக
விளங்குகிறார். மஹிஷி என்ற அரக்கியை 
ஐயப்ப சுவாமி வதம் செய்து ஆனந்த
தாண்டவம் ஆடிய இடம் இது.
அரக்கியை அழித்து ஆனந்தத் 
தாண்டவம் ஆடிய காட்சியை நந்திகேசுவரர்
தரிசித்ததால் 'காளைக்கட்டி' என்று 
அத்தலம் பெயர் பெற்றது.

மூன்றாவது உடும்பறைக்கோட்டை.
இங்கே பூதநாதர் வியாக்ரபாதன் என்ற 
பெயரில் குடிகொண்டுள்ளார்.இந்த
இடத்தில் ஐயப்பனனோடு அவருடைய 
பூதகணங்களுக்கும் பூஜைகள் நடக்கிறது.

நான்காவது கோட்டை கரிமலை.
இங்கு கரிமலை பகவதியும், கொச்சுக் 
கடுத்த சுவாமியும் கோயில் கொண்டு
உள்ளார்கள். கரிமலை ஏற்றம் சிரமமானது.

ஐந்தாவது கோட்டை சபரிபீடம்.
இதனை அடைவதற்கு முன் நீலிமலையைக் 
கடக்க வேண்டும்.பக்தர்கள் மலர்
முதலியன கொண்டு நீலிமலையை 
பூஜித்தப்பின் மலை ஏறுவர்.

ஆறாவது கோட்டை சரங்குத்தி.
இங்கு அஸ்திர பைரவன் என்ற தேவன் 
வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

ஏழாவது கோட்டை சுவாமி ஐய்யப்பனின் 
சந்நிதானமாகிய பதினெட்டாம் படியாகும்.
படியின் வலதுபுறம் கருப்பசாமியும் இடதுபுறம் 
கடுத்த சுவாமியும் வீற்றிருக்கிறார்கள். 
தர்ம சாஸ்தாவான மூல ஸ்தானத்தில் 
கன்னி மூலையில் மகாகணபதி, வாயுமூலையில் 
மாளிகைபுறத்தம்மனும் வடக்குப்பக்கத்தில் 
வாபர சுவாமியும் பரிவார தேவதைகளாய் 
விளங்குகிறார்கள். 

ஐயப்பமார்கள் தலையில் இருமுடிக்கட்டுடன் 
சரணம் சொல்லிக் கொண்டே படி 
ஏறுகிறார்கள். அந்தச் சரணம்தான் அவர்களைப் 
பதினெட்டு படிகளையும் கடக்க உதவுகிறது.

மணிகண்டன் தமது திருக்கையில் 
தாங்கியிருந்த பதினெட்டு ஆயுதங்களே 
பதினெட்டு படிகள் என்றோர் ஐதீகம்.
ஐந்து இந்திரியங்கள், எட்டு ராகங்கள், 
மூன்று குணங்கள், வித்தை, அவித்தை 
ஆகியவைகள் குறிக்கப்படுவது 
உட்பொருளாய் உள்ளது.

திருக்கோயில் பகவான் யோகாசன 
நிலையில் 'தத்வமஸி' என்ற சின்மய 
முத்திரை காட்டி அமர்ந்து
இருக்கிறார்.

அன்பொடு
கிருஷ்ணன்
சிங்கப்பூர்



Monday, October 27, 2008

சபரி நடை பயணம் - #2

காலம் ஓடுகிறது நதியின் வேகத்தில்;
நதியைப் போலவே ஓசையில்லாமல்.
பன்னிரண்டு வயதுப் பாலகனானார்
மணிகண்டன்.

மன்னன் இராஜசேகரன் முதுமையின்
காரணமாக ஆட்சியதிகாரத்தைக் கொடுத்து
மணிகண்டனுக்கு முடி சூட்டுவதுதென்று
தீர்மானித்தான்.

முடிசூட்டுவிழாவிற்கான ஏற்பாடுகளைச்
செய்யும்படி உத்தரவிட்டான் மன்னன்.
அதிகாரத்தை தன் கையில் வைத்துக்
கொண்டால் பிற்காலத்தில் அரசை
நாம் கைக்கொண்டு விடலாம் என்ற
நம்பிக்கையில் இருந்தான் அமைச்சன்.

முடி சூட்டு விழாவிற்கு முன்
மணிகண்டனைக் கொன்றுவிடவும்
துணிந்தான்.

மாந்திரீகர்களைக் கொண்டு சில
துர்தேவதைகளை மணிகண்டன் மீது
ஏவிவிட்டான். அதனால் மணிகண்டனுடைய
உடலில் பிணிகள் தோன்றலாயிற்று.
மனிதப் பிறவி எடுத்தால் அதற்குரிய
வினைகளையும் அனுபவித்தாக
வேண்டுமல்லவா. கொப்புளம் சிரங்கு, கட்டி வந்து
அவதிப்பட்டார்.

ஐந்தெழுத்து மந்திரத்தில் வாராத
நலனுண்டா? தீராத பிணியுண்டா?.
அத்தனை மந்திரங்களுக்கும்
உயிர்ப்பியப்பான மந்திரமன்றோ அது.
சிவனே அனைத்துக்கும் மூலம்.
சிவனின் அருளால் தீயசக்திகள் விலகி,
நோயும் குணமடைந்தது.

தன்னுடைய கொலைத் திட்டம்
தோற்றதில் அமைச்சன் மேலும்
அழிவுப் பாதையிலேயே சிந்தனையை
ஓடவிட்டான்.

மணிகண்டனை எப்படியும் கொன்று
தீர்ப்பதில் குறியாய் இருந்தான்.
இன்னொரு சதித்திட்டம் அவனுள் உருவானது.
கோப்பெருந்தேவியை அந்தப்புரத்தில்
கண்டு தான் தீட்டிய திட்டத்தைச்
சொன்னான் அமைச்சன்.

''அரசி, தாங்கள் தவறாக நினைக்காவிட்டால்
ஒன்று சொல்வேன். அரச மரபிலுதித்த
இராஜராஜன் இருக்க, வனத்தில்
கண்டெடுத்த யாரோ ஒருவனுக்கு
முடிசூட்டுவது முறையாகத் தெரியவில்லை''
என்றான்.

அரசி அவனுடைய சொற்களை
ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்.
''கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்''
என்பது போல் அமைச்சன் அவளை
வேறு விதமாய் சிந்திக்க விடவில்லை.
தொடர்ந்த துர்போதனைகள் செய்து
அவளுடைய அறிவை மழுங்கடித்தான்.

அமைச்சன் ஒரு புதிய சூழ்ச்சித்
திட்டத்தை அரசியிடம் விவரித்தான்.
அதன்படி, "அரசி கடுமையான
தலைவலி அவதிப்படுவது போல
நடிக்க வேண்டும். அரண்மனை
வைத்தியர்கள் அளிக்கும் சிகிச்சைகளிலும்
பலனில்லை என்றாக்க வேண்டும்.
அப்போது அமைச்சன் அழைத்துவரும்
மருத்துவர் புலிப்பால் கொடுத்தால்தான்
அந்நோய் தீரும் என்பார்கள்.
மணிகண்டன் தாய்ப்பாசத்தில்
தானே புலிப்பால் கொண்டு வருவதாய்ச்
சொல்வான். அவன் புலியைத் தேடி
வனஞ்சென்று அங்கே புலிபோன்ற
கொடிய விலங்குகளால் கொல்லப்படுவான்.''

அமைச்சனின் யோசனை அரசிக்குத்
தகுதியாய் தெரிந்தது. அவள் அன்றே
தலைவலி நாடகத்தை அரங்கேற்றினாள்.
அரசிக்குக் கடுமையான தலைவலி
என்ற செய்தியை அறிந்த அரசன்
அந்தப்புரத்துக்கு விரைந்தான்.
உடனே மருத்துவர்களை அழைத்து
வர ஆணை பிறப்பித்தான்.
மருத்துவர்கள் வந்து வகைவகையாய்
மருந்துகள் கொடுத்தும் அரசியின்
தலைவலி தீரவில்லை.
எப்படித் தீரும்? உண்மையான நோயாக
இருந்தாலல்லவா மருந்தில் தீரும்.

இத்தருணத்தில் அமைச்சனின் ஏற்பாட்டில்
போலி மருத்துவன் அரசியின்
உடல் நிலையைப் பரிசோதிப்பது போல்
பாசாங்கு செய்தான்.

''அரசே! பெண்களுக்கு இத்தகைய
தலைவலி வெகு அபூர்வமாகவே வரும்.
இது சாதாரண மருந்துகளில் தீரக்கூடிய
தலைவலியல்ல இது. அரசே நான்
ஒரு மூலிகை தருவேன் அதைப் புலிப்பாலில்,
அதுவும் அப்போது கறந்த பாலில்
கரைத்து குடித்து விட்டால்
பிறகு அடுத்த பிறவிக்கும்
அரசியாருக்குத் தலைவலி தலைகாட்டாது."
என்றான் போலி மருத்துவன்.

வெளுத்ததெல்லாம் பால் என்று
நம்பும் அரசன் செய்வதறியாது கலங்கினான்.

மணிகண்டனை அழைத்து,
'புலிப்பாலை எப்படிக் கொண்டு வருவது?' -
அதைக் கொண்டு வந்தால்தான் உன்
அன்னையின் தலைவலி தீரும்
என்று மருத்துவர் சொல்கிறார்.
உனக்கு ஏதும் வழி தெரிந்தால்
சொல் என்றான்.

மணிகண்டன் அரசனைப் பார்த்து,
'தந்தையே இதற்காகவா வருந்துகிறீர்கள்?'
நானே சென்று புலியைக் கொண்டு
வருவேன் என்றார்.

'மகனே! இது ஆபத்தான வேலை.
நான் உன்னை இதில் பணயம்
வைக்கமாட்டேன்' என்றான்
அரசன் பதற்றத்துடன்.

'தந்தையே இது ஒரு மகன்
தாய்க்குச் செய்கிற கடமை.
நான் காட்டில் கண்டெடுக்கப்பட்டவன்.
எனக்குக் காட்டு மிருகங்களிடம்
அச்சமில்லை' என்றார்.

அமைச்சனின் சூழ்ச்சியும்,
அரசியின் தலைவலி நாடகமும்
மனிதர்களிடையே இயல்பாய்
உள்ளதுதான் 'புலிப்பாலுக்கு மணிகண்டன்
கானகம்செல்வது'
இறைவனின் திருவுள்ளப்படியேயாகும்.

வனத்தில் முடிக்க வேண்டிய காரியம்
ஒன்றையும் இறைவன் திட்டமிட்டிருந்தான்.
அது மணிகண்டனின் அவதார நோக்கம்.

மணிகண்டனை புலிப்பால்
கொண்டு வருவதற்கு காட்டுக்கு
அனுப்பியது முதல்,
மன்னன் இராஜசேகரன் அளவற்ற
மனத்தவிப்புடன் இருந்து வந்தான்.

மணிகண்டனைப் பற்றி எந்த செய்தியும்
தெரியவில்லையே என்று வருந்திக்கொண்டு இருந்த சமயம், மணிகண்டன் வருகிற
செய்தி அரசனுக்கு எட்டியது.

மின்னல் வேகத்தில் அரண்மனை
வாயிலுக்கு விரைந்தான். வேங்கைப் புலி
மேல் அமர்ந்து மணிகண்டன்
வருவதை, அவனது முன்னும் பின்னும்
இரு பக்கங்களிலும் புலிகள் கூட்டமாய்
தொடர்வதைக் கண்டான் மன்னன்.
ஓடிச்சென்று மைந்தனைத் தழுவினான்.

மணிகண்டன் அரசனை வணங்கி,
'தங்கள் ஆணைப்படி,
புலிகளைக் கொண்டு வந்துவிட்டேன்.
மருத்துவரைஅழைத்து தேவையான
அளவு பால் கறந்து எடுத்துக்கொள்ளச்
சொல்லுங்கள் ' என்றார்.

மணிகண்டன் காட்டுக்குச் சென்றதுமே
அரசியின் தலைவலி நீங்கிவிட்டது என்றும்,
இனி புலிப்பால் தேவைப்படாது,
புலிகளைக் காட்டுக்கே அனுப்பிவிடலாம்
என்று அரசன் கூறினான்.

அரசியும், அமைச்சனும் கண்களில் நீர்மல்கி, 'தேவரீரை இன்னாரென்று அறியாமல் பிழை புரிந்து
விட்டோம். எங்களை மன்னித்து நற்கதி அருளவேண்டும்' என்று மண்டியிட்டு வேண்டினர்.

மணிகண்டன் அரசியையும்,
அமைச்சனையும் மன்னித்து அருளினார்.
உலகில் மன்னிக்க முடியாத தவறென்று
எதுவும் இல்லை.

மன்னித்தல் மாண்பு,
மன்னிப்பதற்கும் கருணை மனம் வேண்டும்.
மன்னிப்பதன் மூலம் தவறு செய்தவர்
திருந்தி வாழ வாய்ப்பளிக்கிறீர்கள் என்று தம்முடைய செய்கையின் மூலம் மணிகண்டன்
உலகோருக்கு உணர்த்தி விட்டார்.

மணிகண்டன் மன்னரைத் தழுவி,
''தந்தையே, ஒரு தெய்வீக காரியமாகவே
நான் இங்கே வந்ததும்,
தங்களுடைய அரண்மனையில்
தங்கியிருந்ததும்,
இப்போது அந்தக் காரியம் நடந்தேறியதும்
என் மனித அவதாரத்தன்மையை
பூர்த்தியாக்கியுள்ளது" என்றார்.

மணிகண்டன் தெய்வத்தின் அவதாரம்
என்பதனை மக்கள் உணர்ந்தனர்.
என்னை தரிசிக்க என் திருக்கோயிலுக்கு
வரும் பக்தர்கள் விரதங்களை முறையாகக்
கடைப்பிடித்தால்தான் பலன்கிடைக்கும்.
புண்ணிய தினமான மகர சங்கராந்தியன்று
என்னைத் தரிசிப்பது சிறப்பு.

கேரளத்திலுள்ள பதினெட்டுத்
திருக்கோயில்களில் நான் குடிகொண்டிருப்பேன்.
அவற்றுள் சபரிமலையே முக்கிய திருத்தலமாகும்.

பதினெட்டு தத்துவங்களையும் கடந்து
வருபவர்கள்தான் என்னை அடைய முடியும்.

'' நான் உங்களை எல்லாம் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதோ புறப்படுகிறேன்.
எமது பிரிவை எண்ணி வருந்தாதீர்கள்.
உமக்குள்ளே யாம் பூரணமாய்
வியாபித்திருக்கிறோம்'' என்று கூறிப்
பேரொளிப் பிழம்பாய் மாறி மறைந்தார்.

உலகம் தர்மநெறியைக் கடைப்பிடிக்கும்
வரை அமைதியாய் இருக்கும். மக்கள்
அதர்ம வழியில் நடக்கத துவங்கினால்
அமைதி குலைந்து விடும்.

(தொடரும்)

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை

தமிழ் எமது மொழி இன்பத்தமிழ் எங்கள் மொழி

http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com
http://singaporekovilgal.blogspot.com

Friday, October 24, 2008

சபரிமலை நடை பயணம் - #1

புராணங்கள் வெறும் கட்டுக்கதைகளல்ல.
பொழுது போக்காய் எழுதப்பட்டதோ,
படிக்கப்படுவதோ அல்ல.
நாம் கடை பிடிக்க வேண்டிய
நெறிமுறைகளை அவை வலியுறுத்தும்,
நல்வாழ்வின் இரகசியங்களை வெளிப்படுத்தும்.

அவைகள் கட்டுக்கதையாகக்
கூட இருக்கலாம் அல்லது
புனை கதையாகக் கூட இருக்கலாம்.

அதில் சொல்லப்படும் நீதிகளை,
வாழ்க்கைத் தத்துவங்களை,
தர்மங்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

மனிதர்கள் எப்போதும் தர்மத்திலிருந்து,
தடம் புரண்டு அதர்மத்தில் தங்களை
அழித்துக் கொள்ள முற்படுகிறார்களோ
அப்போது புராணங்களில் கூறப்படும்
சாரங்களை எண்ணிப்பார்த்தால்
அதன் உள்ளார்ந்த பொருள் விளங்கும்.

ஐயப்பன் எடுத்த அவதாரம் தர்மத்தையும்,
சத்தியத்தையும் உலகில் நிலை நாட்டுவதற்குத்தான்.
நற்பண்புகளை வளர்த்துக் கொண்டவர்கள்தான்
தடைகளை உடைத்து, பிரச்சினைகளை ஊதித்தள்ளி,
சவால்களை வென்று தங்கள் வாழ்க்கையை
ஒளிமயமாக்கி கொள்ள முடியும்.

சபரி மலை நடை பயணமே வாழ்க்கைப்
பயணத்தின் தத்துவத்தைக் கொண்டிருக்கிறது.

அது சரணாகதித் தத்துவம்.
''உன்னை இறைவனிடம் முழுமையாய்
ஒப்படைத்துக் கொள். அவனை பூரனமாய் நம்பு.
உன்னைக் காப்பது அவன் பொறுப்பு.
ஐயத்தையும், அச்சத்தையும் விட்டுவிடு''
இதுதான் அந்தத் தத்துவம்.

போகிற வழியில் எத்தனையோ
கொடிய விலங்குகள் (வாழ்க்கை அவை பிரச்சினைகளாய்,
சவால்களாய் இடம் பெறும்) எதிர்ப்படலாம்.
இறைவனின் மீது நம்பிக்கை வைத்தால்
அவன் ஆபத்துகளிலிருந்தும்,
பேரபாயங்களிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவான்.

'ஐயனே, எல்லாம் உன் விருப்பம்'
என்று ஐயப்ப பக்தர்கள் முடிவை
அவனிடமே விட்டுவிட வேண்டும்.

பகவானின் வாசலை அடையும்போது
கர்மங்கள் எல்லாம் நீங்கி விடுவதாய்
ஐதீகம். அங்கே தன்னுடைய
கர்ம வினைகளற்றவனாய் மனிதன் நிற்பான்.

பக்தன் கடந்து செல்லும் பதினெட்டு
படிகளும் தத்துவார்த்தமானவை.
தேங்காய் உடைப்பது இறைவனோடு
இரண்டறக் கலத்தலைக் குறிக்கும்.

அப்போது உடல் உதறப்பட்டதாய் கருதப்படும்.
உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகள் நெருப்பில்
வீசப்படுகின்றன. அது உடல் அழிவதைக் குறிப்பதாகும்.

புனிதமான வாழ்க்கைதான் மனிதர்களைப் புனிதர்களாக்கும்.

சூரியனின் பயணப்பாதை தெற்குப் பக்கம்
திரும்பும் காலம் ஆடி மாதம்.
பொதுவாக தெற்கு என்பது எமனுக்கு
உரியது என்பார்கள்.

கால தேவனைக் கட்டுப்படுத்துவதும் ஆற்றல்,
அம்பிகைக்கு மட்டுமேஉண்டு என்கிறது புராணம்.

அதனால்தான், மார்க்கண்டேயனைக்
காப்பாவதற்காக தர்மதேவனை,
அம்பிகை தன் உடலில் அமைந்திருக்கும்
இடது பாகத்துக்கு உரிய இடக்காலால்
உதைத்தாராம் ஈசன்.

உயிர்களின் ஆரோக்யத்துக்கு காரணமானவன்
சூரியன் என்பது மெய்ஞானமும் விஞ்ஞானமும்
ஏற்றுக்கொண்ட விஷயம்.

அடுத்து, ஆடி மாதத்தில் காற்றும் மழையும் இருக்கும்.
'கால்' எனும் காற்றைக் கட்டுப்படுத்துபவள்.
காரி, மாரியாகிய மழைக்கு தெய்வம், மாரியம்மன்.

இன்னொரு முக்கிய விஷயம் ஆடி மாதத்தின்
போது ஏற்படும் பருவகால் மாறுபாட்டால்
பரவக்கூடிய நோய் கிருமிகளை கட்டுப்படுத்தும்
ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும்
இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

அதனால்தான் அம்மன் கோயில்களில்
ஆடி மாதம் பூஜைகள் அதிகம் இடம் பிடிக்கின்றன.

வழிபாட்டு முறைகளாக நம் முன்னோர்கள்
ஏற்படுத்தி வைத்தவை எல்லாமே நம்
நலத்தைக் காப்பவை.

ஆகவே நாங்களும் ஆடி மாதம்
எங்களின் நடை பயணத்தினை
தொடங்கினோம். பல ஆண்டுகளுக்கு
முன் ஒருமுறை சபரி நடை பயணம்
மேற்கொண்டுள்ளேன்.

இரண்டாம் முறையாக செல்ல நேர்ந்தது
எதிர்பாராத பயணம். சிங்கப்பூரில் நமக்கு நன்கு
அறிமுகமான மூன்று நண்பர்கள் சபரி மலை
செல்ல வேண்டும், வழிமுறைகளை
சொல்லவேண்டும் என்று கேட்டனர்.

இவர்கள் யாவரும் சிங்கப்பூரில் இருந்து
முதல் முறையாக சபரி செல்பவர்கள்.
அத்துடன் அரசாங்கத்துறையில்
வேலை செய்பவர்கள்.
ஆகையால் நீண்ட நாட்களுக்கு
விடுமுறை கிடைப்பதில் சிக்கலுண்டு.

இரண்டு வாரத்தில் போய் வரவேண்டும்
என்ற நிலை, ஆவல். தமிழ் மாதம் பிறந்த
முதல் ஐந்து நாட்கள் சபரி நடை திறக்கப்படும்.

ஆகவே ஆடி மாதத்தினை தேர்தெடுத்து
புறப்பட தீர்மானித்து, விரதமும், நோன்பும்
மேற்கொள்ளப்பட்டது.

48 நாட்கள் விரதமிருந்து சிங்கப்பூரிலிருந்து
புறப்பட்டு தென்காசி அடுத்துள்ள ஆய்க்குடியிலிருக்கும்
'மகாலிங்கமலை சென்று அடைந்தோம்.
இன்றும் சித்தர்கள் அருவுருவாக தவம்புரிந்து வருகிறார்கள்
இந்த மகாலிங்க மலையில்.

மகாலிங்க மலையிலிருந்து மேலும் சில
அன்பர்கள் சபரி மலைக்கு செல்லத்
தயார் நிலையில் இருந்தார்கள்.

அன்று மாலை சுமார் 50 முறை சபரி
சென்று வந்த அனுபவமிக்க ஒரு பெரியவர்,
குருசாமி எங்களுக்கு மாலைபோட்டு
இருமுடி கட்டி அங்கிருக்கும்
சாஸ்தாவை வணங்கி வலம் வந்தோம்.
மறுநாள் காலை 6 மணிக்கு
ஒரு சிறிய பேருந்து மூலம்
மூன்று கன்னி சாமிகள்,
மற்றும் 13 பேர்கள் ஆக
16 ஐயப்ப சாமிகள் புறப்பட்டோம்..

ஒரு பக்கம் மலைகளும் மறுபக்கம்
கடலுமாய் அமைந்தது கேரள தேசம்.
குன்றாத நீர்வளமும், நில வளமும்
கொண்ட அத்தேசத்தில் வட்ட வடிவில்
இருப்பது பந்தள நாடு.

வானுயர்ந்த மாளிகைகள்,
மணி மண்டபங்கள் செல்வச்
செழிப்புடைய பண்டக சாலைகள்
நிறைந்திருந்தன. பம்பையாறு அப்பகுதியில்
செந்நெல்லும் செங்கரும்பும் அமோகமாய்
விளையச் செய்திருந்தன.

பந்தள நாட்டுக்கு மன்னனான இராஜசேகரன்
பாண்டிய வம்சத்தை சேர்ந்தவன்.
பக்தி நெறிபூண்டொழுகிய அம்மனின்
ஆட்சியில் மக்கள் குறையின்றி வாழ்ந்து
வந்தனர். மன்னனுக்கு மட்டும் ஒரேயொரு
குறையிருந்தது.

தன் வம்சத்தை விளங்க வைக்க
ஒரு வாரிசு இல்லையே என்ற குறை.
இராஜசேகரன் மக்கட்பேறு வேண்டி
பல தான தருமங்கள் செய்தான்.
வேள்விகள் நடத்தினான்.

நாளும் இறைவனை வழிபடும் போது
அவன் நயந்து வேண்டியது பிள்ளைவரம் மட்டுமே.
கடவுள் கண் திறப்பதற்கும் காலம் கனிந்து
வரவேண்டுமல்லவா?

மன்னனுக்குப் பல கடமைகள் உண்டு.
பகை நாட்டிடமிருந்தும், பஞ்சத்திலிருந்தும்
காப்பது உட்பட. அதில் வனவிலங்குகளிடமிருந்து
குடிகளைக் காப்பதும் ஒன்று.

ஒரு சமயம் பந்தள நாட்டின் எல்லைப்
பகுதியில் காட்டு மிருகங்கள் புகுந்து
அட்டூழியம் செய்துவருவதாய் மன்னனுக்குச்
செய்தி வந்தது.

அங்குள்ள மக்களைக் காப்பதற்காக வேண்டி
மன்னன் வேட்டைக்குச் செல்ல சித்தமானான்.
வீரமுடன் விலங்குகளை வேட்டையாடிய
மன்னன், அந்திப் பொழுதில் சற்றே இளைப்பாறினான்.
சோர்வு நீங்க பம்பையாற்றில் நீராடினான்.

சிவ தியானம் செய்ய அமர்ந்தான்.
அத்தருணத்தில், எங்கோ ஒரு குழந்தையின்
அழுகிற குரல் கேட்டது.
குரல் வந்த திக்கில் பார்வையையும்
கவனத்தையும் செலுத்தினான் மன்னன்.

மனித சஞ்சாரமற்ற காட்டுக்குள்
மழலையின் அழுகையொலியா?
என்று வியப்படைந்தான்.

பரிவாரங்கள் சூழ அழுகுரல் கேட்ட
திசை நோக்கி நடந்தான். அவர்கள்
தொலைவில் ஓர் ஒளிப்பிழம்பு தெரியக்
கண்டனர். அங்கே, பம்பையாற்றின் கரையில்
குழந்தையொன்று பிரகாசத்துடன் காணப்பட்டது.
எல்லோரும் வியப்புடன் அக்குழந்தையை நோக்கினர்.

பிரகாசத்துடன் காணப்பட்ட குழந்தை
மானிடப்பிறவியாய் இருக்கமுடியாது.
தெய்வத்தின் அவதாரம் என்று எண்ணினான்.
மணிமாலையுடன் கண்டத்தை உடைய
இக்குழந்தை பிற்காலத்தில் மணிகண்டன்
என்ற திருநாமத்துடன் விளங்கியது.

இறைவன் காட்டு விப்பானே தவிர
ஊட்டுவிப்பதில்லை. ஆனால், மன்னன்
இராஜசேகரன் விஷயத்தில் அவன்
ஊட்டுவிக்கவும் செய்தான்.

குழந்தையைக்காய் தவம் கிடந்தவனுக்கு
ஓர் உன்னதக் குழந்தையை வழங்கியதோடு
அதன் அற்புத சக்தியையும் அல்லவா
முன் கூட்டியே உணர்த்தி இருக்கிறான்.

பம்பைக் கரையில் அவதரித்து
பந்தள அரண்மனையில் கால்பதித்த
மணிகண்டன் தவழ்ந்து, எழுந்து நடந்து,

அரண்மனை எங்கும் ஓடியாடி விளையாடினான்.
ஐந்து வயதானபோது முறைப்படி
கல்வி பயில குருகுலவாசத்திற்கு
அனுப்பினான் மன்னன்.

வேதங்களையும், சாஸ்திரங்களையும்,
கலைகளையும் பிழையறக் கற்றுத்
தேர்ந்த ஐயப்பன் குருகுல வாசத்தைக்
குறுகிய காலத்திலேயே முடித்து விட்டான்.

அரசமரபினர்க்குரிய போர்க் கலைகளையும்
அவ்வாறே திறம்படக் கற்றான்.
சிவசக்தி அம்சங்களை ஒருங்கே பெற்றவனுக்கு
குருவித்தை அவசியமே இல்லைதான்.

ஆனால், அவதார இயல்புடன்
பொருந்தியிருக்க வேண்டுமல்லவா.
'இவன் சாதாரண மனிதப்பிறவியல்ல' என்பதை
பயிற்றுவிக்கும் காலத்திலேயே
அறிந்துகொண்டார் குருதேவர்.

பயிற்சி முடியும்போது இவன் தெய்வத்தின்
அவதாரம் என்பதைப் பூரணமாகவே
உணர்ந்துவிட்டிருந்தார்.

நேற்று போல் இன்றோ
இன்று போல் நாளையோ இருப்பதில்லை.

மாற்றங்களைக் கொண்டு வரும் காலம்.
அதுவரை கருத்தரித்திராத அரசி
கோப்பெருந்தேவி கருவுற்றாள்.

திருவருளால் அரசி ஓர் ஆண் மகவினைப்
பெற்றெடுத்தாள். பிள்ளைக்கு
இராஜராஜன் என்று பெயரிட்டனர்.

(தொடரும்)

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை

தமிழ் எமது மொழி இன்பத்தமிழ் எங்கள் மொழி
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com
http://singaporekovilgal.blogspot.com

Monday, August 11, 2008

பொதிகை புனித யாத்திரை #4

மறுநாள் பயணம் அதிகாலை 5 மணிக்கே ஆரம்பித்து விடும்.
கருக்கலாக இருப்பதால் டார்ச் லைட் வெளிச்சத்தில்
நடைபயணம் தொடர்ந்து விடும்.

முப்பது நிமிட பயணத்தில் கன்னிகட்டி
சிற்றாறு குறுக்கிடும். அங்கு காலைக் கடனை
முடித்துக்கொண்டு, நீண்டு வானளாவிய மரங்களை
இரசித்துக்கொண்டும், சந்தனமரங்களின் சுகந்தத்தை சுமந்து
கொண்டும்,
''குறுமுனிக்கு அரோகரா,
கும்பமுனிக்குஅரோகரா''
என்று பாடிக்கொண்டும் செல்வதால்
அகஸ்தியரின் திருவருள் கிட்டுவதுடன்,
மனமும் உடலும் உற்சாகம் பெறுகிறது.

அத்துடன் வனவிலங்களையும் விரட்டவும் உதவுகிறது.
சுமார் எட்டு மணிபோல் பேயாறு வந்தடையலாம்.
கோடைக்காலங்களிலும் இந்த ஆற்றில் நீர் நிறைந்தே ஓடும்.

இந்த ஆற்றில் குளித்துவிட்டு காலை உணவினை
முடித்து விட்டு பயணத்தைத் தொடர வேண்டும்.

90நிமிடநடைப்பயணத்திற்குபின் கல்லாறு
என்ற இடத்தை அடையலாம். இங்கு சிறிது நேர ஓய்வுக்குப்பின், அடுத்தஇலக்கு பயண ஆரம்பமாகும்.

அடுதத இலக்கு சங்கு மித்திரை. கல்லாற்றிலிருந்து
சங்குமித்திரை அடையும் வரை மூங்கில் காடுகள்.

இங்கு கல்தாமரை என்னும் அபூர்வ மூலிகைகளை
காணலாம். உயரமான பகுதியால் நடையில் தளிர்வும்
சோர்வும் ஏற்படும்.

90 நிமிட நடைக்குப் பின் சங்கு மித்திரை அடையலாம்.
சசங்கு மித்திரை கேரளாவின் எல்லை ஆரம்பமாகிறது. மலையாளிகள் பொங்கலப்பாறை என்று அழைப்பார்கள்.

இதன் பொருள் சமையல் செய்யுமிடம் என்பதாகும்.
இங்கிருந்து கேரளாக்குச் செல்லலாம்.
போனக்காடு நென்மன்காடு சென்று திருவனந்தப்புரத்தை
அடையலாம்.

சிறிய ஓய்வு, உண்வுக்குப்பின் சற்றே களைப்பை போக்கிக்கொண்டு பயணம்தொடரும். மீண்டும் கடுமையான பயண மலை ஏற்றம்.

வெறும் காலுடன்தான் செல்லமுடியும். அபாயகரமான
பாறைகளைக் கவனமாக கடந்து செல்லவேண்டும்.
இருபுறமும் படுபாதாளம். காற்று பலமாக வீசுவதால்
மெதுவாக ஊர்ந்தும், குனிந்தும் நடந்து செல்ல வேண்டும்.

இப்படி மெல்ல நடந்து 6125 அடி கொண்ட பொதிகை மலை உச்சிஅடையவேண்டும். பயணத்தின் போது நாகபொதிகை,
ஐந்து தலைப்பொதிகை மற்றும் இதரபொதிகை மலையின்
முழு தரிசனம் கிடைக்கும்.

இந்த இடம் கேரளா அரசுக்கு சொந்தமானது.
இங்குதான் அகஸ்தியர் சிலைகம்பீரமாக இருக்கிறது.
சிலையைக் கண்ட பக்தர் ஓடிச் சென்று அகஸ்தியர் சிலை வணங்கியும், கண்ணீர் மல்கியும், கீழே வீழ்ந்தும் புரள்வார்கள்.

நினைத்த பொழுது சென்று பார்க்க இயலாத
இடத்திலிருக்கும் இவ்விடம் ஆண்டுக்கு ஒருமுறைதான் சென்று காணமுடியும், வழிபடமுடியும்.

தற்போதுள்ள அகத்தியர் சிலை கேரள அரசுக்கு சொந்தமானது.
கேரள யாத்திரிகர்கள் சிவராத்திரிக்கு வந்து வணங்கி செல்வதுண்டு.

அகஸ்தியர் சிலைக்குப் பட்டு ஆடைகள் அணிவித்து,
வாசனை திரவியங்கள், பால்அபிஷேகம்,
தீபார்த்தினை காட்டி இரண்டு மணி நேரம் அகத்தியர் வழிபாடும், பன்னிருதிருமுறை பதிக பாடலையும் பாடியும் பிரார்த்தினைகளும் நடைபெறும்.

வானிலை ஒரு பொழுதுக்கு மறு பொழுது மாறும்.
மேகங்கள் கூடும், மழை பெய்யும். குளிர்வாட்டும்,
பின்னர் நீங்கும். மீண்டும் மேகம் கூடும்,
மழை பெய்யும் இப்படி மாறி மாறி நிகழும்.
பொதிகை மலையில் எவ்வளவு மழையில் நனைந்தாலும்,
கடுங்குளிரில் வாடினாலும் எவர் உடம்பும், உடல் நலமும் பாதிக்கப்படுவதில்லை.

இதற்கு அகத்தியர் திருவருளே என்று
இங்கு வரும் சாதுக்கள் கூறுகிறார்கள்.
பயணத்தின் போது கோடை மழை
கண்டிப்பாகப் பெய்யும்.

மழை இல்லாத பயணம் இல்லை என்றுகூறலாம.
பிரயாணத்தில் அட்டையின் பாதிப்பு தவிர்க்க இயலாது.

நம்மை அறியாது நம் இரத்ததைஉறிஞ்சிவிடும்.
இந்த அட்டைகள் நம்மைப் பற்றாது இருக்க காலில்
வேப்பெண்ணை, புகையிலை போன்றவற்றைத்
தடவிக்கொண்டால் சிறிது பாதுகாப்பு அளிக்கும்.

சிறந்தவைத்தியம் உப்பு. நீரில் கரைத்த உப்பை தடவினால்
உடன் பயன் தரும். [சமீப கால விஞ்ஞானம் இந்த அட்டை கடித்தால் அதனால் பல நோய் நீங்குகிறது என்கிறது.
சில நாடுகளில் இந்த அட்டை வைத்தியம் நடக்கிறது]

பொதிகை மலை செல்ல இரண்டு நாட்களாகும்.
பொதிகையிலிருந்து திரும்ப ஒரு நாள்போதும்.
காலை ஆறு மணிக்கு புறப்பட்டால் மாலை
காரையார் வந்து விடலாம்.

குறுமுனி அகஸ்தியார் அடியார்களுடன்
என்றும் இருக்கிறார் மனத்தளவில்.
"என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து முன்னம் நீபுரி
நல்வினைப் பயனிடை முழுமணித்
தரளங்கள் மன்னு காவிரி சூழ்
திருவலஞ்சுழி வாணனை வாயாரப்பன்னி
ஆதரித்து ஏத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே."

-திருஞானசம்பந்த நாயனார்-- நிறைவு ---

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
.......................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

பொதிகை புனித யாத்திரை #3

பக்தர்கள் கல்விளக்கில் ஏற்றி வைக்கும் தீபம்,
அசையாமல் சுடர்விட்டு எரியும்.

முனிவரை தரிசித்து விட்டு இறங்கினால்,
காற்று ஆளைத் தூக்குவது போல அடிக்கும்.
சில இடங்களில் தவழ்ந்தபடிதான் இறங்க வேண்டும்.

அகத்திய முனிவரை தரிசித்து வரும் அனைவரும்
அங்கே அனுபவித்தாக ஒருமித்த குரலுடன்
சொல்வது புத்துணர்வு. அகநிறைவு.

அந்த சித்த புருஷனை தரிசித்தால்,
மனதில் மட்டுமல்ல வாழ்விலும் புத்துணர்வு பிறக்கும்.

அகஸ்தியர் கூடத்திற்கு நாம் நினைத்த
மாத்திரம் சென்று விட முடியாது.

சனவரி,பிப்ரவரி,மார்ச்,ஏப்ரல் மாதங்களில்
மட்டுமே செல்லலாம்.

அதற்கு கேரள வனத்துறைபினரின் முன்
அனுமதி பெற வேண்டும். ஒருமுறை சென்று வர
குறைந்தது மூன்று தினங்கள் தேவைப்படும்.

திருவனந்த புரத்தில் உள்ள வன வகுப்பு அலுவலகத்தில்
இருந்து இங்கு செல்வதற்கான அனுமதி சீட்டு
வழங்கப்படுகிறது.

பாண்டி பதின்நான்கு என்று அழைக்கப்படும்
பாடல் பெற்றத் தலங்களுள் திருக்குற்றாலமும் ஒன்று.
பொதிகைமலையுடன் சார்ந்த மலை, மூர்த்தி, தலம், தீர்த்தம்
மூன்றும் சிறப்புடையதாகும்.

பொதிகைமலைக்கு செல்லும் வழியில்
அகத்திய முனிவர் இங்கு வந்தார்.

*பாபநாசம் *

அடுத்துள்ள விக்கரம சிங்கபுரம் சேர்ந்த செல்லையா சிவபவனன்
என்ற இதனை ஒரு சேவையாக செய்து வருகிறார்.
இவர்கள் முறையாக அகஸ்தியரை
வணங்கி,பூஜைகள் செய்து அன்பர்களை அழைத்துசெல்கிறார்கள்.

திருநெல்வேலியிருந்து சுமார் 85 கி.மீ. தொலைவிலுள்ளது பொதிகை மலை.
உயரம் 6200 அடி.தமிழுக்கு இலக்கணம் வகுத்த தெய்வச்சித்தர் அகஸ்தியர்
இன்றும் வாழ்ந்து கொண்டுடிருப்பதாக ஐதீகம்.

பொதிகை மலை ஏக பொதிகை என்றும் கூறுவர்.
சிவபெருமான் பார்வதி திருமண கோலத்தைக்
காண வந்த அகஸ்தியர், சிவபெருமானின் உத்தரவு
பேரில் தென்பகுதியான பொதிகைக்கு
வந்ததால் இந்தமலை அகஸ்தியர் மலை
என்றும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் இப்புனித பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

காரையார் அணை சென்று பின்னர் இந்திரப் படகில்
அக்கரை செல்ல வேண்டும். பின்னர் நடை பயணம் ஆரம்பமாகிறது.
நாம் நடக்கும் ஒவ்வொரு அடியும் பொதிகைச் சிகரத்தை
நோக்கியே செல்கிறது.

பொதிகை மலை உயரம் 6125 அடியாகும்.
வழியில் துலுக்கமொட்டை என்னும் இருக்கிறது.

இதன் உயரம் 1867 அடி. இம்மலையைக் கடந்துதான் செல்ல
வேண்டும்.சிரமான நடைப்பயண என்பதால் களைப்படைந்து
விடும்.முதல் நாள் நடை யாத்திரையில் இதுவே மிகவும் சிரமான பகுதியாகும்.

சுமார் ஒரு மணி நேர நடைக்கு பயணத்திற்கு பின்
உள்ளாறு என்ற ஆறு குறுக்கிடும். தெளிந்த நீரோடை.
மதிய உணவுக்கு பிறகு ஓய்வு . சுமார் ஒரு மணி நேர
ஓய்வுக்குப்பின்,மீண்டும் நடைப்பயணம் ஆரம்பமாகும்.

ஒரு மணி நேர பிரயாணத்திற்குப் பின்
கன்னிகட்டி என்ற பகுதியை அடைந்து விடலாம்.
இங்கு ஆங்கிலயர்களால் கட்டப்பட்ட
வன இலாகா பங்களா உள்ளது. இன்று
நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

பங்களாவைச்சுற்றி அகழிகள் தோண்டப்பட்டு,
பங்களா செல்வதற்கு ஒரு நபர்
செல்லக்கூடிய பலகை பாதை இருக்கிறது.

இது யானைகள் வராதபடி செய்துள்ள ஏற்பாடு.

முதல் பயணத்தின் இறுதியில் இந்த பங்களாவில்
தங்கிச் செல்லாம். இரவில் விலங்குகளின்
நடமாட்டமும், அதன் சத்தங்களை கேட்கலாம்.
நேரம் செல்ல குளிர் அதிகமாக இருக்கும்.

--பயணம் தொடரும்-

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை

Saturday, August 02, 2008

பொதிகை புனித யாத்திரை-2

இவை தவிர, கருமேனியாறு, நம்பியாறு,
தாமரையாறு, கோம்பையாறு, கோடையாறு,
வைப்பாறு, வாழைமலையாறு, தாழையூற்றாறு,
வடுகபட்டியாறு, அருச்சுனன் ஆறு, கோட்டைமலையாறு,
நிசேப நதி, காக்கா நதி, பாலையாறு போன்ற
பல சிற்றாறுகளும் கொண்டே நெல்லைச் சீமை.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 450 கோயில்கள்
உள்ளன.பெரியபெரிய கோயில்கள், வானுயரும்
இராஜகோபுரங்கள், பிரம்மாண்டமான் மண்டபங்கள்,
கண்கவர் சிற்பங்கள்,சுவைமிக்க தலவரலாறுகள்,
புனித தீர்த்தங்கள், தேர் திருவிழாக்கள் எல்லாம் உண்டு.


ஆயிரம் திருநாமங்கள் கொண்டு ஆராதிக்கப்படும்
ஆதி நாயகனான் சிவபெருமான், சிவலிங்த் திருமேனியாக
அருள்பாலிக்கிறார்.


''தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த்
தருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்
நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது
போற்றி மகிழ திருமூல லிங்கம்''

-என்கிறது திருநெல்வேலித் தல புராணம்.


வரலாற்று ஆய்வாளர்கள் கண்டு பிடிக்க முடியாதபடி
பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிற்பவரே மகாலிங்கர்.
இந்த மூல மகாலிங்கத்தைத் தொழுவோர் மற்ற எல்லா
சிவலிங்கத் திருமேனிகளையும் தொழுத பலனைப் பெறுவர்.

ஆதி பிரளய காலத்தில், வேதங்கள் எல்லாம்
பூஜித்த வேத நாயகரே அவர்.
'ஆதிலிங்கம், திரிகண்டலிங்கம்,
தருமலிங்கம், கெளரிலிங்கம், நிர்குணலிங்கம்,
சகுண கற்பக மகாலிங்கம், கெளரி கல்யாண லிங்கம்,
வளர்ந்த மகாலிங்கம், மூல மகாலிங்கம்
என்று திருநாமங்களைக் கொண்டு திகழ்கிறார்.

குற்றாலம் ஐந்தாயிரம் அடி உயரம் கொண்ட
மலையின் அடிவார்த்தில், குற்றால அருவிக்கு நேராக,
சங்கு வடிவனாக அமைந்திட்ட கோயில்.

ஆடவல்லானின் ஐந்து சபைகளில் இது 'சித்திர சபை.

''கிளைகளாய்க் கிளைத்த பல கொப்பு எலாம் சதுர்வேதம்,
கிளைகள் ஈன்ற களை எலாம் சிவலிங்கம்
கனி எலாம் சிவலிங்கம், வித்து எலாம் சிவலிங்கம்
சொரூபமாக விளையும் ஒரு குறும்பலாவின்
முளைத்து எழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே''

கோயில் வாசலை ஒரு சிறிய கோபுரம் அழகு செய்கிறது.
உள்ளே திரிகூட மண்டபம் அடுத்து நமஸ்கார மண்டபம்,
மணி மண்டபம் எல்லாம் உண்டு.

அகத்திய முனிவர்,ஈசனின் கட்டளையை ஏற்று,
தென்புலத்திற்கு வருகிறார். இங்குள்ள குற்றாலநாதர்
கோயில் வைணவ ஆலயமாக இருந்திருக்கிறது.
சிவக்கோலத்தில் இருந்த அவரை உள்ளே அனுமதிக்கவில்லை
அர்ச்சகர்.

மனமுடைந்த குறுமுனி, இலஞ்சிக் குமரனை தொழுந்தார்.
குமரன் காட்டிய வழியில் மீண்டும் வருகிறார் குற்றாலத்திற்கு.
உடல் முழுதும் 'திருமண்' தரித்து வைணவ அடியாராக,
உள்ளே சென்று 'ஆத்மார்த்த பூஜை' செய்வதாகக் கூறி,
எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு,
கதவை சார்த்திக் கொண்டார்.

--------பயணம் தொடரும்---------
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

Wednesday, July 16, 2008

பொதிகை புனித யாத்திரை #1

தென் காஞ்சி கோட்டம் என அழைக்கப்படும்
'திககெல்லாம் புகழும் திருநெல்வேலி' எனும்
திருத்தலத்தினை மையமாகக் கொண்ட
தென் பாண்டிச்சீமை இது.

இம்மாவட்டத்தின் மக்களுக்கு பல பெருமை உண்டு.
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை
தமிழே ஓடுகிறது என்பர்.

தஞ்சை மாவட்டத்தாருக்கு இசை எப்படி உயிரோ,
அதுபோல நெல்லைச் சீமைக்காரர்களக்கு இலக்கியம்.
ரசிகமணி டி.கே.சி.யின் 'கம்பர் தரும் காட்சி'
அப்படியே மனக்கண்முன் வருகிறது.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை 'மனோன்மணீயம்'
என்ற ஒப்பற்ற நாடக நூலை ஆக்கினார்.
அதில் சீவகபாண்டியன், மதுரையின் நீங்கி
திருநெல்வேலியை தலை நகராக்கிச் சில காலம்
அரசாண்டு வந்ததாகக் கூறியுள்ளார்கள்.

நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டபோது,
நெல்லை மாவட்டத்தினர் பலர் திசைக் காவலர்களாக
அமர்த்தப்பட்டனர். ஆயுதம் தாங்கிய படையை
உடையவர்களானதால் 'பாளையக்கார்கள்' என்றும்
அழைக்கப்பட்டனர்.

வடகரை, ஆவுடையாள்புரம், ஊத்துமலை,
சிவகிரி, சிங்கம்பட்டி, அளகாபுரி, ஊர்க்காடு,
சுரண்டை, கடம்பூர், இளவரசனேந்தல்,மணியாச்சி,
பாஞ்சாலங்குறிச்சி முதலியன அத்தகைய பாளையப்Àட்டுகள் ஆகும்.

அப்படி வந்ததே பாளையங்கோட்டையும்.
நெல்லை மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை வடமேற்கு எல்லையில் துவங்கி,
நேர்தெற்காக தென்காசிக்கருகே ஒரு சிறு வளைவாகித்
தண்பொருளைப் பள்ளத்தாக்குடன் கூடிய பாவநாசம்
வரை செல்கிறது. பின் தென்கிழக்காகத் திரும்புகிறது.
மிகத் தொலைவிலுள்ள எந்த சமவெளியிலிருந்து
பார்த்தாலும் இந்த மலைத் தொடரில பல முடிகளைக் காணலாம்.

சுமார் ஐயாயிரம் அடி உயரமுள்ள, இருபதுமுடிகள்
இந்த எல்லையில் உள்ள சிவகிரியில் துவங்கி,
கள்ளக்கடை, மொட்டை, கோட்டைமலை, குளிராட்டி,
குற்றாலத்திற்கு அருகில் உள்ள பஞ்சம்தாங்கி,
அம்பாசமுத்திர எல்லையில் மத்தானம்,
பாறை பாவநாசம் அருகில் அகத்தியர் மலை,
அதற்குத் தெற்கில் ஐந்து தலைகள் கொண்ட,
ஐந்தலைப்பொதிகை, திருக்குறுங் குடியையொட்டி மகேந்திரகிரி,
பணகுடி கணவாய்க்குத் தென்கிழக்கே 'ஆரல்-ஆம்-பொழில்'
இன்று ஆரல்வாய் மொழி என அழைக்கபப்டும் எல்லை வரை.

நெல்லை மாவட்டத்தின் பேராறு தான் 'தாமிரபரணி'
என அழைக்கப்படும் 'தன்பொருணை' ஆறு.

பொதிகை முழுவதும் மலையில் தோன்றி மாவட்டம்
முழுவதும் வளப்படுத்துகிறது. தன்பொருணையுடன் சேரும் ஆறுகள்
எண்ணற்றவை. பாம்பாறு காரியாறு, ஐந்தும் மலையில் தோன்றி மலை மேலேயே பொருணையோடு சேருபவை.

சிங்கம்பட்டிக்கு அருகில் மணிமுத்தாறும்,
செங்கல் தேரிச் சோலையில் தோன்றும் வரட்டாறும்
கூசன்குழி ஆறும் சிற்றாறுகளாகும்.
கடையம் அருகில் கீழைச்சரிவில் தோன்றுவது,
சம்புநதி, கடையத்திற்கு தெற்கே
ஓடுவது ராமநதி.

இவை இரண்டும் சேர்ந்து கருணை ரவண
சமுத்திரம் அருகில் சேர்கிறது. இரண்டும் சேர்ந்து
கருணை ஆற்றோடு, வராகநதி சேருவது
திருப்புடை மருதூரில்.

களக்காட்டு மலையான வெள்ளிமலையில்
தோன்றுவது 'பச்சையாறு', 'தருவை'
என்ற இடத்தில் பேராற்றில் கலக்கிறது.

சீவலப்பேரில் வந்து கூடுவது சிற்றாறு.
இது குற்றால மலையாகிய திரிகூட மலையில்
தோன்றி குற்றாலம், தென்காசி, கங்கை கொண்டான் வழியே
அறுபது கி.மீ. ஓடிப் பாய்கிறது.

பண்புளி மலையில் தோன்றும் அநுமநதியும்,
சொக்கம்பட்டி மலையில் தோன்றும் கருப்பாறும்
வீரகேரளம்தூர் அருகில் சிற்றாறில் சேர்கின்றன.

மத்தளம் பாறையிலிருந்து வரும்அமுதக்கண்ணியாறும்,
ஐந்தருவியாறும் சிற்றாரோடு சேர்கிறது.
சிந்தாமணிக்கு அருகில் தோன்றும் உப்போடை,
சீவலப்பேரி அருகில் சிற்றாறில் கூடுகிறது.

உப்போடை, சிற்றாறு, பேராறு மூன்றும்
கூடும் இடமே முக்கூடல். தென்காசிக்கு மேற்கே
ஒரு முக்கூடலும், திருப்புடைமருதூர்
அருகில் ஒரு முக்கூடலும் உண்டு.

தண்பொருணையாறு அம்பாசமுத்திரம் சேரன் மகாதேவி,
திருநெல்வேலி வழியாகப் பாய்ந்து கொற்கை
அருகில் கடலில் சேருகிறது.

-----------பயணம் தொடரும் ----------

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark

Sunday, July 13, 2008

சதுரகிரி யாத்திரை #8 (நிறைவு)








நம்மைச் சுற்றிய உலகம் நம் கண்ணில் பிரதானமாக விழுந்தும் விழாமலும் போன்று நூற்றுக்கணக்கான உயிர் இயக்கங்கள் கொண்டது. இதில் பெரும் பகுதி நாம் அறிந்ததே இல்லை. அதிலும் மலை வாழ்விடங்களுக்குச் செல்லும்போது அங்கே நாம் காண நினைப்பது யாவும் புல்வெளியும் நீர்நிலையும்உணவங்களும்தான்.
மாறாக மலை வாழ்விடங்களில்தான் முன் அறிந்திராத
அதிகமான பூக்கள், செடிகள், மூலிகைகள், பறவைகள்
மற்றும் சிறு உயிர்கள் அதிகமிருக்கின்றன.
அவற்றை நாம் காண அக்கறை கொள்வதே இல்லை.
ரோஜாவிற்கு தரும் முக்கியத்துவத்தை வேப்பம்பூவுக்கு
தருவதில்லை. ஆனால், ரோஜா அளவிற்கு வேப்பம்பூவும்
தனித்துவமானது. மலை கற்றுக் கொடுப்பது எவ்வளவோ இருக்கிறது.
ஆனால், நாம் கற்றுக் கொள்வது மிக குறைவானதே.
காடுகளில் நமக்கு பெயர் தெரியாத மரங்களும்,
செடிகளும் இருக்கிறது. இது நமது காடுகளைப் பற்றிய
அறிவின்மைதான் காட்டுகிறது. பூக்களை புகைப்படம்
எடுப்பதில் உள்ள ஆர்வம் ''அது என்ன பூ'' என்று
அறிந்து கொள்வதில் நமக்கு ஆர்வம், நாட்டமில்லை.
காட்டில் ஏராளமான பூக்கள், மருத்துவ செடிகள்,
மூலிகை இருக்கிறது. காலில் மிதிப்பட்டு நசுங்கும்
மூலிகை எத்தனையே?எங்களின் சதுரகிரி
மலை பயணத்தின் போது உடன் வந்த அன்பர் சிவா
ஒரு இடத்தில் நின்று பாதையோரம் இருந்த ஒரு
செடியில் மிளகுபோல் கொத்து கொத்தாய்க் காய்ந்திருந்த
பழத்தினை பறித்து சாப்பிடும்படி கூறினார்.
அதன் மருத்துவ குணத்தினை கூறிய போது
வியந்தோம். இரத்த நாளங்களில் ஏற்படும்
அடைப்புகளை இந்த பிச்சிபழம் நீக்கும் என்றார்.
முறிந்த எலும்பை ஒட்டவைக்கும் மூலிகை
இலைப்பற்றி கூறும்போது மூக்கில் விரலை
வைத்து வியக்கவேண்டியுள்ளது.
ஒரு பச்சிலை காட்டி, இது புண் அல்லது
காயங்களுக்கு உகந்த பச்சிலைஎன்றார்.
உடனே ரணம் காயும் என்றார்.
ஆனால், பச்சிலையை பார்த்து உபயோக்கி வேண்டும்.
பச்சிலையின் மேல்பாகத்தைக் காயத்தில், புண்ணில்,
ரணத்தில் வைத்து கட்டவேண்டும்.
தவறாக தலை கீழாக வைத்துக் கட்டினால் காயம்,
புண் மேசமாகி பெரிதாகி விடும்; ரணமாகிவிடும்.
மலைவாசி காரணமில்லாமல் எந்தச் செடிகளையும்,
பூக்களையும் பறித்து விரயம் செய்வதில்லை.
அந்தச் செடிகளை, பூக்களை அறிந்திருக்கிறான்.
அதன் மேன்மையும் மருத்துவமும் அவனுக்குப்
புரிந்திருக்கிறது. நாம் பூக்களை வெறும் வணிகமாகவும்
அழகியல் பொருளாகவும் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறோம்.
வாகன இரைச்சலாலும் நெருக்கடியான வாழ்வுச்
சுமைகளாலும் நகரில் இயற்கையான சப்தங்களை,
சுகந்தத்தை, நெருக்கத்தை இழந்துவிட்டோம்.
காட்டை அறிந்து கொள்ள பயணிக்கும் போது
கண்ணையும் காதையும் மனதையும் திறந்து
வைத்திருக்கவேண்டும்.
காடு ஒவ்வொரு நிமிடமும் கற்றுத் தருகிறது.
நேற்றுப் பார்த்த சூரியன், மேகம், நேற்றுப் பார்த்த
குளிர் இன்றில்லை.
ஒவ்வொரு நிமிடமும் காடு மாறிக்கொண்டே இருக்கிறது.
அதை உணர்ந்து கொள்வதும் நம் கையில்இருக்கிறது.
சதுரகிரிக்கு ஒரு டூர் போய் வாருங்கள்.
தக்க ஏற்பாடுகளை முன்னமே செய்து கொள்ளுங்கள்.
விஷயமறிந்த அன்பர்களின்/தெரிந்தவர்களின் ஆலோசனை நாடி,
அறிந்து பயணம் மேற்கொள்ளவும்.
நல்ல, சுகந்த அனுவங்களைப் பெறுங்கள்.
''நம்மோடு பயணித்தமைக்கு நன்றிங்க''.
நிறைவு.
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

Saturday, July 12, 2008

சதுரகிரி யாத்திரை #7

நாங்கள் சென்ற நேரம் கத்திரி வெயில் காலம்.
ஆகையால் கூட்டம் அதிகமில்லை.
ஆகையால் சற்று தாராளமாக இறங்கினோம்.
வேதங்கள் போற்றும் சிவமூர்த்தி இறைவன் சுந்தரலிங்கம்,
மகாலிங்கம், இராசலிங்கம், சிந்தனலிங்கம் என்னும்
நான்கு திருமேனிகளைக் கொண்டு இச்சதுரகிரி மலையில் எழுந்தருளியிருக்கிறார்.

பொதிகை மலையிலிருந்து மூலிகை
வளம் காண வந்த அகத்தியரால்
பிரதிஷ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்டு,
தமது திருமணக் காட்சியை அவருக்குத்
தந்தருளியவர் சுந்தரமகாலிங்கர்.

உமையொரு பாகராக அர்த்த நாரீஸ்வரர்
என்னும் பெயரில் எழுந்தருளும்
பொருட்டு உமையவளால் சந்தனமரத்தடியில்
பிரதிஷ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்டிருக்கும்
சந்தன மகாலிங்கர். பச்சைமால் என்னும்
ஆயர்குல முதல்வனுக்காகக் காட்சி தந்து
லிங்கவடிவாய் எழுந்தருயிருப்பவர் மகாலிங்கர்.

மகாலிங்கமும், இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கங்களாகும்.
ஆனந்த சுந்தரம் என்னும் வணிகனுக்கும்
அவனது துணைவி ஆண்டாள் அம்மாளுக்கும்
சங்கரநாராயணராகக் காட்சி தந்து எழுந்தருளும்
பொருட்டு அருள் வடிவாய் விளங்கும் மூர்த்தி
இரட்டை லிங்கர்.

மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக
வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில்
வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும்,
ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும்,
மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும்
இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும்
காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள்
தீர்கின்றன.

கடந்த எனது சதுரகிரி பயண குறிப்பில் நானும் முருகேஷன் சிவாவும் கடைசியாக வந்தாக குறித்து இருந்தேன்.
எங்களின்உரையாடலில் சித்தர்கள் மட்டுமல்ல,
மூலிகை பற்றியும் இருந்தது. பல அற்புத மூலிகைகளில்
முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலைப்பற்றியும்
கூறினார்.

முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி,
இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால்
அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும் என்பதை விளக்கினார்.
சதுரகிரி மலையும் இதற்கு விதிவிலக்கன்று.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும்,
சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள்,
மூலிகைகள், இலைகள் இம்மலையில்மேல் உள்ளன.
இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற
அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று
குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு.
மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின்
மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர்
தேங்கியசுனைகள் இருக்கிறது.

இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்'
என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல்
காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது.
இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.

விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை
மருத்தாகப் பயன்படுத்தவேண்டும்.
மலைமீது போக சில வரைமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்.

சேங் கொட்டை, தில்லை, தும்புலா போன்ற மருத்துவ
குணம் கொண்ட மரங்களில் பூ பூக்கும் காலங்களில்போகக்கூடாது.
காரணம், இப்பூக்கள் மிகவும் வீரியமுள்ள நச்சுத்தன்மை கொண்டவை என்பதால், அவற்றின் மேல்பட்டுவரும் காற்றைச் சுவாசிப்பதால் மயக்கம் உண்டாகலாம்.

சில, பல சமய்ங்களில் உயிருக்கே அது ஆபத்தாக முடியலாம்.
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும்.
அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும்.

விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும்
அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன்
கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும்.
இடையில் மழை, காற்றினால் மரத்தை
விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல்
தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

தமிழ்நாட்டில் பல போலி சாமியார்கள்
பெண்களை மிகவும் சுலபமாக ஏமாற்றி
வசியம் செய்து அவர்களை வசப்படுத்திக்
கொள்வதை தினம் தினம் கேள்விப்பட்டு
இருப்பீர்கள்.

இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து
எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும்
மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை
விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது
ஆட்கள் போர் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும்.

அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு.
இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும்.
வெட்டினால் பால் கொட்டும்.

நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின்
பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

அன்பொடு
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

Thursday, July 10, 2008

சதுரகிரி யாத்திரை #6

சுந்தரமாக லிங்க, மகா லிங்க மலையில் காலை
பத்து மணிக்கும், மாலை நான்கு மணி, மற்றும் ஆறு மணிக்கு
பூஜைகள் நடைபெறுகிறது.

மகாலிங்க மலை ஆலயத்தில்
மூலஸ்தானம் சுயம்புலிங்கம்.

லிங்கம் சற்று சாய்ந்தநிலையில் இருப்பதைக் காணலாம்.
இது குறித்த விபரம் கேட்டபோது, அறிந்த கதையைத்தான் சொல்லப்பட்டது.

புற்றின் மீது பசு பால் சுரந்த செய்தி.
புற்றின் மீது பால் சுரந்த போது பசுவை அடித்து இழுத்த போது
அதன் கால் சிவ லிங்கத்தின் பட்டு சுயம்பு லிங்கம் சற்று சரிந்ததுடன் லிங்கத்திலிருந்து இரத்தம் பீறியிட்டு வந்துள்ளது.

அபிஷேகத்தின் போது இந்த வடுவினை
(பசுவின் குளம்பு) தெரிகிறது. நிறைய பலாமரங்கள்,
மாமரங்களை கோவிலைச் சுற்றி இருப்பதைக் காணலாம்.

பலாமரங்களில் நிறைய பலாக்கள், பழுத்த
பலாப்பழங்கள் இருக்கின்றன. மரநிழலின் கீழ் அமர்ந்து
அண்ணாந்து பார்த்து இரசித்த போது
பாரதிதாசனின் ''கோரிக்கையற்று கிடக்குதண்ணே
வேரில் பழுத்த பலா'' என்ற வரிகள்தான்
நினைவுக்கு வந்தது.

*சிவ சித்தர் குடிகொண்டிருக்கும் புண்ணிய
கங்கை ஊற்றுக் கிணறு* புனித கங்கை ஊற்று.
இந்த ஊற்றில் இருந்து காலங்காலமாக தீர்த்தம்
எடுத்து எல்லாம் வல்ல, சித்தர்களுக்கு சித்தன்,
எம்பிரான் சுந்தர மகாலிங்கத்திற்கும்,
சுந்தர மூர்த்திக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த புண்ணிய ஊற்றில் சிவனும், சித்தர்களும்
குடிகொண்டு இருப்பதால் இந்தநீர் மருத்துவ குணமும்,
புனிதத் தன்மையும், மகத்துவமும் கொண்டது.

இந்த நீரைப் பருகுவதால் உடல் பிணியும்,
மன நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.
இந்த நீரை வீடு, தொழில் நடைபெறும் இடங்களில்
தெளிப்பதால் எல்லா தோஷங்களும் தீரும்.
இந்த புண்ணிய நீரைஎல்லோரும் பருகி உடல்,
மன ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஊற்றை ஆழப்படுத்தி,
செம்மைப்படுத்தி நீரை நிலைத் தொட்டியில்
தேக்கி மலை முழுவதும் குழாய் மூலமாக
எல்லோருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காலை 10.45 புறப்பட்ட நாங்கள், மாலை 4.15 தான்
மலையை அடைந்தோம். ஏறக்குறைய ஐந்துமணி
நேரப்பயணம். ஒரு மணி நேரத்தில் ஏறி வரும்
அன்பர்களும் உண்டு.

அன்றாடும் செல்லும் அன்பர்கள்,
சுமை தூக்கும் மலைவாசிகள் ஒரு மணி
நேரத்தில் ஏறிவிடுவார்களாம்.

நண்பர் திரு.தணுஷ்கோடி இரவு உணவுக்கு
மடத்தில் ஏற்பாடு செய்து இருந்ததால்
மடத்தில் அருமையான இரவு உணவு
படைத்தார்கள். காலத்தால் செய்த உதவி
ஞாலத்திலும் மானப்பெரிது என்பார்கள்.

உண்மைதான். இரண்டு பெரியல், சாம்பார்,
இரசம் பெரிய விருந்துக்கு சமம்.
நாங்கள் அன்றிரவு தங்கி மடத்தில் தங்கினோம்.
உடல் களைப்பு, அசதி.

சாதாரண தரையில் படுத்த ஞாபகம்.
மற்றவைதெரியாது அதிகாலை வரை.
உறங்குவது போலும் சாக்காடு,
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
அனுபவ உண்மை. மறுநாள் காலை பூஜையில்
கலந்து கொண்டு, மதிய உணவையும்
முடித்துக்கொண்டு சுமார்பதினொரு
மணிபோல் இறங்கத் தொடங்கினோம்.

ஏறுவதில் ஒரு வகை சிரமம் இருந்தது போல்
இறங்குவதிலும், வேறு வகை சிரமம் இருந்தது.
FallingForce எனப்படும் கீழ் நோக்கி தள்ளப்படும்
சிரமம் இருந்தது. ஆகவே, கையில் ஒரு கோலுடன்
ஊன்றிய வண்ணம் இறங்கினோம்.

ஏறும் போது சுமார் ஐந்து மணி நேரமாகியது,
இறங்கும் போது சுமார் 3 மணிநேரமாகியது.
அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷ காலங்களில்
அதிகமான பக்தர்கள் கூட்டம் இருக்கும்
என்கிறார்கள். நடைப்பாதை நிறைந்து இருக்கும்.
மலை மேலேறும் பக்தர்கள், கீழிருக்கும் பக்தர்கள்
என மலையே அதிரும் என்கிறார்கள் உடன் வந்த அன்பர்கள்.
நாங்கள் சென்ற நேரம் கத்திரி வெயில் காலம்.
ஆகையால் கூட்டம் அதிகமில்லை.
ஆகையால் சற்று சாவகாசமாக - தாராளமாக இறங்கினோம்.--

அன்பொடு,
கிருஷ்ணன்
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

Monday, July 07, 2008

சதுரகிரி யாத்திரை #5


கருப்பண்ண சாமி சன்னதிக்கு அடுத்து ஒரு மரத்தடியில் வன பேச்சியம்மன் அம்மன். அதனைத் தொடர்ந்து வரும் ஆலயம் *ஆசீர்வாத விநாயகர்.*


இங்கு நாங்கள் கொண்டு சென்ற இளநீர் மற்றும் அபிஷேகப் பொருட்களை கொடுத்து எங்கள் பயணம் விக்கனமின்றி நல்லபடி நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம்.


பொதுவாக விநாயகர் தும்பிக்கை, இடம்
அல்லது வலமாக இருக்கும். ஆனால் இங்கு விநாயகர் தும்பிக்கை சதுரகிரி மலையை நோக்கி இருந்தது.

*ஆசீர்வாத விநாயகர்* ஆலயத்தை அடுத்து இருப்பது *ஸ்ரீ இராஜயோக தங்க காளியம்மன்*ஆலயம். அன்னையின் ஆசி பெற்று எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

*தபசுக்குகையை* நெருங்கியதும் சித்தர் பெருமான்களை மனதில் வேண்டிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.
நடைப்பயணத்தின் போது இயற்கை அழகு
மனதுக்கு இதமாக இருந்தது.

சலசலத்துபாறையின் ஊடே ஓடும் ஓடை,
கானகத்தின் குளிர்ச்சி நமக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
சுமார் ஒருமணி நேர நடைப் பயணத்திற்குப் பின்
நம்மை சுற்றிலும் நாலாபுறமும் மலைகள்தான்.

அம்மலைகளுக்கு நடுவில் எங்கள் பயணம்
தொடர்ந்தது. போகிற பாதை வலது பக்கம் திரும்புதல்,
இடது பக்கம் திரும்புதல், மேடு, பள்ளம் எனக் காணப்பட்டாலும்
அங்கிருந்து அனைத்து மலைகளையும் கடந்துதான்
சென்றுள்ளோம் என்ற விஷயம், நாங்கள்கீழே இறங்கிவந்த
போது உணர்ந்தோம். போகப் போக பாதையும், பயணமும் நீண்டு கொண்டுதான் இருந்ததே தவிர, மலை உச்சி வந்த பாடிலில்லை.

"...புல்வரம்பாய பல்துறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாததோர் பொருளது கருதலும்
ஆறுகோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின..."
....போற்றித் திருவகவல்: திருவாசகம்


"தெய்வத்ததேடி அடைவதே' என்ற எண்ணம் வந்து,
பரம்பொருளைத் தேடும்போது, ஆறுகோடி மாயாசக்தி
எனக்கெதிராக படை திரட்டு கின்றனவே
எனக்கெதிராக படைதிரட்டுகின்றனவே என்கிறார் மாணிக்கவாசகர்.
அந்த நிலைதான் எனது நிலை.

செங்குத்தான பாறையின் மீது மூச்சை தம்கட்டி ஏறும்போது
உடலும், காலும் சோர்ந்து விடுகிறது.

இன்னும் எவ்வளவு என்று ஆதங்கத்தில் கேட்டால்,
உடன் வந்தஅன்பர்கள் சலிக்காமல் 'இதோ வந்துவிட்டது,
அந்த வளைவைத் தாண்டிவிட்டால்...,
அவ்வளவுதான் இடம்வந்துவிடும்'' என்பார்கள்.

அது நம்மை சோர்வடையாமல் இருக்க உற்சாகம்
மூட்டுவது. இப்படிப் பல முறை சொல்லி வந்த
நண்பர்களுக்கு நானும் ஒரு கதை கூறினேன்.
பட்டணத்து ஆசாமி ஒருவர் கிராமத்திற்குச்
செல்ல பேருந்தை விட்டு இறங்கி
அங்கிருந்து கிராமத்து ஆளிடம்
கிராமத்துப் பெயரை கூறி எவ்வளவு
தூரமப்பா என்று கேட்டிருக்கிறான்.

கிராமத்தான் பக்கந்தானுங்க, கூப்பிடும்தூரம்தான்.
ஒரு கி.மீ. துரம்தாங்க இருக்கும், எனக்கும் அந்த கிராமம்தாங்க என்றுகூறியவாறு பேசிக்கொண்டேநடந்துள்ளார்கள்.
நீண்ட தூரம் நடந்தும் கிராமம் வரவில்லை.
பட்டணத்து ஆசாமி, என்னப்பா பக்கம், கூப்பிடும் தூரமின்னு
சொன்ன இன்னும் கிராமமே தெரியவில்லை என்று கேட்டான்.

அதற்கு அந்த கிராமத்தான் ''அய்யா, நான் கூப்பிட்டாலே
ஒன்னறை கி.மீட்டர் வரை கேட்கும் என்றானாம்.
நண்பர்கள் சிரித்துக்கொண்டு இதே வந்துவிட்டோம்
என்றார்கள். உண்மையில் இடைவேளை,
சாப்பாட்டு வேளைவந்துவிட்டது.

கோரக்கர் சித்தர் குகை
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

Saturday, July 05, 2008

சதுரகிரி யாத்திரை #4









சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்
சதுரகிரி செல்ல எண்ணி இராஜபாளையத்திலிருக்கும்
நண்பர் திரு. தணுஷ்கோடி அவர்களுக்குப் போன் போட்டு
சதுரகிரிப் பயணம் குறித்த செய்தி கூறினேன்.

அவரும்வாருங்கள் நானும் வருகிறேன், செல்வோம் என்றார்.
குறிப்பிட்டபடி, குறித்த நாளில் திரு.தணுஷ்கோடியை
இராஜபாளையத்தில் சந்தித்தேன். மறுநாள் செல்வதற்கு ஏற்பாடுகளை செய்துவிட்டதாகக் கூறி, இன்று ஓய்வுஎடுத்துக்கொள்ளுங்கள்
என்று கூறினார். ஆனால்.அன்றுமதியமே வானம் இருண்டு இலேசமாக தூறல் ஆரம்பித்துவிட்டது. மாலைக்குள் மழை விட்டுவிடும் என்றிருந்த
எங்களுக்குச் சோதனையாக மழை தொடர்ந்து பெய்தது.

மறுநாளும் தொடர்ந்து மழை.

இப்படித் தொடர்ந்து மழை பெய்ததால் திரு.தணுஷ்கோடி
'இந்த மழையில் செல்ல இயலாது.
பாதைகள் ஈரமாகவும், வழுக்கலாகவும் இருக்கும்.
பயணத்தை ஒத்திவைக்கலாம் என்றார்.

அந்த ஒத்திவைப்பு சுமார் நான்கு ஆண்டுகளுக்குப்
பின் 25-6-2008 அன்றுநிறைவேறியது.

இம்முறை சிங்கப்பூரிலிருந்து திரு,மணியம்,
திரு.வி.ஆர்.பி.மாணிக்கம், ஈரோடிலிருந்து
திரு.திருநாவுக்கரசுடன் நண்பர்.

திரு.தணுஷ் கோடி, திரு.முருகேசன் சிவா
மற்றும் உள்ளூர் நண்பர்கள் என பத்து பேர்
சதுரகிரி யாத்திரையை தொடங்கினோம்.

நண்பர் திரு.தணுஷ்கோடி மதிய உணவுவை
வீட்டிலேயே தயாரித்து கொண்டு வந்தார்.
உடன் இரவு உணவுக்கு அரிசியையும்
கொண்டு வந்திருந்தார்.

மேலும் பூஜைக்குரிய பொருட்களும், தேங்காய்,
இளநீரும், பழங்களை ஸ்ரீவில்லிபுத்தூரிலும்
வாங்கிக்கொண்டோம். இராஜபாளையம்,
ஸ்ரீ வில்லிபுத்தூலிருந்து கிருஷ்ணன் கோயில்,
வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறை வந்துசேர்ந்தோம்.
தாணிப்பாறையில் ஏற்கனவே சொல்லி வைத்திருந்த
இரண்டு சுமைகள் தூக்கும்மலையினர்
எங்களின் சுமைகளைத் தூக்கிகொண்டு புறப்பட தாணிப் பாறை மலையடிவாரத்து நுழைவுப் பாதைமுன்பு நின்று,
சித்தர்களையும் ஸ்ரீ மகாலிங்க சுவாமியை
மனதில் தியானித்துக் கொண்டு சதுர மலை மீது
ஏறத்தொடங்கும்போது காலை மணி 10.45.

மலைப்பகுதி வனங்களில் மரங்கள் நிறைத்திருப்பதால்,
மலை நடைப்பாதை நிழலில்பயணத்தை தொடர்ந்தோம்.
வழி நெடுகிலும் ஒரே ஏற்ற இறக்கமாக இருந்தது.
மலை உச்சிக்குச் செல்ல பிரதான பாதைகளோ
படிக்கட்டுகளோ கிடையாது.

குண்டுப் பாறைகள் மீது ஏறித்தான்
போக வேண்டும். சில இடங்களில் சமதளமான இடம் வரும்.
பிறகு மீண்டும் உயரமான பாறை. செல்லும் பாதை
மாறி விடாமல் இருக்க, அம்புக்குறியிட்டு
அடையாளம் காட்டப்பட்டு இருந்தது.

பயணத்தின் முதல் ஆலயமாக இருந்தது
*கருப்பண்ண சாமி* கோயில்.
சிறிய கோயில். நாங்கள் கருப்பண்ணர் சந்நிதி
கடக்கும் சமயம் அங்கு ஒரு குடும்பம் கருப்பண்ண
சாமிக்குப் பொங்கல் வைத்து சாமிகும்பிட்டுக்
கொண்டு இருந்தார்.

இரண்டு ஆடுகள் கழுத்தில் மாலையுடன் நின்று
கொண்டு இருந்தது. எந்த நிமிடமும்
வெட்டுவதற்குத் தயாராக இருந்தது.
அந்தக் காட்சியை நாங்கள் காண விரும்பவில்லை.
விரைவாக அவ்விடத்தினை விட்டு நகர்ந்து விட்டோம்.

(தொடரும்)
அன்பொடு
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

Thursday, July 03, 2008

சதுரகிரி யாத்திரை #3






அந்த வணிகனுக்காக தாம் உருவாக்கிய
வகாரத் தைலம் மேலும் மேலும் பொங்கி
வழிந்து கொண்டிருப்பதைப்
பார்த்தார் காலாங்கி நாதர் சித்தர்.

பூமியின் கீழ் ஒரு கற்கிணறு ஒன்றைக்
கொண்டு மூடிவிட்டார். துஷ்டர்கள்,பேராசைக்காரர்,
வீணர்களிடம் போய் சேர்ந்துவிடக் கூடாது
என்பதற்காக அதனைக் காக்க வேண்டி,
தைலக் கிணறு இருக்கிற சுந்தர் மகாலிங்க சுவாமி
இடத்தில் நான்கு திசைகளிலும் காவல் தெய்வத்தை
நியமித்துவிட்டு தவநிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.

சதுரகிரியில் தீர்த்தங்கள்

சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில்
'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர
தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி
ஒரு முறை நீராடினால் கொலை,
காமம், குருத்துரோகம் போன்ற
பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி
புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்.

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது
இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த
நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும்,
ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட,
ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து
ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில்
விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை
முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு.
இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும்
தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும்
உண்டு.

சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற
இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து
வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்கம தீர்த்தம்
என்று அழைக்கப்படுகிறது. உமையாள்
பிருங்க முனிவர் தம்மை வணங்காமல்
ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின்
காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து,
அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி
கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு
வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு
வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால்,
எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின்
பணிப்பெண்களான சப்த கன்னியர்கள்
தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய
'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட
'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி
முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர்,
போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட
'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்'
போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.

சதுரகிரி மலையில் அமைந்துள்ள ஆலயங்கள்.

கருப்பணசுவாமி கோயில், ஸ்ரீ ராஜயோக தங்கக்
காளியம்மன் ஆலயம், கணபதி சாயை,
இரட்டைலிங்கம் ஆலயம், ஓப்பிலாசாயை, பலாவடி கருப்பசாமி,
சுந்தரர் கோயில், சந்தன மகாலிங்கம் கோயில்
சந்தன மகாலிங்கம், சுந்தரலிங்கர் சன்னதி,
ஆனந்தவல்லியம்மை கோயில், பைரவ மூர்த்தி, காளியம்மை,
பேச்சியமை, கன்னிமார் கோயில், வெள்ளைப் பிள்ளையார் கோயில்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,
Singapore
For your Book Mark

சதுரகிரி யாத்திரை # 2

சதுரகிரி நுழைவாயில்:






இம்மலையின் மூலிகைகள் தவத்தியானம்
புரிந்து வருகின்ற முனிவர்களும், சித்தர்களும் பெறுவதற்கும், உலக வசியம், மோகனம்,
தம்பணம், பேதனம், மரணம், உச்சாடனம், வித்துவேடணம்
போன்ற அஷ்ட காரியங்களுக்கு அனேக மந்திர சக்திகளுக்கும் உதவுகிறது.


தவிர இம்மலையின் காற்றானது உடலில்
பட்டவுடன் சகல வியாதிகளும் எளிதில் குணமாகின்றன.
சதுரகிரியில் செம்பை தங்கமாக்கும் மூலிகை
இருப்பதாக பரவலான ஒரு செய்தி உண்டு.
பல மூலிகையின் சாற்றுடன், நவபாஷாணங்களையும் சேர்க்கையால் செம்பை தங்கமாக உருவாக முடியும்.

இந்த வித்தைகளை கற்றுக்கொள்ள தங்கள் வாழ்நாளையும்,
பொருளையும் இழந்தவர்கள் பலர்.

அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.
இது சாமானிய மக்களுக்கு கைவராத கலை.
பொருளாசை இல்லாதவர்களுக்கு மட்டும்
இது சாத்தியமாகும். யாருக்கு சாத்தியமாகும்
என்ற ஒரு விதியும்/ பிராப்த்தமும்
உண்டு.

எனக்குக் குருவாக திருவண்ணாமலையில்,
ஈட்டும், தொட்டும், சுட்டிக்காட்டியும்,
அருளும், தீட்சையும் அளித்த சித்தர்/வைத்தியர்
சி.இராமசந்திரன் அவர்கள் பல காலம் கழித்து
எனக்கு செம்பை தங்கமாக மாற்றும் வித்தையை,மூலிகையின்
கூட்டையும், நவபாஷாணத்தின் கலவை அறிவிக்கிறேன்,
கற்பிக்கிறேன் என்றார்.

ஆனால், நான் மரியாதையுடன் வேண்டாம் என்று மறுத்திவிட்டேன்.

'மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தினை எண்ணி தரம் தாழாதே,
தங்க இடம் பாரப்பா...'

-என்பதே என்பதே எனது வேண்டுகோள்.
சதுரகிரி மலையில் காலங்கிநாதரால் உருவாக்கப்பட்ட
வகார தைலக் கிணறு உண்டு. உலோகத்தைத் தங்கமாக
மாற்றும் தைல மூலிகை கிணறு.

சிருங்கேரி என்னும் நகரத்தைச் சேர்ந்த வாலைபுரம்
எனும் கிராமத்தில் இறைபக்தியும், திருப்பணி
கைங்கர்யங்களில் சிறந்த வாமதேவன்,
கிராமத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டுவதற்கு
எண்ணி தன் சொத்தை எல்லாம் விற்று
ஆலயப்பணியை தொடந்தான்.

ஆலயம் பாதிப்பாகம் கட்டி முடிவதற்குள்
பொருள் பற்றாகுறையால் பணியை தொடர இயலவில்லை.
பலரிடம் யாசித்தும் யாரும் உதவிபுரியவில்லை.
சதுரகிரியில் தவம் புரிந்துக்கொண்டிருக்கும்
காலாங்கி முனிவரைப் பற்றிக் கேள்விபட்டு
அவரை சந்திக்க சென்றான். நடந்தவற்றைக் கூறி
நின்று போன சிவாலயப் பணி தொடர வழி
செய்ய வேண்டுமென, காலில் வீழ்ந்து வேண்டி
நின்றான்.

ஆனால், காலாங்கி பதிலேதும் கூறாது மெளனமாக
இருந்தார்.
ஆலயத்தை எப்படியும் கட்டிமுடிக்க வேண்டும்
என்ற வேட்கையில் உறுதியுடன் அவருக்குப்
பணிவிடைகள் செய்து வந்தான்.
வாமதேவன் உண்மையிலேயே ஆலயம்
கட்டும் எண்ணத்தில் தம்மிடம் தங்கியுள்ளான்
என்பதை உணர்ந்து அவனது எண்ணத்தை
நிறைவேற்ற நினைத்தார்.

மலையிலிருந்த அபூர்வ மூலிகைகளான உரோம வேங்கை,
உதிர வேங்கை, ஜோதி விருட்சம், கருநெல்லி முதலியவற்றாலும், முப்பத்திரண்டு பாஷாணச் சரக்குகளாலும் முப்புக்களாலும் வகாரத் தைலத்தைச் செய்தார்.

அந்த வகாரத் தைலத்தைக் கொண்டு உலோங்களை
தங்கம் உண்டாக்கினார்.

'வணிகரே..! ஈசன் கோயில் கட்ட உனக்கு
எவ்வளவு பொன் தேவையோ அதனை எடுத்துக்
கொண்டு போய் திருப்பணி வேலைகளை முடித்து
கோயிலை கட்டி முடி போ'' என்றார்.

காலாங்கிநாதரை வணங்கி அங்கிருந்த
பொன்னை எடுத்துச் சென்ற வணிகன்
வாமதேவன் தன் விருப்படியே சிவாலாயம் கட்டி
முடித்தான்.

(தொடரும்)

அன்புடன்
சிங்கை கிருஷ்ணன்







Wednesday, July 02, 2008

சதுரகிரி யாத்திரை #1

உலக முழுதுந் தொழுதேத்தி
...உய்ய வெனவே சதுரகிரி
இலக வமர்ந்த பெருமானை
...யிலிங்க மயமா யிருப்பாவைக
கலக மயக்கங் கழன்றோடக்
...கடையே னுளத்துங் குடி கொண்ட
அலகில் சோதி மகாலிங்கர்
...ஆடிப்பு என்றன் முடிக் கணியே.

தென் தமிழகத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில்
சதுரகிரி மலை அமைந்துள்ளது. சதுரம்-நான்கு, கிரி-மலை, நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்திருப்பதால் இதனை 'சதுரகிரி' என்றுஅழைக்கிறார்கள்.

கிழக்குத் திசையில் இந்திரகிரியும்,
தென்திசையில் ஏமகிரியும்,
மேற்குத் திசையில் வருணகிரியும்,
வடதிசையில் குபேரகிரியும்,
இவற்றின் மத்தியில் சிவகிரி,
பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சப்தகிரி
என்னும் நான்கு மலைகளும் அமைந்திருக்கிறது.

இது தவிர இந்நான்குமலைக்கு மத்தியில்
சஞ்சீவி என்ற ஓர் அற்புத மலையும் இருக்கிறது.
இத்திருத்தலம் பஞ்சபூச லிங்கத்தலமாகும்.

இவற்றில் அருள்மிகு சுந்தரமூர்த்தி ஆரிடலிங்கமாகும்.
அருள்மிகு சந்தன மகாலிங்கம் தைவிக லிங்கமாகும்.
அகத்தியர் முதலான பதினெட்டுசித்தர்கள் வாழ்ந்து வழிப்பட்டதும் இத்திருத்தலம்.

இத்திருத்தலத்திற்கு ஒரு முறைவருகை தந்து
சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.

இத்தலத்தில் அமைந்துள்ள சந்திர தீர்த்தம்,
கெளண்டின்ய தீர்த்தம்,
ஆகாய கங்கைதீர்த்தம்
ஆகியவற்றில் நீராடிவர்கள்
பரமானந்த வாழ்வைப் பெற்று மகிழ்வார்.
புத்துணர்வு பெறுவர்.

திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி;
சிதம்பரத்தை வணங்கினால் முக்தி;
திருவாரூரில் பிறக்க முக்தி கிடைக்கும்.;
காசியில் இறக்க முக்தி.
இந்தச் சதுரகிரி தலத்திலோ
இந்த நால்வகை முக்தி கிடைக்கும் என்பர்.

இம்மலைத் தலத்தின் சஞ்சீவி மூலிகைக்
காற்றில்னால் ஆயுள் அதிகரிப்பதோடு,
நோயில்லா வாழ்வு அமையும் என்கிறார்கள்.
*சதுரகிரியில் சஞ்சீவி மலை* இராமாயணப் போரில்
இந்திரஜித்து, இலக்குவன் முதலானோரைத்
தனதுபிரம்மாஸ்திரத்தால் மூர்ச்சித்து மயங்கி
கீழே விழும்படி செய்ய, இது கண்டுவருந்திய இராமன்,
சுக்ரீவன் முதலானோர் வாயுபுத்திரனாகிய
ஆஞ்சநேயரிடம்விபரம் கூறி சஞ்சீவி மலையிலுள்ள
சஞ்சிவி மூலிகையை எடுத்து வரும்படிசொல்ல,
அனுமன் உடனே அங்குச் சென்று
அம்மலையையே தூக்கிக் கொண்டு வந்து இலக்குவன்
முதலானோரை மூர்ச்சைத் தெளிவித்த பின்பு,
திரும்பவும் அம்மலையை இருந்த இடத்திலேயே
வைத்துவிட்டு வருவதற்காக, வடதிசை
நோக்கிப் பறந்து செல்கையில்,
சதுரகிரியில் தவம்செய்து கொண்டிருந்த
சித்த முனிவர்கள் அந்த சஞ்சீவி கிரியில்
தங்களுக்கு வேண்டியஅனேக மூலிகைகள்
இருப்பதை தங்களது ஞான திருஷ்டியினால்
தெரிந்து கொண்டு அம்மலையின் ஒரு பகுதி,
இந்நான்கு கிரிகளுக்கும் [சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரி]
மத்தியில் விழவேண்டும் என்று நினைத்தவுடனே
அவர்களது பிரம்ம ஞான தவ வலிமையால்
பெரிய காற்றை உண்டாகியதால் அச்சஞ்சீவி
மலையின் ஒரு பகுதியானது இச்சதுரகிரிக்குமத்தியில் விழுந்தது.

<http://mail.google.com/mail/ui=1&attid=0.1&disp=inline&view=att&th=11a89e1b63fa5e1a>
(சதுரகிரி-தாணிப்பாறை மூலிகைவனம்)

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
தமிழ் எமது மொழிஇன்பத்தமிழ் எங்கள் மொழி

Krishnan,
Singapore
For your Book Mark:
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/