Thursday, August 17, 2006

அருணாசல மகிமை!

அருணாசல அருள் வரலாறு

நம்மால் தான் உலகம் படைக்கப்பட்டது நான் இல்லையேல் இந்த உலகமில்லை என கர்வம் கொண்ட பிரம்மன் தன் தந்தை மாகவிஷ்ணுவிடம் போய் திருமாலே! 14 உலகங்களையும் ஏழு மேகங்களையும்,ஏழு பருவங்களையும் மனதால் படைத்தேன். அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்தையும் உண்டாக்கினேன்.கவே நானே கடவுள் என்பதையும்,என் மகன்தான் பிரம்மன் என்பதையும் மறந்து விடு.நான் உலகத்தை படைக்காவிட்டால் நீ எப்படி காத்தல் தொழிலை செய்ய முடியும். யாவற்றையும் நான்தான் காத்து வருகிறேன் என்ற அகம்பாவத்தை ஒழித்துவிடு.

இல்லையெனில் உன் பதவியை நீக்கிவிட்டு மற்றொரு திருமாலை உருவாக்குவேன். பிருகு முனிவரின் சாபத்தால் பத்து முறை பூமியில் பிறந்தாய்.உன்னை படைத்தல்லவே என் கைகள் கறுத்து விட்டன. உன்னிடத்தில் நான் பிறந்திருந்தாலும் உன்னை அழித்து விடக்கூடிய ஆற்றல் எனக்குண்டு என்றார்.

அதற்கு மகாவிஷ்ணு பிள்ளை செய்யும் தவறுகளை தந்தை பொறுத்து கொள்வதை போல் எண்ணி என்னிடம் பேசிவிட்டாய்.சிவன் உன்னுடைய தலைகளில் ஒன்றை பறித்து எறிந்த காலத்தில் அதனை மீண்டும் கொள்ளும் ஆற்றல் உனக்கு இல்லை. அவ்வாறு இருக்கும் போது உன்னை எவ்வாறு தலைவன் என்று ஏற்றுக் கொள்ள முடியும்? சோமுகாசுரன் உன்னிடம் இருந்த வேதங்களை பறித்து சென்றபோது, நான் மச்ச அவதாரம் எடுத்து அசுரனை கொன்று மீட்டு தந்தேன்.மற்றும் பல அசுரர்களை கொன்ற எனக்கு உன்னை கொல்வது சுலபம் என்றார்.

இருவருக்கும் இடையில் யார் பெரியவன் என்ற பேச்சு பெரும் போராக மாறியது.அண்ட கோடிகள் அனைத்தும் அதிர்ந்தன். தேவர்கள் அனைவரும் பயந்து சிவனை சரணடைந்தனர்.சிவன் போர் புரிந்து வரும் இருவருக்கும் இடையில் பெரும் அக்னி மலையாக தோன்றினார். இந்த ஒளி மலையை பார்த்த திருமாலும்,பிரம்மனும் அளவு கடந்ததுள்ள இந்த மலையின் அடியையும்,முடியையும் யார் முதலில் காண்கின்றரோ அவரே பெரியவர் என முடிவு செய்தனர்.

அடி முடியை இருவரும் காண முடியாததால் தான் முதற் கடவுள் அல்ல என தெளிந்த திருமாலும்,மாகவிஷ்ணும் சிவனை சரண் அடைந்தனர். சினம் தணிந்த சிவபெருமான் 'நாம் இத்தலத்தில் அருள்பாலித்ததால் இன்று முதல் இத்தலத்தை சுற்றிலும் மூன்று யோசனை தூரம வரைக்கும் தூய்மையான புனித பூமியாக விளங்கும். அகண்ட ஒளி வடிவாயுள்ள மலை சிறிய உருவங் கொண்ட மலையாகும். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு பிறவி நோயை நீக்குவோம்.இந்த மலையும், நகரமும் பிரளய காலத்திலும் அழிவின்றி நிற்கும்.கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில்
மலையின் உச்சியில் ஓரொளி காண்பிப்போம்.இவ்வொளியை கண்டு தொழுவோர் தம் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் வீடு பேற்றினை அளிப்போம் என்றார்.

இம்மலை பிறப்பு,இறப்பினை நீக்க கூடியது.தலால் மலைமருந்து என்றும் பெயர் பெறும். சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் பெயர் பெறும்.இம்மலையின் பெயரினை ஒருமுறை சொல்லியவர் திரு ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்தற்குரிய பயனை அடைவர் என சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.


* இங்கு மலையே இலிங்க வடிவாக இருக்கிறது
உலகெல்லாம் படைத்து காத்து அருள் செய்து வரும் சிவபெருமானின் கட்டளையை செலுத்தி கைலாயத்தில் காத்து வருபவர் திருநந்தி தேவர். அந்த திருக்கைலாயத்தில் உள்ள மண்டபத்தில் பதஞ்சலி மார்க்கண்டேய போன்ற முனிவர்களும், ரிஷிகளும் திருநந்தி தேவரை சூழ்ந்து அமர்ந்திருக்கு, மார்க்கண்டேய முனிவர் எழுந்து, பெருமானே! நாங்கள் முக்திப்பேறு அடைதற்குரிய வழியினைக் கூற வேண்டும் என்றார்.

அதற்கு திருநந்தி தேவர் காவேரி, கோதாவரி,கிருஷ்ணவேணி,பம்பை நதி, சரயு நதி,கங்கா நதி, தாமிரபரணி,யமுனா நதி, நர்மதை நதி என இன்னும் பல றுகள் உள்ளன்.இந்த நதிகளில் நீராடுவோர் பாவம் விலகும். அது மட்டுமல்ல காசி,திருவாரூர்,சிதம்பரம்,விருத்தாசலம்,திருக்கேதாரம்,காஞ்சி,திருப்பருப்பதம், திருக்காளத்தி,சீர்காழி,திருவையாறு,திருவிடைமருதூர்,கும்பகோணம்,இரத்தினகிரி கிய திருப்பதிகள் வேதங்களாலும் பாராட்டு பெற்றவை.

மதுரை,இராமேஸ்வரம் கிய பதிகள் பிறவி துயரை நீக்கவல்லது. யாரானாலும் அத்தகைய நகரங்களுக்குள்ளே பிறந்தாலும், உடலை விட்டு இறந்தாலும், போய் வணங்கினாலும், தூய்மையான நீரினால் முழுகினாலும்,சிவபிரானுக்கு கோயில் கட்டினாலும் சிவப்பேற்றினை அடையலாம் என்றார்.

மார்க்கண்டேய முனிவர், அந்த நகரங்களில் மூழ்குவதும், அந் நகரங்களில் சென்று வழிபாடு செயவ்தும் எல்லோராலும் முடியாது அல்லவா? என எல்லோர்க்கும் எளிதான வழி ஒன்றை தாங்கள் கூறுதல் வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்.

திருநந்திதேவர், நீங்கள் சொல்லியபடியே குருடர்,முதியவர்,விலங்கு,பறவை,புல்,பூண்டு ஆகிய எல்லா உயிரினங்களும் எளிதில் சிவஞானம் அடைய கூடிய நகர் ஒன்றுண்டு. சிவஞானத்தை அளிக்க தக்க ஊர் ஒன்றிருக்கிறது.அதற்கு கவுரி நகர்,தேகநகர்,அண்ணாமலை,அண்ணாநாடு,அண்ணாவூர், அருணாசலம்,சிவலோக நகர், வாயு நகர்,அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம்,சோணமலை, அருணாகிரி என பல பெயர் உண்டு என்றார்.

அண்ணாமலை இன்றைக்கு புதிதாக வந்ததன்று. இப்பூவுலகம் என்றைக்கு உண்டாயினவோ அன்றே உண்டானதாகும்.அந்த நகரில் என்றும் அழியாத மலை உண்டு. அந்த மலையே அந்த நகரில் சிவலிங்கமாக இருக்கிறது. சித்தர்கள்,முனிவர்கள்,ஞானிகள் அனைவரும் அந்த மலையினைச் சிவலிங்கம் என கொண்டு, பாடிப்பரவி வழிபட்டனர்.

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும்,திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை.

அண்ணாமலை என்பதற்கு பொருள் அண்ண முடியாத மலை என்பதாகும்.கிருத யுகத்தில் நெருப்பு மலையாக இருந்த காரணத்தால். அண்ணுதல் என்றால் நெருங்குதல். சூரியன் ஒரு அண்ண முடியாத நெருப்பு. அருணம் + அச்சலம் என்ற இரண்டு வார்த்தை. அருணம் என்றால் நெருப்பு. அச்சலம் என்றால் மலை பொருள். இதனை அக்னி பர்வதம் என்று கூட சொல்வார்கள். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலை அருணாச்சலமாக காட்சியளிக்கிறது. இதனை மலை என்ற கோணத்தில் பார்க்க கூடாது.இது ஒரு கல் மலை அல்ல.அதாவது சிவனுடைய வடிவம் என்று புரிந்துக்கொண்டு இந்த மலையை தரிசனம் செய்ய வேண்டும்.கோவிலுக்கு உள்ளே இருக்கும் சிவலிங்கம்தான் லிங்கம் என்று
எண்ணிவிடக்கூடாது. இந்த மலையே சிவலிங்கம்.

தில்லையை தரிசிப்பவர்களுக்கும்,காசியில் இறப்பவர்களும்,திருவாரூரில் பிறப்பவர்களுக்கும் முக்தியுண்டாகும். நேரில் சென்று தில்லையை வணங்குவது எல்லோராலும் இயலாது. காசியில் இறப்பதும் எளிதன்று.திருவாரூரில் பிறப்பதும் நம்மால் கக்கூடியதன்று னால் அண்ணாமலையை எங்கிருந்தாலும் ஒரு முறை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.அந்த ஊரில் உள்ள கற்கள் எல்லாம் சிவலிங்கங்கள். திருஅண்ணாமலை பேரூரினை சுற்றி 1008 லிங்கம் புதைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கையால், இன்றும் சிலர் காலில் காலணி அணியாதுதான் செல்வார்கள்.

திரு அண்ணாமலை கோயில் சுற்றுலா! #3

திரு அண்ணாமலை கோயில் 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்தில் மிக உயர்ந்த கருங்கல்லினாலும் கோயில் சுற்றிச் சுவர் உள்ளது.நான்கு திசையிலும் வானை முட்டும் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ளன.
கிழக்கு கோபுரம் ராஜ கோபுரம் என அழைக்கப்படுகிறது.இந்த கோபுரம் 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தென்னிந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோபுரம் இது. இதன் அடிநிலை 135 அடி நீளம் 98 அடி அகலம். தெற்கு திசை கோபுரம் திருமஞ்சன கோபுரம். மேற்கு திசையிலுள்ள கோபுரத்தை பேய்க் கோபுரம் எனவும், வடக்கு திசையிலுள்ள கோபுரத்தை அம்மணி அம்மாள் கோபுரம் எனவும் அழைக்கப்படுகிறது.


அருணாசலேஸ்வரரை தரிசிக்க முதலில் ராஜ கோபுரத்தின் வழியே செல்ல வேண்டும். நுழைந்தவுடன் அங்குள்ள செல்வ கணபதியை தரிசிக்க வேண்டும்.செல்வ கணபதியை எண்ணிக் கொண்டு தோப்பு கரணம் போடவேண்டும். வணங்கும் போது உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.கரணம் என்றால் மனம்,புத்தி,சித்தம், அகங்காரம் எனப்படும்.இவைகளை தோற்பது தான் தோற்புக்கரணம் என்கின்றனர். விநாயகர் முன்பு நாம் செய்த தவற்றை உணர்ந்து வந்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகதான் தோப்புக் கரணம் போடுகின்றோம்.

இராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் வலது புறத்தில் யிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. ஆ யிரங்கால் மண்டபத்துள் ரமண ரிஷி வழிப்பட்ட பாதாள லிங்கேஸ்வரை காணலாம். ரமண ரிஷிகள் ஆழ்ந்த தியானத்தில் பல காலம் அமர்ந்து தன்நிலை மறந்து இருந்த காரணத்தால் எறும்புகளாலும், நீண்ட காலம் அமர்ந்திருந்த காரணத்தாலும் புட்டம் அரிக்கப்பட்டு நோயுற்ற காலத்தில், இதனை நிஷ்டை மூலம் அறிந்த வேதாத்திரி சுவாமிகள் ரமண அங்கிருந்து கொணர்ந்து புண்ணுக்கு மருந்திட்டு, குப்புறமாகவே சுமார் இரண்டு மாதம் வைத்திம் செய்தாக சொல்லப்படுகிறது

இடது புறமாக இளையானார் சன்னதி உள்ளது.[முருகன் சன்னதி]அடுத்தாற்போல் ஒட்டி இருப்பது கம்பத்திளையார் சன்னதி. இங்கு முருகன் இரண்டாம் பிரபுட தேவாராய மன்னருக்கு காட்சி அளிக்க வேண்டும் என அருணகிரி நாதர் பக்தி பரசவத்துடன் பாடல் பாடி வரவழைத்த இடம். முருகன் கம்பத்தில் காட்சி அளித்தார். அதனால் கம்பத்திளையார் என முருகனுக்கு பெயர் வந்தது.

இதன் தென்புறமாக சிவகங்கை புண்ணிய நதி தீர்த்தம் அமைந்துள்ளது.சர்வ சித்தி விநாயகர் சன்னதியின் கீழ் புறமாக சிவகங்கை அமைந்துள்ளது.விநாயகர் சன்னதி ஒட்டியே பெரிய நந்தி காணப்பெறும். பெரிய நந்தியின் எதிரில் காணப்பெறுவது வல்லாள மகாராஜன் கோபுரம். அடுத்து கல்யாண சுந்தரேசுவரர் சன்னதி.காலபைரவரை அஷ்டமி, ஞாயிற்றுகிழமையில் தரிசித்தால் பில்லி,சூனியம் அகலும்.எதிரிகள் தோல்வி அடைவர்.வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.

அடுத்து நான்காம் பிரகாரம் ஆரம்பமாகிறது.இப்பிரகாரத்தின் கீழ் திசையில் கிளி கோபுரம் அமைந்துள்ளது.அருணகிரி நாதர் கிளி வடிவம் தாங்கி வந்து பாரிஜாத மலர்களை கொண்டு சிவனை வழிப்பட்டதால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்று வழங்கப்படுகிறது.கோபுரத்தினை சற்று உற்று நோக்கினால் ஒரு கிளி இருப்பதைக் காணலாம்.

கிளி கோபுரத்தின் உட்புறம் எதிரில் தோன்றும் 16 கால் மண்டபத்தில் தான் கார்த்திகை தீப விழாவின் போது பஞ்ச மூர்த்திகள் அண்ணாமலையை நோக்க ஏக காலத்தில் தீப தரிசன காட்சி நடக்கும். அடுத்து மூன்றாம் பிரகாரம்.இதில் சம்பந்த விநாயகர் சன்னதி.ஸ்தல விருட்சமாகிய மகிழ மரம் காணலாம்.இதில் உண்ணாமுலையம்மாள், அருணகிரி,காளத்தி லிங்கேஸ்வரர்,பழனி ஆண்டவர், ஏகாம்பரேசுவரர்,ஜம்புலிங்ககேசுவரர்,சிதம்பர லிங்கேசுவரர்,பிடாரி, சப்த கன்னியர் சன்னதியை காணலாம்.

அதன்பின் அண்ணாமலையாரை தரிசிக்க செல்ல வேண்டும்.முதலில் பலி பீடம் உள்ளது. அங்கு தலை,கையிரண்டு, இருசெவிகள், இரு முழங்கால்,மார்பு கியவை பூமியில் படும் பட அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்கள் தலை,இரண்டு முழ்ந்தாள்கள் பூமியில் படும்படி பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு கீழே வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து வணங்கவேண்டும். அப்போது நம் மனதில் உள்ள காமம்,சை,குரோதம்,லோபம், மோகம், பேராசை,மத,மாச்சர்யம் என்னும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுத்தாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து அருணாசல பெருமான் சன்னதி உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரம் ரம்பம். சகல மூலவர்களும்,உற்சவமூர்த்திகளும், சமயாசாரியார்கலும், நாயன்மார்களும்,வேணுகோபால சுவாமியும் காணலாம்.இதன் மேல்பத்தியின் முதற்பிரகாரத்தில் தடசிணாமூர்த்தியும்,சண்டிகேசுவரரும் விளங்குகின்றனர்.
இருதய ஸ்தானமாக விளங்கும் அண்ணாமலை பெருமான் அரூஉருவ திருமேனியாய் காட்சி அளிக்கிறார். முதலில் அடியும்,முடியும் நெருங்க முடியா அண்ணாமலையானை தரிசித்து விட்டு அம்பாள் உண்ணாமுலை அம்மையை தரிசிக்கவேண்டும்.

அருணாசல மகிமை தொடரும்.

அன்புடன்
கிருஷ்ணன்
சிங்கப்பூர்