Saturday, March 25, 2006

உத்திராக்கம்!

1. உத்திராக்கம் என்றால் என்ன?

உத்திராக்கம் மணிகள் எலியோகார்பS கனிற்றS றொக்Sப் (Elacocarpus Ganitrus Roxb)
என்றழைக்கப்படும் உத்திராக்க மரங்களிலிருந்து பெறப்படுகிறன. இவை தென்கிழக்காசியாவில்
குறிப்பிட்ட சில இடங்களில், f஡வா,கொரியா, மலேசியாவின் சில பகுதிகள்,தைவான்,சீனா,
தெற்காசியாவிலும் வளர்கின்றன.உத்திராக்க மணிகள் பயனுடன் கூடியவை.இவை ஆற்றல் வாய்ந்த
மின்காந்தப் (Electro- Magnetic) பண்புகளைக் கொண்டன. இவை அணிவோரின் அழுத்த நிலைகள்
(Stress Levels) இரத்த அழுத்தம்(Blood Pressure) மிக உயர்ந்த இரத்த அழுத்தம் (Hypertension)
ஆகியவைகளைக் கட்டுப்படுத்துவதுடன் அணிவோரிடம் சாந்தமான ஒரு உணர்வையும் தூண்டுகின்றன.
இவை அணிவோருக்கு ஒரு முகக்குவிவு (Concenration) கூர்ந்த நோக்கு (Focus), மந்த்திண்மை
ஆகியவற்றை மேம்படுத்துகின்றன். உத்திராக்கம் பல நூற்றாண்டுகளாக கீழ்த்திசைப் பண்பாட்டினராகிய
சீனர்கள்,பெளத்தர்கள், தாவோ, fப்பானியர்கள், சென் மதத்தோர், கொரியர்கள், இந்தியர்கள்
ஆகியோரிடையே பரவலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.கீழ்த்திசைப் பண்பாட்டின் இன்றியமையாப் பண்பான கூர்ந்த நோக்குத் தியானத்திற்கு உகந்ததாகக் கொள்ளப்படும் அமைதி, சாந்தம் ஆகியவற்றை இந்த மணிகளை இதயத்தைச் சுற்றி அணிவதால் பெறமுடிகின்றது எனக் கண்டுகொள்ளப்பட்டது.

ஒருவரின் ஆளுமையை மாற்றவும்,அவருக்கு நேரான நன்நோக்கு உண்டாக்கவும் வல்ல பலவேறு
ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உத்திராக்கத்தின் ஆற்றல் மிக்க பண்புகள்
உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த
போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது.குறிப்பாக,இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக்கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். க?஡S ராய் தலைமையிலான
அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே உத்திராக்கம் புகழ்பெற்றது.இவர்கள் உயிர்வேதியல் துறை
(Biochemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறைக(Psychiatry) பொது மருத்துவத்
துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து உத்திராக்கம் குறித்து ஆய்வு
மேற்கொண்டார்கள். இவர்கள் உத்திராக்கத்தின் தாம் ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன்,தாம்
கண்ட முடிவுகளை மீண்டும் செய்து காட்ட இவர்களுக்கு முடிந்தது.

உத்திராக்கத்திற்கு,சக்திமிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) காந்த முனைகளால்
ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை(Inductive) ஆகியன உள்ளன என்பதை இவர்கள் நிலை நிறுவினர்.மேற்கூறிய ஆற்றல்கள் உத்திராக்கத்தின் முகப்புகள் அல்லது முகங்கள் மேற்பரப்பிலுள்ள பகுப்புகளின் எண்ணிக்கை பொறுத்து அமையும். ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய உத்திராக்கத்தையோ அன்றேல் ஒரு தொகுதி முகங்கள் கொண்ட உத்திராக்க மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள்(Transformatiom in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம்,மனத்திட்பம், ஆகியன மாற்றம் பெறுகின்றன. மேலும் இந்த ஆய்வாளர்கள்,உத்திராக்க மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு,அதன் வழியாக மூளைக்கு செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் நிறுவினர்.

உயர்ந்த மன அழுத்தம் கூர்ந்த மனக்குவிவு ஆகியவை ஒருவருக்கு ஏற்படும் போது,மூளைக்கும்
மூளையிலிருந்து இரத்த ஓட்டம் பீறிட்டும் செல்வது நோக்கத்தக்கது. இந்த மணிகளின் துணையுடன்
ஒருவகைச் சாந்தம் ஒரு முகக்குவிவு, கூர்ந்த குவிவு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது.

இந்த ஆய்வாளர்களால் நரம்பு மாற்றிகள் (Neuro Transmiters) டொபமைன்(Dopamine),
செறொரின்(Serotinin), போன்ற செயல்பாடுகளில் உத்திராக்கமணிகளை அணிவதால் ஏற்படும்
தாக்கங்களையும் நிலைநாட்ட முடிந்தது. இத்தகைய தாக்கங்களினால் ஒருவரது ஆளுமையிலும்
மனப்பாங்கிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்கின்றன.உத்திராக்கத்தை அணிவோர், தமக்கு ஏற்படும்
ஏனைய நன்மைகளுடன்,அவர்களுடைய மன அழுத்த நிலை எதிர்பாராத அளவு குறைந்திருப்பதையும்
கண்டனர். இத்தகைய மன அழுத்த நிலைகுறைவு, இதுவரை சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்வதால் பெறப்பட்டுள்ளது மட்டுமே உருத்திராக்க மணிகள், ஆக்கபூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும், மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன. உத்திராக்க மணிகள் ஒருவரை 'அல்பா மன நிலைக்கு' (Alpha state of mind) இட்டு செல்கின்றன.

இந்த நிலையில் ஒருவரின் இதயத்துடிப்பு,இரத்தச் சுற்றோட்டம், என்டோ கிரையின் சுரப்பிகளின்
(Endorine glands) செயல்கள்,நியூரோன்களி (Neuron) செயல்கள்,சுவாசித்தல் ஆகியவை சாதாரண
நிலைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அத்துடன் ஒருவன் தன்னை அதிகளவுக் கட்டுப்பாட்டுக்குள்ளும்
வைத்துக் கொள்ள முடிகிறது.

அதாவது உடலில் தன்முனைப்புடன் செய்யும் செயல்களை மட்டுமன்றி, தன் முனைப்பு இன்றிச் செய்யும்
செயல்கலையும் கூட கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிகிறது. ஆகவே, இம்மணிகல் கீழ்த்திசை
மரபில் வியத்தக்க ஒன்றாகவும், இயற்கைக்கிகந்த ஆற்றல்களையும் கொண்டனவாகவும் கொள்ளப்பட்டன.

உன்மையான உருத்திராக்க மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கானோர்,இரத்த
அழுத்தம்,மனஅழுத்தம், மிக உயர்ந்த இரத்த அழுத்த்ம்,மனச் சோர்வு,நரம்புக்கோளாறு உட்பட்ட ஏனைய
மனம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து குறிப்பிடத்தக்க நிராவணம் கிட்டியுள்ளது என மீண்டும் மீண்டும்
உறுதி செய்கின்றனர். அத்துடன் உருத்திராக்கம்,அதை அணிவோருக்கு குறிப்பிடத்தக்க அளவு
மனத்திடத்தையும், உள்ளார்ந்த பலத்தையும் அளிப்பதாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாட்டிற்கான உருத்திராக்க மணிகளைவிட,ஒன்றிலிருந்து இருபத்தொரு முகங்கள்
வரை உள்ள அதிஅக் ஆற்றலுள்ள உருத்திராக்க மணிகளுமுண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும்,
நம்மைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான சக்திகளையும் ஒரு நிலைப்படுத்தி, செழிப்பு, ஆக்கம், உள்ளுணர்வுத்திறன், எதிர்கால நிகழ்வுகள் குறித்து ஆய்தல்,பாலிஅன் ஒத்திசைவு போன்ற சிறப்புப் பண்புகளை அளிக்கின்றன.

உறுதியாக, உருத்திராக்கள் நாம் இன்னும் திறம்படச் செயலாற்றவும், இன்னும் வெற்றிகாணும்
வாழ்க்கையை வாழ்வும் உதவுகின்ற வியத்தகு மணிகளாகும்.

2. உருத்திராக்கம் பற்றிய புனைகதை

உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் சிவனின் ''கண்களைக்'' குறித்தாலும், அவருடைய
அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின்
தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினதும் நன்மைக்காகச் சிவன்
பல்லாண்டு காலம் தியானம் செய்தார்.தியானத்தினின்றும் கண்ணை விழித்ததும்,சூடான கண்ணீர்த்துளிகள்
உருண்டோ டின.அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம் fபம்,சக்தி ஆகியன் வழியாகச் சமய ஈடேற்றம்,
அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன.
இமயத்திலும்,, ஏனைய காடுகளிலும் அலைந்து திரியும் ஞானிகளும் ரி"஢களும் உருத்திராக்கங்களையும்
அவற்றினால் செய்யப்பட்ட மாலைகளையும் அணிந்து,நோயற்ற,அச்சமற்ற,முழுமையான வாழ்க்கையை
வாழந்துள்ளார்கள்.இந்தத் துடிப்பவைகளுடனும் தொடர்பில்லாத எந்த ஞானியோ,இறை அவதாரமோ
அல்லது சங்கராச்சாரியர்களோ இல்லை எனலாம்.

3. நோய் தீர்க்கும் பண்புகள்

பல்லாயிரம் ஆண்டுகள்ளாக,நல்ல உடல் நலமும்,fபம்,சக்தி ஆகியன் வழியாக சமய ஈடேற்றம்,
அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன.
எங்கெல்லாம் உருத்திராக்கம் வணங்கப்படுகின்றோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராக்கத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராக்கம் குண்டலினியை(ஆதம இனபமுனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகபேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராக்கம் உதவுகின்றது. இது முழுக்குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச்செய்யும்.உருத்திராக்கம் அதனுடைய உயிரியல் மருத்துவப்(Biomedical) பண்புகளுக்கும், மன அழுத்தம், அதி உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் போனது.

உருத்திராக்கம் சுய ஆற்றலையும்,சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை
இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை,காக்காய் வலிப்பு,கக்குவான் போன்ற பல்வேறு
அபாயகரமான நோய்களைக் குணப்படுத்தவல்லது.குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதிமுறைகளைக்கேற்பக கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும்.

இது அணிவோருக்கு மன அமைதியையும்,மன ஊக்கத்தையும்,புத்திக் கூர்மையும் அளிக்கிறது.

4. முகப்புகள் அல்லது முகங்களை உடையன

ஒரு முகம்.

மந்திரம்-- '' ஓம் நமச்சிவாய, ஓம் ?ரீம் நம?''

ஒரு முகமுடைய உருத்திராக்கம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராக்கம் ஏனைய
எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் அரசனாகையால், இது தூய உணர்வைக்
(Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும் மோட்சமும் கிட்டும். இவர் ராf஡ fனகர்
போன்று வாழ்வர்.இவர் வேண்டும்போது எல்லா சுகங்களையும் அநுபவிப்பர்.எனினும் பற்றற்றவராய் இருப்பர்.

ஒரு முகத்துஉருத்திராக்கம், நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும்,அறுவை சிகிச்சையில் வெற்றி
பெறுவதற்கும் உதவுவதால் மருத்துவர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும்.

இரண்டு முகம்.

மந்திரம் -- '', கெளரி சங்கராய நம?, ஓம் நம?''

இரு முகமுடைய உருத்திராக்கத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி பார்வதியும்
(சக்தி) இணைந்த உருவமான அர்த்த நாரீSவரரைக் குறிக்கிறது.(மாதொரு பாகன்) இந்த உருத்திராக்கம்
அணிவோருக்கு 'ஒற்றுமை' (unity) உணர்வை அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சி?யன்,பெற்றோர்-
குழந்தைகள், கணவன் - மனைவி, நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கலாம்.
ஒருமைத் தன்மையை நிலை பெறச்செய்வது இதன் தனித்தன்மையாகும்.

மூன்று முகம்.

மந்திரம்-- '' ஓம் கிளீம் நம? ''

இந்த மும்முகமுள்ள உருத்திராக்கதை ஆளும் கோள் செவ்வாய்.இது தீக்கடவுளை குறிக்கிறது. எல்லாப்
பொருட்களையும் உண்டபின்னரும் தீ தூய்மை இருப்பது போல் மூன்று முகமுள்ள உருத்திராக்கத்தை
அணியவரும் அருள் கிட்டிய போது,தனது வாழ்க்கையில் பாவங்களில்,தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய
நிலையை அடைகின்றார். இந்த மூன்று முக உருத்திரக்கம் தாழ்வு மனப்பான்மை(Inferiority Complex)
உள்ளார்ந்த பயம் (Subjective fear)குற்ற உணர்வு(Guilt) மனச்சோர்வு போன்றவற்றால்
துன்பபடுவர்களுக்கும் உகந்ததாகும்.

நான்கு முகம்

மந்திரம்-- ''ஓம் ?ரீம் நம?''

இந்த நாலுமுகமுள்ள உருத்திராக்கத்தை ஆளும் கோள் புதன். இது பிரமனைக் குறிக்கிறது.
அணிவோருக்கு அருள் கிடைத்தபோது ஆக்க சக்தி கிட்டுகிறது.மாணவர்கள், அறிவியலாளகள்,
எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்கவல்லது.ஞாபகசக்தி,
கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நான்முக உருத்திராக்கங்கள்
மூன்றினை வலது கையில் கட்டினால்,அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது.

ஐந்து முகம்

மந்திரம் - ஓம் ?ரீம் நம?

ஐந்து முகங்களுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் வியாழன்.இது மங்களகரத்தின்
குறியீடான சிவனை குறிக்கும்.இந்த ஐந்து முகமுடைய உருத்திராக்க மாலை அணிதோருக்கு உடல்
நலம், அமைதி ஆகியன் கிட்டும்.இது ஒருவரின் இரத்த அழுத்தம்,இதய நோய்கள் ஆகியவற்றைக்
கண்காணிக்கிறது. இந்த உருத்திராக்க மாலை fபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை
அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும்.அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால
மரணம் ஏற்படாது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.

அறு முகம்

மந்திரம்-- ''Sவாமி கார்த்திகேயாய நம?''

இந்த ஆறுமுக உருத்திராக்கத்தை ஆலும் கோள் வெள்ளி. இந்த உருத்திராக்கம்
சிவனின் இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து
வேண்டியோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி,மனத்திட்பம்,திடமான மனம் ஆகியவை
அருளப்படும்.இந்த ஆறுமுக உருத்திராக்கம்,மேலாளர்கள்,வணிகர்கள்,நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள்,
ஆகியோருக்கு உகந்தது. இது ஒருவரின் பிறப்புறுப்புகளை ஆள்கிறது.

ஏழு முகம்

மந்திரம்-- ''ஓம் ம?஡ லட்சிம்யை நம? ஓஅம் ?ணம் நமக''

இந்த எழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும்.
இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள்பாலிக்கப்படும். உடல் தொடர்பான
துன்பங்கள்,நிதித்தொல்லைகள்,மனத்துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர்
இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை
ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம்,பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன்
அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.

எட்டு முகம்

மந்திரம் -- ''ஒம் ?ணம் நம?, ஓம் கணே"஡ய நம?''

இந்த எட்டு முகமுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக்]
குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது. அணிவோருக்கு
ரித்திகள்(Riddhis),சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிக்கும். இதை
அணிவோரின் எதிரிகள் அழிந்து போவார்கள். அதாவது இவர்கள் எதிரிகளின் மனத்தையும்,
நோக்கங்களையும் இந்த உருத்திராக்கம் மாற்றிவிடும்.

ஒன்பது முகம்

மந்திரம்-- ''நவ துர்க்காயை நம?, ஓம் ?ரீம் ?தம் நம?''

இந்த ஒன்பது உருத்திராக்கத்தை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்கையைக் (சக்தி)
குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள் வெற்றிகரமான
வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி,ஆற்றல்,செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.

பத்து முகம்

மந்திரம்-- '', நாராணாய நம?,, வை?ணவை நம?, ஓம் <௃ண௵ ிு?''  இந்த பத்து முகமுள்ள உருத்திராக்கத்திற்கு ஆளும் என்று ஒன்றுமில்லை.கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும்,பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக உருத்திராக்கத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம் போல்ச் செயல்பட்டு, எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும். பதினோரு முகம்

மந்திரம் - ''ஒம் , ருத்திர நம?, ஒம் ?ரீம் நும் நம?''

இது பகவான் அநுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு,நேர்மையான நீதி
ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை,வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும்
மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும்.இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார்.
தியானத்திற்கும் இது உதவும்.

பன்னிரண்டு முகம்

மந்திரம்-- ''சூர்யாய நம? ஓம் க்ரோன் ஧?஡ண் ரவுண் நம?''
இது சூரிய கடவுளை குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத்திறனைப் பெறுவர்.
அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும்
ஒளியுடனும், பலத்துடன்,பிறரை ஆட்சி செய்து நிலவுவர். இந்தப் பன்னிரண்டு முக உருத்திராக்கம்
மந்திரிகள்,அரசியல்வாதிகள்,ஆட்சியாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு
உகந்தது. இது வியக்கத்தக்க வகையில் பயனளிக்க வல்லது.

பதின்மூன்று முகம்

மந்திரம்-- '' ஓம் ?ரீம் நம?''

இது இந்திரனைக் குறிக்கும். தொழுது வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க எல்லா
சுகங்களையும் இது அளிக்கும்.செல்வம்,மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள்
அனைத்தும் இது நிறைவேற்றும்.அத்துடன் அ?டமா சித்திகளையும் இது அளிக்கவல்லது. இதை
அணிவோரை காமக்கடவுள் விரும்புவர்..மகிழ்ச்சி அடைந்த காமக்கடவுள் அணிவோருக்கு உலகத்து
ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.

பதினான்கு முகம்

மந்திரம் -- ''ஓம் நம? சிவாய''

இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராக்கமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக
மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராக்கம் அணிவோருடைய ஆறாவது
புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார்.
இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒருபோதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோர்
இடர்கள், துன்பங்கள்,கவலைகள் எல்லாவற்றையும் கடந்துவிட முடிகிறது.மேலும், அணிவோருக்கு
பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.

பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள்.

பண்டையக் கால முனிவர்கள் இந்த உருத்திராக்க மணிகளை பூநf மேடையில்
வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன
பகவான் உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.

கெளரி சங்கர்

மந்திரம் -- '' ஓம் கெள்ரி சங்கராய நம?''

இயல்பாகவே ஒன்றாக இணைந்த இரு உருத்திராக்கங்கள் கெளரி சங்கர் என
அழைக்கப்படுகின்றன. இது சிவனும் பார்வதியும் சேர்ந்த உருவாகக்
கொள்ளப்படுகின்றது. இது கணவனும் மனைவியும்
ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ள உதவுகிறது. எனவே இந்த உருத்திராக்கம் குடும்பத்தில்
அமைதியும் சுகமும் விளங்க வைக்கும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது.கெளரி சங்கர்
உருத்திராக்கத்தை ஒருவர் வழிப்படும் இடத்தில் வைத்துத் தொழுது வந்தால் அவருக்கு
ஏற்படும் துன்பம்,வேதனை,உலகியல் தடைகள் எல்லாம் அழிகின்றன. குடும்பத்தில் அமைதியும்
மகிழ்ச்சியும் மேலோங்குகின்றன.

5. உருத்திராக்கம் வழி நோய் நீக்கல்

இன்றைய உலகில் உங்களுக்கு என்ன செய்ய முடியும்?
உருத்திராக்கங்கள் ஒரு பயனுடன் கூடிய மணிகளாகும். இந்த மணிகள் மன அழுத்தம்,
உயர் இரத்த அழுத்தம்,மனச்சோர்வு மனம் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உகந்ததாக விளங்குகினறன.இந்த உருத்திராக்க மணிகள்,இந்தியாவின் சில இடங்களிலும் தென் கிழக்காசியாவிலும் வளரும் மரங்கலிலிருந்து பெறப்படுகின்றன. பொதுவாக நோய்களை நீக்குவதற்கும், தியானம் செய்வதற்கும் ஆசிய மக்களால் பரலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

உருத்திராக்க மணிகள் அணிபவர்களுக்குக் குறைந்துள்ளதையும் அவர்கள் கண்டனர். இவ்வாறு
மன அழுத்த நிலை குறைவது, தொடர்ச்சியாகச் சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில்
உட்கொள்வதால் மட்டுமே செய்ய முடிந்துள்ளது. உருத்திராக்க மணிகள் ஆக்கபூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன.

இந்த நிலையில் ஒருவரின் இதயதுடிப்பு,இரத்தச் சுற்றோட்டம், என்டோ கிரைன் சுரப்பிகளின்
[Endocrine glands] செயல்பாடுகள், நியூரோன்களின் [Neurons] செயல்கள்,சுவாசித்தல் ஆகியவை
சாதாரண நிலைக்குக் கொண்டு வரப்படுகின்றன.இந்த நிலையில் ஒருவன் தன்னை அதிகளவுக் கட்டுப்
பாட்டுக்குள்ளும் வைத்துக் கொள்ள முடிகிறது. அதாவது உடலில் தன் முனைப்புடன் செய்யும் செயல்களை மட்டுமன்றி, தன்முனைப்பு இன்றிச் செய்யும் செயல்களையும் கூட கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள
முடிகிறது.

யோகிகள் வியத்தகுவகையில்,மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்திருக்கின்றனர்.
அதாவது உடலில் தன்முனைப்புடன் கூடிய செயல்கள், தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்கள்
இரண்டையும், குறிப்பாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தக் கூடியவர்கள் இருந்தனர்.இவர்கள்,உடலின் பாதுகாப்பிற்கு எந்த விதத் துணிகளும் அணியாமலேயே இமாலய மலையின் கடுங்குளிரைத் தாங்கினார்கள். இவர்கள் தமது உடலிலுள்ள வெப்பத்தை வெளிக்கொணரும்போது அதைக் கட்டுப்படுத்தி அதன் வழி குளிரைத் தாங்கினார்கள். இது சாதாரணமாக செய்யத்தக்க செயல் அல்ல.

உத்திராக்க மணிகளுக்குச் சில விளக்க முடியாத, ஆனால் வியக்கத்தக்க மின்காந்தாப் பண்புகளும்,
ஊசி அடுத்த முறைப் பண்புகளும் [Acupressure] உண்டு என்பதைப் ஆய்வாளர்கள் எடுத்துக்
காட்டியுள்ளார்கள். கழுத்தைச் சுற்றி உத்திராக்கத்தை அணிவதால், அது இரத்தச் சுற்றோட்டத்தைக்
கட்டுப்படுவதுடன் நமக்கு உகந்ததாகவும் ஆகிறது. ந்மது இதயத்துடிப்புகளை கட்டுப்படுவதால்
சாத்தியமாகிறது.

உடலில் அல்லது மனதில் அசாதாரண நிலையோ அன்றேல் ஏதாவது நோயோ இருந்தால் அவற்றைச்
சுட்டிக் காட்டும் இரத்தச் சுற்றோட்டம் விளங்குகிறது.எடுத்தக்காட்டாக ஒருவர் உயர்ந்த மன அழுத்த
நிலையையோ அன்றேல் உறுப்பு உறுப்புகளில் சீர்கேட்டையோ உணரும் நேரத்தில் அவருடைய இரத்தச்
சுற்றோட்ட வீதம் அதிகமாகிறது. இதற்கு மாறாக இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்துவதால்
அவருடைய மன அழுத்த நிலை குறைகிறது. சோமடைசேசன்[Somatisation] அதாவது சீரற்ற சுவாசமும்
இரத்தச் சுற்றோட்டமும் கட்டுப்படுத்தப்பட்டவுடன் அதற்கான காரணி அதன் முக்கியத்துவத்தை இழந்து
விடுகிறது.இந்த அடிபப்டை விதிமுறையைக் கொண்டே எல்லா சைகோ பார்மகோலொf஢ன்[Psycho
pharmacological] மருந்துகளும் செயல்படுகின்றன். இரத்தச் சுற்றோட்டம் சாதாரண நிலைக்கு வந்ததும்,
ஒருவருக்கு மனத்தெளிவு ஏற்படுத்துவதுடன்,உடல் மனம் ஆகிய இரண்டின் செயல்பாடுகளிலும் கூர்ந்த
நோக்கு உண்டாகின்றது.

உத்திராக்கம் நமக்கு,உடலில் இலேசாக இருக்கும் உணர்வையும் சாந்தத்தை அளிக்கிறது.
அத்துடன் அது நமது ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது.உத்திராக்க மணிகளை
அணிவதால் மட்டும் ஏற்படும் வியத்தகு விளைவுகளைக் கண்ட பலர், இம்மணிகள் தெய்வீகமானவை
இறைவனால அனுப்பப்பட்டவை எனக் கருதி அவற்றை வணங்கினர்.

உண்மையான உத்திராக்க மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான் மக்கள்,அவை தமக்கு இர்த்த
அழுத்தம்,மனச்சோர்வு,மற்றும் நரம்புக்கோளாறு உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள்
ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரனம் கிடைத்ததாக அறிகிறார்கள்.அதை அணிவோருக்குத்
தன்னம்பிக்கை,உள்ளார்ந்த பலம் [Inner Strengh] இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கச்
செய்வதாக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பயன்பாட்டிலுள்ள உத்திராக்க மணிகளை விட, மிகச் சக்திவாய்ந்த ஒன்று முதல்
இருத்தொரு உருத்திராக்க மணிகளும் உண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும்,நம்மைச் சுற்றியுள்ள
ஆக்க பூர்வமான சக்திகளையும் நேர்ப்படுத்தி,அவற்றைச் செழிப்பு[PROSPERITY] படைக்கும் ஆற்றல்

[Creativity] உள்ளுணர்வுத் திறன்[Intutivity] எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை,தீமை பற்றி ஆய்ந்து
நோக்கும் திறன்,பாலின ஒத்திசைவு போன்ற செயல்படவும்,மேலும் வெற்றியுள்ள வாழ்க்கையை நாம்
வாழவும் உதவுகின்றன.

உத்திராக்கத்தை கொண்டு நோய் தீர்க்கும் முறையில் நம்மை உத்திராக்கத்தினால் எவ்வாறு
குணப்படுத்தக் கொள்ளலாம் என்பதைக் கற்றுக்கொள்கிறோம்.ஆக்கபூர்வமான நோக்கே எந்த
உத்திராக்கத்திற்கும் அதன் தனிச்சிறப்பாகும்.பயன்படுத்துவோருக்கு உத்திராக்கம் எந்தத்தீமையும்
அளிக்காது.இதிலுள்ள முகங்கள் அல்லது பகுப்புகளைப் பொறுத்து இதனுடைய தரமும்,இதனால்
விளைபயனும் வேறுபடும். உத்திராக்கம் கொண்டு நோய் தீர்க்கும் முறையில்,வாழ்க்கையில் ஏற்படும்
வேறுபட்ட தொல்லைகளையும்,நோய்களையும் எவ்வாறு உத்திராக்கத்தைக் கொண்டு தீர்க்கலாம் என்பதை
அறிந்து கொள்கின்றோம். இந்தச் செயல்திட்டம் உத்திராக்கத்தின் ஒவ்வொரு பண்பையும் அதன்
பயன்பாட்டையும் குறித்து விளக்குகிறது.

6. அடிக்கடி எழுப்படும் வினாக்கள்.

உத்திராக்க மணிகள் என்றால் என்ன? அவை எங்கே கிடைக்கின்றன?

எலியோகார்ப்பS கனிற்றால் றொக்Sப் [Elaeocarpus Ganitrus Roxb] என்ற தாவர இனப்
பெயரைக் கொண்ட உத்திராக்க மரங்களில் விளையும் பழங்களின் விதைகளே உத்திராக்க மணிகளாகும்.
இந்த மரங்கள் பெரும்பாலும் தென்கிழக்காசியத் தீவுகளான f஡வா,சுமத்திரா,டாருசலம்(போர்ணியோ)
பாலி,இரியன் fயா,தீமோர் போன்ற நாடுகளிலும், நேப்பாளம், இந்தியாவின் சில பகுதிகளிலும்
காண்ப்படுகின்றன. இந்த உத்திராக்க மரங்களில் 75 சதவீதம் இந்தோனேசியாவிலும், 25 சதவீதம்
நேப்பாளத்திலும், 5 சதவீதம் இந்தியாவிலும் காணப்படுகின்றன். உருத்திராக்க மணிகளின் மேற்பகுதியில்
பிளவுகள் உண்டு. இவைகள் முகங்கள் என அழைக்கப்படுகின்றன.

உத்திராக்க மணிகளின் சிறப்புத்தன்மை என்ன?

ஆசியர்கள் மரபு வழியாக உத்திராக்கத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆசியாவின் யோகிகளும்
துரவிகளும் உத்திராக்கத்தை வெறுமனே அணிவதால் மட்டும், அவர்களுக்கு வியத்தகு முறையில் அதிக
அளவு சாந்தியும்,குறிப்பிடத்தக்க மன அடக்கத்துடன் நீண்ட நேரம் தியானம் செய்யும் ஒரு முகக்குவியும்
ஏற்பட்டத்தைக்
கண்டனர்.


* உத்திராக்க மணிகள் தியானத்திற்கு மட்டுமே பயன்படுகின்றனவா?

இவை ஒரு குறிப்பிட்ட ஒரு பின்னிணியுடையவர்களின் பயன் பாட்டிற்கும் மட்டுமே உள்ளனவா?

இந்த உத்திராக்கத்தினை ஒரு குரு மூலம் அல்லது சான்றோர்கள் மூலமும்,அவர்களின் பெறுவது
சிறப்பாகும்.நல்ல உத்திராக்க மணிகளை இவர்கள் மூலம் பூநf செய்து,உரு ஏற்றி கொடுக்கும் போது
அணிவதனால், ஒருவருக்கு சாந்தி,மன அமைதி,கூர்ந்த நோக்கு,ஒருமுகக் குவிவு ஆகியன கிட்டுகின்றன.
இத்தகைய மனோநிலை தியானம் செய்வதற்கும்,இன்றைய உலகில் மனம் தொடர்பான செயல்பாடுகளுடன்
கூடிய தொழில் புரியவர்களுக்கும் உகந்ததாக அமைகிறது. ஒரு முகக் குவியும், கூர்ந்த நோக்குமே
எந்தத்துறையிலும் வெற்றியீட்டுவதற்கு மிக இன்றியமையாத பண்புகளாகும்.

ஐந்து முகப்புள்ள உத்திராக்க மணிகள் தவிர, ஒன்று முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள மணிகளும்
கிடைக்கின்றன.பதினைந்து முகப்புகள் முதல் இருப்பத்தியொரு முகப்புள்ள மணிகளும் கிடைக்கின்றன.
எனினும் பொதுவாகக் கிடைப்பதில்லை. இருபத்திரண்டு முகப்புகள் முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள வரை
உத்திராக்க மணிகள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இந்த உத்திராக்க மணிகள் மிகவும் ஆற்றல்
வாய்ந்தவை. அத்துடன் அவற்றிகு சில சிறப்புப் பயன்பாடுகளும் உண்டு.இந்தப் பல்வேறு முகப்புடைய
மணிகள் மனிதனுடைய ஆளுமையையும், மனநிலையும் ஆக்கபூர்வமான வழியில் மாற்றுகின்றன.

உத்திராக்க மணிகள் அனைத்தும் மனித குலத்தின் பயன்பாட்டிற்குகாகவே உள்ளன. இந்த உத்திராக்க
மணிகள் நமது மனம்,உடல்,ஆத்மா அனைத்தையும் மீண்டும் இளமை பெறச்செய்யும்.இம்மணிகளுக்கு
இயற்கைக்குகந்த ஆற்றலுடன்,தெய்வீகமானவை. புராதன இந்திய நூல்களிலும்,பெளத்தர்களது
நூல்களிலும் இந்த மணிகளைப்பற்றியும், அவற்றின் ஆற்றல்கள் பற்றி குறிப்புகள் உண்டு.

* வேறுபட்ட முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்த்து அணியலாமா?

பல்வேறு முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்ந்து அணியலாம். இவ்வாறு
சேர்த்து அணிபவருக்கு வேறுபட்ட மணிகளின் தனிப்பட்ட ஆற்றலை ஒரே நேரத்தில் உணர
முடியும். ஒருவர், குறிப்பிட்ட எண்ணுள்ள முகப்புகளைடைய மணிகளினால் செய்யப்பட்டதை கூட
அணியலாம்.

* எல்லோரும் உத்திராக்கத்தை அணியலாமா?

அணியலாம். பால்,வயது,பண்பாடு,இனம்,நிலம்,சமயப்பின்னணி குறித்த எந்தவிதப்பாகு
பாடுமின்றி எல்லோரும் இதை அணியலாம்.

எட்டு வயதுக்குட்பட்டவர்களால் எல்லா மணிகளையும் அணிய முடியாது.

* உத்திராக்கத்தின் தாக்கத்தை ஒருவர் உணர்ந்து கொள்ள எத்தனை நாட்கள் ஆகும்?

ஒருவர் தனது உள்ளங்கையில் உத்திராக்கத்தைப் பிடித்த மாத்திரத்திலேயே
அதனுடைய குறிப்பிடத்தக்க தாக்கத்தை உணர முடியும் என்பது வெளிப்படை. இது
ஆற்றலோடு இலேசக அதிர்ரும் சக்தியுண்டு. [இது அவரவர் உடல் மின்சக்தி ஆற்றலைப் பொறுத்தது]

* இந்த உத்திராக்க மணிகளுடைய உண்மைத் தன்மையை எவ்வாறு சோதிக்கலாம்?

நீரில் மூழ்கும் மணிகள் உண்மையானவை; நீரில் மிதக்கும் மணிகள் போலியானவை
என்ற அடிப்படையில் நிகழ்த்தும் சோதகள் சரியானவை அல்ல.மரத்தினால் செய்யப்பட்டு
உள்ளே ஈயத்தை அடைத்துள்ள மணிகள் கூட நீரில் எளிதாக மூழ்கிவிடும். இவற்றை
நம்பகமான இடத்தில் -நம்பிக்கையான நண்பர் மூலம் பெறுவது சிறந்த வழியாகும்.

* ஒரு நல்ல உருத்திராக்கத்தின் நாம் எவ்வாறு தேர்தெடுக்கலாம்?

உத்திராக்கத்தின் உருவம்,அளவு பற்றி பலருக்கு குழப்பம் ஏற்படுகின்றது.
இவை குறித்து அதிகம் கவலைப்படவேண்டாம். நன்கு வரையறுக்கப்பட்ட
முகங்கள்,சிறு மணிபோன்ற அமைப்புகள்,மேடுபள்ளக் கோடுகள் இவையெல்லாம்
இயல்பானதாக அமைந்துள்ளனவா என்று பார்க்கவேண்டும். அத்துடன் நடுவிலுள்ள
துளைக்கு அருகில் வெடிப்புகள் இல்லாது இருக்கின்றனவா என்றும் பார்க்க
வேண்டும். சிறிய அளவிலுள்ள மணிகள் கூட மங்களகரமானவைகள்.

* உத்திராக்கத்தை அணியும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

உத்திராக்க அணிந்திருக்கும் போது செய்யவேண்டியவை,செய்யக்கூடாதவை
என்று எதுவுமில்லை. நமது புனித நூல்களின்படி உத்திராக்கத்தை எப்போது
அணியலாம். அவற்றை நம்பிக்கை,மரியாதை,அன்பு ஆகிய பண்புகளுடன் அணியவேண்டும்.

* இந்துக்கள் மட்டும் இதை அணியலாமா?

இல்லை. எல்லோரும் உத்திராக்கத்தை அணியலாம். சூரியன்,சந்திரன்,ஆறுகள்
கோள்கள் ஆகியவற்றிற்கு மதம் என்பது ஒன்றில்லை.

* உத்திராக்க மணிகள் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?
எத்தனை ஆண்டுகளுக்கு இவை இருக்கலாம். இவற்றை நன்கு பாதுகாத்து
வைத்துக் கொண்டால் தலைமுறை தலைமுறையாகக்கூட வைத்துக் கொள்ளலாம்.

* வேறு எந்த வழியில் உருத்திராக்கம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும்

ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.முடிந்தால் சூரிய
அSதமனத்திற்கு பின்னர் இரண்டு ஐந்து முக உருத்திராக்கங்களை அந்த நீரில்
அமிழ்த்துங்கள்.காலையில் எழுந்ததும் வேறு எதையும் உண்பதற்கு முன்னர்
அந்நீரைக் குடியுங்கள். இவ்வாறு செய்வதற்கு பித்தளைக் குவளையைப்
பயன்படுத்த வேண்டாம்.

* தீடீரென்று ஏற்படும் நரம்புத்தளர்ச்சி உருத்திராக்கம் உதவுமா?

ஆம். ஒரு பெரிய அளவுடைய ஐந்து முக உருத்திராக்கங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியால் நரம்பு தளர்ந்து,குளிராக உணர்ந்த போதெல்லாம் வலது
உள்ளங்கையில் ஐந்து முக உருத்திராக்கத்தை வைத்து பத்து மணித்துளிகளுக்கு இறுக
மூடிக்கொள்ளூங்கள்.நீங்கள் உங்கள் மனத்திடத்தை மீண்டும் பெறுவதுடன்,உங்கள்
உடலிலும் சூடு ஏறத்தொடங்கும்.

* ஒரு குடும்பத்தில் வாழ்பவர்கள் கழுத்து மாலைகள்,fபமாலைகள்

உருத்திராக்க மணிகள் ஆகியவற்றை மாற்றிக் கொள்ளலாமா?
இல்லை. உருத்திராக்கத்திற்கு அதை அணிபவருக்கும் இடையே ஒருவகை
உறவுண்டு. இது மிக அந்தரங்கமானது. இதை வேறோருவருடனும் பகிர்ந்து
கொள்ளக் கூடாது. ஆனால்,இவற்றை வாழ்விறுதி விருப்பப் பத்திரத்தில்[Will]
எழுதி அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கலாம்.

அன்புடன்
கிருஷ்ணன்
சிங்கப்பூர்

விதியை வெல்லுதல்!

வினை முற்றுக்குத் திருமுறைப் பாடல்கள்!

வாழ்க்கையை நல்வழிப்படுத்தி ஆன்மாவை உயர்னிலையடையச் செய்வதற்கு மதங்கள் உதவி
செய்துள்ளன. மேலும், மதங்கள், அந்தந்த மக்கள் பேசுகிற மொழிகளையும் வளப்படுத்தி அம்மொழிகளில்
சிறந்த இலக்கியங்களையும் அளித்திருக்கின்றன. சைவம், வைணவம், சமணம், பெளத்தம், கிருத்துவம்,
இசுலாம் ஆகிய மதங்கள் தமிழ் மொழியை வளப்படுத்தி அதில் சிறந்த இலக்கியங்களைக் கொடுத்திருக்கின்றன.


திருவாசகத்தில் அமைதுள்ள ஐம்பத்தொரு பதிகங்கள் மனித பிறவியை உயர்த்துவதாகவே அமைந்துள்ளது. அதில் சிவபுராணம் கயிலாயம் போல் உயர்ந்திருக்கிறது.சீவனான இந்த ஜீவாத்தமாகள் அனைத்தும் சிவனை நாடி பயணித்து,பல படித்தரங்களை கடந்து, பக்குவமாகி,பின் முடிந்த நிலையான வீடு(முக்தி) பெறுவதை மாணிக்க வாசகரின் சிவபுராணத்தில் காணலாம். திருமுறைகளில் இதனை ஞான ஒளியாக கொள்ளலாம். திருவாசகத்தில் பல இடங்களில் இந்த பிறவியின் வினை முற்று வரிகளை நாம் காணலாம்.

'' பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் பெய்கழல்கள் வெல்லக''
'' மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி''
'' முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்''
'' மெய்யே உன்பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்''
'' அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று ''

இப்படி பலவிடங்களில் பிறவி பெரும் பிணி தீர சிவனை தியானியுங்கள் என்கிறார் மாணிக்க வாசகர்.

நாம் செய்கிற நல்வினை,தீவினைகளே நமக்கு ஏற்படுகின்ற இன்பதுன்பங்களுக்குக் காரணம்,வினைக்குக்குரிய பயன்கள் தாமாகச் செய்தவரைத் தேடி வருவதில்லை.வரவும் முடியாத வினைப் பயன்களைச் சேர்ப்பித்த அறிவுள்ள ஒருவன் வேண்டும்.அவன்தான் இறைவன்.வண்டி தானாக ஓடாது அதை ஓட்ட அறிவுள்ள ஒருவன் தேவை.இதை நம்புகிறவர்களும், நம்பாதவர்களும் உள்ளனர்.புராணங்களும்,காப்பியங்களும்,காவியங்களும் விதியை மறுக்கவில்லை.

திருவள்ளுவரும் ''ஊழிற் பெருவலி யாஉள? என்றே கேட்கிறார்
விதியை அடியார்கள் மறுக்கவில்லை.அதை வென்று விடலாம் என்கிறார்கள். விதிப்பயன்,வினைப்பயன்,ஊழ்வினை என்பார்கள் என்பவர்களுக்கு விமோசனம் உண்டு. எப்படி?

இறைவனை உறுதியாகப் பற்றி நிற்பதுதான் அந்த வழி.சான்று சிலவற்றை காணலாம்.
திருஞான சம்பந்தப் பெருமான் முதலாம் திருமுறையில், திருநீலகண்டப் பதிகத்தில் ''இறைவனை நெறியாகட் தொழுபவரை வினைப்பயன் வந்து தீண்டாது'' என்று ஆணை இட்டுச் சொல்லியுள்ளார்,

அவ்வினைக்கு இவ்வினை யாம் என்று சொல்லும் அகது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உந்துமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம் பிரான் கழல் போற்றும் நாம் அடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம் [-- திருமுறை --1]

[முற்பிறவிகளில் செய்யப்பட்ட வினைகளுக்கு ஏற்றபடி இந்தப் பிறவியில் இன்ப துன்பங்கள்
வருகின்றன மட்டும் அறிந்து கொண்டிருக்கிறீர்கள் ஆனால், அந்த வினையிலிருந்து உய்யும்
வழிபற்றி யோசிக்காமல் இருப்பது உங்களுக்குக் குறையல்லவா? அடியார்களாகிய நாம் நம்
கைகளைக் கொண்டு செய்யக்கூடிய சிவத்தொண்டுகளைச் செய்து எம்பெருமானின் திருவடிகளை
வணங்கினால், முற்பிறவி வினைப்பயன்கள் வந்து தீண்டா, திருநீலகண்டத்தின் மேல் ஆணை]


இந்தப் பதிகத்தில் பத்துப் பாடல்களிலும் ''தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்'' என திருஞான சம்பந்தர் அருளி உள்ளதாக அன்பர்கள் எண்ணிப் பார்க்கத் தக்கவையாகும்.


முனைவனைத் தொழுதால் வினை நீங்கும் என்பதைட் திருஞான சம்பந்தர் வேறு இடங்களில் விளம்பி
இருக்கின்றார். திருவுடை மருதூர்ப் பதிகத்தில் அவர் திருவாக்காக வந்துள்ள பாடலாவது:--
'கழுலும் சிலம்பு ஆர்க்கும் எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க்கு உழலும் வினைபோமே''

''கருது சம்பந்தன் மருதர் அடிபாடிப்
பெரிதும் தமிழ்ச்சொல்லப் பொருத வினைபோமே''

திருநாவுக்கரசர் இறைவனை முறைமையால் தொழுபவர் முற்பிறவி வினைகளை திண்ணமாக நீங்கிக் கொள்ள முடியும் என்று ஊக்க மூட்டுகிறார்.
''உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று
மெள்ள உள்க வினைகளும் மெய்ம்மையே
புள்ளினார் பணி புள் இருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே !'' [-- திருக்குறுந்தொகை--89]

ஞான சம்பந்தர் 'நீலகண்டம்'என்றார்.நாவுக்கரர்,மெய்ம்மையே' என்றார். வள்ளல் பாதம் வணங்கி தொழுந்து மெள்ள நினைத்தால் மெய்ம்மையாக வினைகள் விலகும்.ஐயமில்லை. இந்த பதிகப் பத்தாம் பாடலும் இதே கருத்தை உரைக்கிறது
'அரக்கனார் தலை பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்பபார் உறை புள்ளிருக்கு வேளூர்
விருப்பினார் தொழுவார் வினை வீடுமே'
[--திருமுறை-10]

வினையை அறுப்பவன் வேத நாயகன் சிவநாயகன், இதைச் சொல்கிறார் செந்தமிழ்ப்பாட்டுடைச் சுந்தரர்,
என் வினையை அறுட்டிட்டு,என்னை ஆளும் கங்கா நாயகரே! என அவர் பாடி முறையிடுகிறார்

'எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி
இங்கே என் வினையை அறுத்து இட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே! கழிப்பாலை மேயானே! [ - திருமுறை - 7]

இறைவனை இறுகப்பிடித்துத் திருமுறைகளைக் காதலோடு ஓதி வந்தால் வினைகள் நீங்கும்.
இதனை மூவருமே மொழிந்துள்ளனர். நாவலூரார்
'
''ஏரரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம் கொண்ட
காராகும் மிடற்றானைக் காதலித்திட்டு அன்பினொடும்
சீராரும் திருவாரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையாவல் வினைதானே' [-திருமுறை-7]

வல்லினையான ஊழ்வினைத் துன்பம் நம்மை அடையாமலிருக்க,இறைவனை நினைவதும் தொழுவதும்,போற்றுவதும், முறையிடுவதும்,வேண்டுவதும் அந்த வழி. குறுக்கு வழி இல்லை.குறுக்கு வழி சறுக்கலில்தான் விடும்.வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்தேடி அலைவார் உண்டு.திருமுறைட் தேனைத் தினமும் அருந்தி வந்தால் வினைப்

பயனுக்கு விமோசனம் முனைவன் அருளால் தானாக சேரும்.

திருமூலர் இதை எடுத்துச் சொல்கிறார்.இப்பிறவியில் நான் பெற்ற அனுபவங்கள், முன்னம் பிறவிகளில்
நான் செய்த வினைகளின் பலன்களே என்று நான் உணர்ந்து கொண்டேன்.ஆகவே,அவற்றின் மீது

நான் விருப்போ,வெறுப்போ கொள்ளவில்லை.அவ்வாறு நான் செய்தால் மீண்டும் புதியவினைகளை உருவாக்குவேன் என்பதும் எனக்குப் புலனாகி விட்டது.இறைவன் என் தலையில் எழுதியவை இவை என்று தெரிந்தது. அந்த நிலையில் நான் பெற்ற இன்ப துன்பங்களை, அவனுடைய அருளே என்று ஏற்றுக்கொண்டேன்.அவன் வழி செல்வதே மேல் என்ற உள் அறிவு பிறந்தது.இன்ப துன்பங்களிலே ஈடுபாடு இல்லை.இதுவே, நான் பெற்ற நலன்களுக்கெல்லாம் காரணமாயிற்று. இது திருமூலருடைய விளக்கம். அவர் அருளிய மந்திரத்தைப் பார்க்கலாம்.

''தான் முன்னஞ் செய்த விதி வழி தானல்லால்
வான் முன்னஞ் செய்து அங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோள் முன்னஞ் சென்னி குறி வழியே சென்று
நான் முன்னஞ் செய்ததே நன்னிலம் ஆனதே ''

நமது இந்து சமயம் மறுப்பிறப்பு உண்டு என்ற நம்பிக்கை கொண்டது. ஒரு மனிதனின் பிறப்பானது
அவனது முற்பிறவி வினைக்கு ஏற்ப அமைகிறது.அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய்
இருப்பது வரை அனைத்தும் கருமம்,வினையை சார்ந்தே இருக்கிறது.

இறை என்கிற ஞானம் இல்லை எனில் இப்பிரபஞ்சம் முழுவது அறியாமையில்தான் மூழ்கி கிடக்கும். எல்லா உயிர்களும் அறியாமையோடுதான் வாழும். தெளிவு என்பது,இறைவனுடைய கருணையால்,அன்பால் ஏற்படுவது. நம்மை நாமே உணர்வதற்கு,உங்களை உங்களுக்கு உணர்த்துவதற்கு,அறியாமை என்னும் இருள் இறைவன் படைக்கப்பட்டது.இதில் நாத்திகச் செயலும்,எண்ணமும் உள்ளடக்கம்.நாத்திகம் ஆதிக்கம் அல்லது அறியாமை என்கிற செயல் கிளர்ந்து எழும்போதுதான், அங்கு சிவம் என்னும் சோதி,பிழம்பு போராடி வெற்றி பெறுகிறது. சிவ சோதியில் தெளிவும்,ஞானமும் ஒளிர்கிறது. இதனைதான் திருமூலர் இப்படி விளக்குகிறார்.

சிவபெருமானுடைய திருவடிகள் என்னுடைய தலையில் வைக்கப் பெற்றேன். அவனுடைய திருவருளால்,
பிறவித்தளையை நீக்கிக் கொண்டேன்.இந்த உலகத்தில் உறவு,பந்தம்,பாசம் என்று வளர்க்கும் நிலையை
மாற்றி இறைவனுடைய திருவடிகளில் சேர்ந்து, தன்னை இழந்து நிற்கும் ஆற்றல் பெற்றேன். அவ்வகையில்
இறைவனுடன் ஒன்றியிருக்கும் ஒப்பற்ற பேறு பெற்றேன். இனிமேல் எனக்கு இறப்பு,பிறப்பு என்பது கிடையாது. சிவப்பரம் பொருளை நான் கண்டு கொண்ட காரணத்தால்,இந்த பேறுகளெல்லாம் எனக்குக் கிடைத்தன என்கிறார் திருமூலர்.

''ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்றானேன்
அழிந்தாங்கு இனி வரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார்புடைய சிவனைக் கண்டேனே''

விதியை வெல்லுதல்

வினைகளையும், பிறவிகளையும், விதியையும் மாற்றிக்கொள்ள முடியுமா?
இறைவனாலும் மாற்றியமைக்க முடியாதது விதி என்றால்,அது ஆஇறைவனின் இஆறைத் தன்மையையே கேள்விக்கு஡஢யதாகச் செய்யும். இறைவனாலும்கூட விதியை மாற்ற முடியாது என்றால், நமது சமயத்தின் அஸ்திவாரமே ஆட்டங்கண்டுவிடும். பிரார்த்தனைகளுக்கு அங்கு ஆஇடமே கிடையாது.

வழிபாட்டில் 'காம்ய வழிபாடு', 'நிஷ்காம்ய வழிபாடு' என்று ஆஇரு வகையுண்டு. எதையேனும் வேண்டி, பெறுதலுக்காகச் செய்யப்படுவதே 'காம்யம்'. ஆ இறைவன்பால் அன்பால் இஆறைவனுக்கே அர்ப்பணமாகச் செய்யப்படுவது, 'நிஷ்காம்யம்'.

'கலையாத கல்வியும், குறையாத வயதும், கபடுவராத நட்பும்', என்ற பாடலில் அன்னை அபிராமியிடம் நீண்ட பட்டியலிட்டு பதினாறு பேறுகளையும் நிறையவே கேட்கிறார், அபிராமி பட்டர்.

இப்பாடலின் முடிவில் அபிராமி தோன்றி,

"மகனே, சுப்பிரமணிய பட்டா! எல்லாமே விதிப்படிதான் நடக்கும். உனக்கு இதையெல்லாம் அடைய உனக்கு விதியில்லை. ஆகவே நீ கேட்பது எதையுமே என்னால் தர ஆயலாது", என்று கூறினால், எப்படியிருக்கும்?

விதி என்றிருந்தக்கால், விதி விலக்கும் இருக்கும் அல்லவா?
விதியிலிருந்து விலகி நின்று விதிக்கெல்லாம் விலக்கு வழங்க வல்லான் இஆறைவன்.

கந்தர் அனுபூதியின் கடைசிப்பாடலில்,
"கருவாய் உயிராய், கதியாய் விதியாய்,
குருவாய் வருவாய்; அருள்வாய் குகனே! "


கதி என்பது மாற்றப்பட முடியாத General Plan. விதி என்பது அதற்குள் உள்ள மாற்றக்கூடிய அம்சம்.
விதியை, மதியால் modify பண்ண முடியும். விதியை மாற்றுமாறு ஆ இறைவனை ஆறைஞ்சுவதும் கூட
மதியினால் ஆவதுதான்.

ஒரு சிறிய கதை......

எழு நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. மைசூர்ப் பகுதியில் ஓர் ஏழை. செல்வம் வேண்டி நீண்டகாலம் திருமகளை உபாசித்துவந்தான்.

லட்சுமியும் தோன்றினாள்.

" உனக்கு செல்வம் ஆந்த ஜென்மத்தில் கொடுத்துவைக்கவில்லை."என்று கூறினாள். அந்த ஏழை, உடனடியாக 'ஆபத் சன்னியாச' முறையில் தன்னையே சன்னியாசியாக்கிக் கொண்டுவிட்டான்.

"அம்மா! 'சன்னியாசம்' என்பது மறுபிறவி போன்றதே! ஆகவே ஆப்போது எனக்கு செல்வம் வழங்க அட்டி
ஒன்றும் ஆஇல்லையே?" என்று லட்சுமியைக் கேட்டான்.

லட்சுமியும் பொன்மழையைக் கொட்டச் செய்தாள்.

அதை அள்ளப் போனவனிடம் கேட்டாள்,
"சன்னியாசிக்கு ஏனப்பா, இஆவ்வளவு செல்வம்?"
.......................................................................................................................................................

கைவினை செய்து எம்பிரான் சுழல் போற்றுவதே செய்வினை வந்து தீண்டாதொழிவதற்கு
உபாயம் எனத் திருஞான சம்பந்தப் பெருமான் உணர்த்துகின்றார்.

''வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்
பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியினுரி தோலார்
நாதா எனவும் நக்கா என நின்று
பாதந்தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன் நகராரே''
[திருமுறை 1-67-1 திருப்பழனம்]

' 'கற்றாங் கெரியோபிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலமேய
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்ற பாவமே'' [திருமுறை 1-80-1 கோயில் பதிகம்]

விதியை மாற்ற வல்லவன் ஆ இறைவன். விதியின் எந்த அம்சங்களை எல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறானோ, அவற்றை எல்லாம் மாற்ற வல்லவன் இஆறைவன்.

"விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றுமில்லையே!
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நம சிவாயவே!"
[திருமுறை 4, திருநாவுக்கரசரின் பஞ்சாட்சரப் பதிகம்]

" நவச்சிவாயம்" என்னும் நாமத்தை ஓதினாலே போதும் ஒருவனது இடர் மறைந்துவிடும்

அப்பர் வாக்கு. விண்ணளவுக்கு அடுக்கிவைத்த விறகுக் குவியல். அதனை எரித்துப் புகையாக்கும் நெருப்பு; சிந்தித்துப் பார்த்துச் சொல்லும்போது அது ஒன்றுமே இல்லை.நாதனின் நாமம் தீவினைகளை அழித்துவிடும்.

சிவஞானிக்கு வினைப்பயன் நுகர்ச்சி வினை விளைவும் சாராமைக் கீழ்க் காணும் 3 செய்யுள்கள்
உணர்த்துகின்றன. இதனை சிவஞான சித்தியார்,

'' இவன் உலகில் இதம் அகிதம் செய்த எல்லாம்
இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்
அவன் இவனாய் நின்றமுறை ஏகனாகி
அரன்பணியில் நின்றிடவும் அகலும் குற்றம்
சிவனும் இவன் செய்தி எல்லாம் என் செய்தி என்றும்
செய்தது எனக்கு இவனுக்குச் செய்த தென்றும்
பாவம் அகல உடனாமி நின்றுகொள்வன் பரிவாற்
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே''
[இறைவன் எடுத்துச் சுமப்பானாக ஏன்று கொள்வதால் அடியார்களை வினைப் பயன் சார்வதில்லை]

வினைப் பயன் நியதி தத்துவத்தின் பிரகாரம் அனுபவித்துத் தீர வேண்டும்,அல்லது முறைப்படி பிராயச்சித்தம் செய்தாலும் தீரும் என ஆகமங்கள் கூறுகின்றன.

மனுநீதிச் சக்கரவர்த்தியின் மைந்தன் திருவாரூரில் பசுவின் கன்றைத் தேர்க்காலில் நசுக்கிச் கொன்ற
பாவம் தீர ''மறை மொழிந்த அறம் புரிதல் தொன்று தொடுநெறியன்றோ தொல் நிலங்கால் என்று!''
[அதாவது, பிராயச்சித்தம் செய்து பாவத்தைத் தீர்க்கலாம் என்று] அமைச்சர் கூறியதை கேளாது

''தருமம் தன் வழிச் செல்கை கடன்'' என்ற நிலையில்
''தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது,
மண்ணவர்கண் மழைபொழிந்தார் வானவர் பூ மழை சொரிந்தார்
அண்ணலவன் கண்ணெதிரே அணி வீதி மழவிடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப் பெருமான்''

''கண்டரசன் போற்றிசைப்ப விடை மருவும் பெருமானும்
விறல் வேந்தற் அருள் கொடுத்தான்''

என்ற பெரிய புராணச் செய்தி நியதி தத்துவம் ஆன்மாக்களைக் கன்மா அனுபவங்களைப் பெறச் செய்து,திருந்தி
வாழ்ந்து, முத்திக்கு ஆளாகச் செய்வதற்கு உரிய கருவியாக அமைகின்றன என்பதை அறிகிறோம்.

கூறு கூவல் மன்னும் அக்குடம் குறித்து நீள்கரை
ஏறல் உற்ற தன்மை நீ ஒருத்தரின்றி ஏறுதல்
வேறொருத்தன் அக்குடத்தை மீது நின்று எடுக்கவே
ஏறல் உற்ற தன்மையில் சிவன் திறத்து நின்றிடே

[உயிர்களுக்கு அப்பால் ஆனால் உயிர்களோடு அவையே தானாக உடனாயும் வேறாயும்
நிற்கும் பரம்பொருள் (இரும்பை காந்தம் வலிப்பது போன்று) மேலே இழுக்கவே தான்
ஆன்மாக்கள் உயரும் என்பதை மறுக்கும் உன் கூற்று, கிணற்றில் விழுந்த குடம் நீருடன்
தானே கரையேறும் என்று கூறுவது ஒக்கும். அக்குடத்தை மேலே இருந்தவாறு ஒருவன்
இழுக்கவே தான் அந்தக்குடம் கரையைச் சேரும் என்பதுபோல், ஆனமாவுடன் அதுவே
தானாக நிற்கும் சிவன் வேறாகி உயர்ந்து தன்பால் இழுக்கவேதான் ஆன்மாக்கள்
வினை, கன்மம் தொலைத்து சுத்தமாகி அழியா பேரின்பத்து அற்புத தில்லை மன்று
புகும் என்று தெளிந்து சிவவழிப்பாட்டில் நிற்கக் கடவாய்.]

பத்தாம் திருமுறை திருமந்திரம் முழுமையும் தத்துவக் கருத்துக்களை உட்கொண்டு விளங்குவதால்
அத் திருமுறையில் அகப் பாடல் குறிப்பு காணப்படுவதில்லை.மற்ற திருமுறைகளில் அகத்துறைப்
பாடல்கள் காணப்படுகின்றன.

திரு முறைகள் அவனது திருவடியை பிரியாது நின்று ஆஇன்பம் தூய்ப்பதற் குரிய பாடல்கள். அருளாளர்கள் உளமுருகி பாடிய பதிகங்களை நாமும் பாடி , அவன் அன்பையும் ,அருளையும் பெறுவதோடு நமது வினைகளிலிருந்து முற்றம் பெறுவோம.்

கிருஷ்ணன்,
சிங்கப்பூர்

ஓம் என்னும் பிரணவம!

ஓம் என்னும் பிரணவம!்

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே.அந்த ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ஑ஓஒ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ஑ம்ஒ என்ற ஒலி தோன்றுகிறது.

௾ந்த ''ஓம்-ஓம்''என்ற ஒலியையே பிரவணம் என்று கூறுவர்.உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும் , பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்.

இ ௾து அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ஑ஓம்ஒ. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவம்,

"அ" என்பது எட்டும் ஖ "உ"என்பது இ ௾ரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்யாவது போல் உடலும் உயிரும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு. அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.

மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு.

" ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்.

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.௾இதனைச் சிலர் இப்படியும் கூறுவார்கள்: அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் ஖ இ ௾ணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.

இச்சிவசக்திவடிவமே, சொரூபமேவரி வடிவில் "ஓ" என பிள்ளையார்சுழியாகவும்,"உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ,ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும்,சான்றோர்களும் சொல்கிறார்கள்.௾இதனை திருமூலர், திருமந்திரத்தில் :

" ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "

முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது ஒரே சொல்லாகவும்,இ ௾ரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண்டம் தரிக்கும் பொழுதும்அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே தோன்றும், மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும், மூன்றெழுத்தையும்அதன்விளக்கத்தையும் , பேதங்கள் பலவாறாகவும் , நான்காவது வரிக்கு இ௾தைச் சதா உச்சரித்து தியானிப்பதால் முக்தி - உயர்ந்த சித்தியும் கிட்டும் என்பதைப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

முதல் எழுத்து :

"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
-- என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.



சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :

" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- --என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்கும் முதல் எழுத்தாகவும் ௾இதுவே "அ" உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இ ௾துவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "

-என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,

அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில் ,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு ஆதியாகி "

"அகாமுதல் அவ்வைமுத்தும் ஆதியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "

--என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்.

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தபடி இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது. ஆண்டவன் இவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார் என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்


"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு , அல்லது மேல் வாயைத் தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது உண்டாகும்எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக இருந்துஅகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.

இதை விளக்கும்படி திருமூலர்,

" ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும்" என்று கூறியுள்ளார். ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம் எனமித்து ஒலி எழுப்புவது.அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின்தோன்றிக் காத்தல் தொழிலையும் , மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.

"ஓம்" எனும் தாரக மந்திரத்தைத் தனிமையாக இருந்து ஏகாந்த தியானம்செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம்அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும்,உலகையும் மறந்து நிற்க , ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து,அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும்.இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால்ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியைத் தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.

You see, there is no gain without pain.

ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படியொரு சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம்.வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம். Lateral Thinking போன்றவை எளிதானவைதானே!

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதைஉண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாதுபத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்கவேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிடவேண்டும்.

இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில் குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது'ஓம்' என்ற மந்திரத்தை மனதால்நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும்.இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன் குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும்.உள் சுழற்சியால் மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டுடிருப்பதாக சொல்லப்படும் குண்டலிஅல்லது குண்டலினி என்னும் சக்தி எழுப்பும்.குண்டலியும் அடியுண்ட நாகம் போல் ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு ஆதரங்களில் பொருந்தி சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும். [ சித்தர்கள் 'விந்து விட்டவன் நெந்து கெடுவான்]என்பார்கள். காரணம் இந்த விந்துதான் பிரணாயமத்தின் மூலம் குண்டலி வழி சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம். கீழ் இறங்கினால் சிற்றின்பம்.

யோகியர் நாவை மடித்து இதனை உண்ணுவார். இந்த ஒரு சொட்டு அமுதம் சுவைதால் பசி,தாகம், தூக்கம் இல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம். அதுவே சிவநீர் என்பார்கள். இதனை விழுங்கினால் நாமும் காயசித்தி பலனை அடையலாம்.

இதனை திருமூலர் :

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாள்ர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.


இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு ௾ரண்டாகப்பிரிக்காது ௾ரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப்பின்பு இறக்கிப்புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். ௾வ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறிய ௾ல்லை. அவ்வாறு அறிந்தவர்கள் எமனைஎதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள். வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.



காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை.இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும்.உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும்சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் ௾ன்ப ஖ துன்பம் எல்லாவற்றிலும் ௾ருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.

நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்

தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை.இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும்.உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும்சேர்ந்ததே வாழ்வு.வாழ்வில் இன்ப ஖ துன்பம் எல்லாவற்றிலும் ௾ருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே ,விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.


இன்பத் தமிழ் எங்கள் மொழி
தமிழ் எமது மொழி
கிருஷ்ணன்
சிங்கப்பூர்

Saturday, March 18, 2006

ஆதி சக்தியான அம்மையின் வடிவம்

ஆதி சக்தியான அம்மையின் வடிவம்


முதற்முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுவது.
அவற்றுள்ளும் அம்மையாகக் கருதி வழிபடுவது முற்பட்டது.

பிரபஞ்ச சக்திகளில் நான்குவித சக்திகள் இணைந்து இவ்வுலகத்தையே படைத்துள்ளது. இச்சக்திகளுள்
முன்னோடியாக விளங்குவது ஆதி பராசக்திதான்.ஆதி பராசக்தியின் மூலமே பிரம்மதேவன்,மகாவிஷ்ணு,மகேஸ்வரன்,
சக்தி உட்பட நான்கு மகாசக்திகளாயினார். இந்த நால்வர்களையே சதுர்வேதங்கள் என்றும் குறிப்பிடலாம்.
இவர்களே சதுர் வர்ணகளும் ஆவர்.

பராசக்தி - பிரம்மதேவன் - மகாவிஷ்ணு - மகேஸ்வரன் இவர்களின் சக்திகளைக் கொண்டு நிபுணர்கள்
அறிவியல் நிபுணர்கள் விஞ்ஞான ரீதியில் வாயுக்களாகச் சுட்டியுள்ளானர்.

பராசக்தி - கார்பன் டையாக்சைடு [Carbon Dioxide]
மகாவிஷ்ணு - ஆக்சிஜென் [Oxygen]
பிரம்மதேவன் - நைட்ரஜன் [Nitrogen]
மகேஸ்வரன் - ஹைட்ரஜன் [Hidogen]

Asrto Physic என்ற விஞ்ஞான ஆய்வுவின் மூலம் இந்த நான்கு சக்திகளை அறிந்துக் கொள்ளலாம்.திரிமூர்த்திகள்
என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் ''எலக்ரோன்'' [Electron], ''நியூட்ரோன்''[Neutron],''புரோட்டன்''[Proton]
என்ற மூன்று சக்திகளுக்குட்பட்டவையே. எனவேதான் மகாசக்தியும் இம்மூன்று சக்திகளையும் தன்னையயே
வலம் வரவைத்துவிட்ட நியூக்லேயஸ் ஆகிறார். புராண காலத்தில் ஆதிபராசக்தியின் தலைமைத்துவத்தின் கீழ்
பிரம்மதேவன் சிருஷ்டிப்பதிலும், மகாவிஷ்ணு காக்கும் கடவுளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்வதற்கும்
பொறுப்பாளர்களாகின்றார்கள்.

நவீன சாஸ்திரப்படி கண்ணோட்டமிடுகையில் ஓர் அணுவின் நடுநாயகமாக அதிபாரசக்தியாகயே
திகழ்கின்றாள். அவளுக்குத் துணையாக எலக்ட்ரோன[Electron] பிரம்மதேவனும், 'நியூட்ரோனாக [Neutron]
விஷ்ணுவாகவும், ''புரோட்டோ னாக''[Proton] மகேஸ்வரனும் விளங்குகின்றனர்.
இதைக் கண்ணுறும் பொழுது இந்தச் சக்தியே பிரபஞ்சத்தில் ஆதியிலே வெளியான அரும்பெரும்
தத்துவங்களைக் கொண்ட ஒரு பெரி஢ய பொருளாக விளங்குகின்றாள்.

மகாசக்தி என்றாலே இரும்புச் சக்தி என்பது பொருள். ''கார்பன்''தான் உலகில் சக்தி பெற்ற உலோகம்.
இந்த உலோகமே காந்த சக்தி பெற்று உலகையே ஈர்க்கிறது. இச்சக்தி சூரியனில் அதிகமாக இருப்பதால்
மற்ற கிரகங்களையும் அதை சுற்றி வரச் செய்கிறது.பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடந்தபோதுதான்
இரும்புச்சக்தி வெளியானது.இதிலிருந்து செம்பு,சொர்ணம்,கனகம்,வைரம்
வெளியானது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால்தான் சங்க இலக்கியம் அம்மையைப் பழையோள் எனவும் குறிக்கிறது.
அம்மையின் உருவம் வெறும் பெண் உரு மட்டும் அன்று. முதற் பொருள் ஞாயிறும் அதன் ஒளியும்
போலவும்,மலரும் அதன் மணமும் போலவும்,தானும் தன் இயற்கை அருள் ஒளியும் என்று இரு திறப்பட்டு
இயைந்து நிற்பது.

இதனால் பரம்பொருளின் தொன்மைக் கோலம் அம்மையப்பர் உருவாகவும்,நீலச்செம்மேனி (கிருஷ்ணனின்
நீல நிறம்) உடையதாகவும் மறைகளிற் கூறப்படும். அவ்விறைவனது அருள் ஒளியே பெண்ணுரு ஆகும்.
அருள் ஒளி அல்லது அருளாற்றல் பல வகை ஆற்றல்களும் கொண்டு வழிபடுவது பண்டைய மரபாயிற்று.
இயற்கையின் ஆற்றல்களுள் மழைப்பெயல் உலகம் உய்ய,வாழ இன்றியமையாதது. நீர் இல்லாது உலகமில்லை.

திருவள்ளுவர் கூட கடவுள் வாழ்த்தில் வான் சிறப்பை கூறியுள்ளார்.
இத்தகைய மழைக்கு அதி தெய்வமுள்ள அருளாற்றலே மகா மாரியம்மன் ஆகும்.[மாரி-மழை] உலகியல் நடைபெறுவதற்கு மழை மிக முக்கிய துணைக்காரணமாகும். இவ்வருட்சக்தியையே பெண்ணாக உருவகப்படுத்தி, மக்கள் வழிபாட்டிற்குரிய தெய்வமாக,நமது முன்னோர்களான அறிவுடைச் சான்றோர்களை அமைத்தனர் என்று உணரும்போது அவர்களின் மதிநுட்பம் எத்துணை சிறப்புடையது என்று நமக்கு புலப்படுகிறது.தாய் அன்பே தலையாய அன்பு என்பதை உணர்ந்த நமது முன்னோர்களும், அருளாளர்கள்,

''அம்மை அப்பா'' எனவும்,
''தாயிற் சிறந்த தயாவானத்தத்துவனே'' எனவும்,
''தாயாயெனக்குத் தானெழுந்தருளி'' எனவும்,
''பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து'' எனவும் அழைக்கலாயினர்.

தாயுமான அடிகள்,
''பொல்லாத சேயெனில் தாய் தள்ளல் நீதமோ, புகலிடம் பிறிது முண்டோ '' எனவும்,
''அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னியென் மறை பேசும் ஆனந்த ரூப மயிலே''
எனவும் பாடியிருப்பது நினைவிற் கொள்ளத்தக்கது.

தந்தையின் அன்பைவிட தாயன்பே தலை சிறந்தது என்பதை உலகியலறிவால் உணர்ந்த நமது முன்னோர்கள்,
இறைவனின் அருளாற்றலை உலக நாயகியாக அகிலாண்டகோடி ஈன்ற அன்னையாக வழிபாடு செய்யலாயினர்.
பொல்லாத சேய்களின் பிழைகளைத் திருத்தி, ஜீவான்மாக்களைப் பரிபக்குவப் படுத்தி, இறைவன் திருவடிப்
பேற்றுக்கு ஆளாக்குவதே அம்மை செய்யும் அருட்பணியென்று பணியென்று சித்தாந்த சாத்திரம் நமக்கு
உணர்த்தும் உண்மையாகும். இந்த நிலையைத திருமூலர் தமது திருமந்திரத்தில்:-
஑ஒவாயும் மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவுங் கடந்த அரனுக்குத்
தாயும் மகளுத் தாரமு மாமே...ஒஒ
-- என்கின்றார்.
அதாவது, அளவிலா ஆற்றலும், அருளுமுடைய ஆதிசக்தியின் வரப்பிரசாதத்தால் வந்த திரிசக்தி
களாகிய பராசக்தி, மனோன்மணி,திரிபுரசுந்தரி, ஆகியோர் பரமசிவத்தோடிணைவதால் ஆக்கல்,காத்தல்,
அழித்தல் ஆகிய முத்தொழில்களும் நிறைவேறுகினறன.எனவே அந்த ஆதிபராசக்தியே எல்லாமாய் இருக்கிறாள்.

அருட் சக்தியாகிய அன்னை பல்வேறு நாமங்களில்,காசியிலிருந்து கன்னியாகுமரி வரை
சிங்கப்பூரிலிருந்து மலேசியா வரை,அதனையும் தாண்டி தென்கிழக்கு ஆசிய வரை,
ஏன் இன்றுஅமெரிக்கா, ஐரோப்பா வரை மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருகிறாள்.சிறப்பாக
தமிழ் நாட்டில்,சிங்கப்பூரில்,மலேசியாவில் ஆதிசக்தி அம்மன் ஆலயம் இல்லாத ஊரே இல்லை எனச் சொல்லலாம்.
மாரியெனத் தன்னருளை வாரி வழங்குவதால், மாரியெனப் பெயர் பெற்றாள் போலும். மக்கள் துயர் தீர்க்கும்
புற்றாய் மாமருந்தாய், மகேஸ்வரியாய் விளங்குகிறாள்.ஏழாவது கர்ப்பமாக பிறக்கவேண்டிய கிருஷ்ணனின்
கர்ப்பத்தினை எட்டாவது கர்ப்பமாக மாற்றி அமைந்தால் கருமாரியாக பெயர் பெற்றாள்.

சூரியன் மறைந்தாலும்,பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் மறையாது என்று எதற்கும் அஞ்சாது நாடு ஆண்ட
வெள்ளையர்கள்,மாரியம்மனுக்கு மட்டும் மிகவும் அஞ்சி நடுங்கினார்கள்.அம்மை நோய் என்று கேள்விப்
பட்டாலே இரு நூறு மைல் சென்று ஒளிந்து கொள்வர்.பெரும்பாலும் நடுத்தர மக்களுக்கும் ஏழை
மக்களுக்கும் கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகாமாரி,தன்னைச் சரணடைந்த ஏழை மக்களின்
வினையை வேப்பைலையால் நீக்கி வருவது கண்கூடு.

இந்தப் பிரபஞ்ச வாழ்க்கையில் விரும்புவார் விரும்புவதை எல்லாம் நல்கும் பரதேவதையாகிய தம் நிமித்தம் தனது
மெய்யன்பர்கள் விரும்புவதையும் நிறைவுசெய்கிறாள். சிலந்திப் பூச்சியானது தன்னிலிருந்தே தமக்கு வீடு
அமைத்துக் கொள்வது போலவே அம்மன் தமது அன்பர்கள், அடியார்கள் ஆகியோரை உறுதிமிக்க
மனதகத்தே இருந்து அருள்பாலிக்கிறாள்.

அன்னை மனத்தகத்தே இருந்து நல்ல எண்ணங்களை,நல்ல உணர்வுகளை தன்மைகளை எழுப்புகிறாள்.
அவர்கள் அதைச் சூழ்ந்து ஆழச் சிந்திக்கின்றனர்.அப்பொழுது அவர்கள் எண்ணத்தில் உருவெழச் செய்கிறாள்.
அப்பொழுது தாமும் அவர்களின் மனதோடு இருந்து அருட்பிரசாதமாய் பொழிந்து மகிழ்கின்றாள்

அன்னை அஞ்சொல் மொழியாள், அருந்தவப் பெண்பிள்ளை,
செஞ்சொல் மடமொழி, சீருடைச் சேயிழை,
தஞ்சமென்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு,
இன்சொல் அளிக்கும் இறவி யென்றாரே.

இயங்குதற்கு சக்தி தேவை. உலகம் இயங்குவற்கு இறைவனது ஒரு பங்கிலுறைந்து இருக்கிறாள்,
ஆதி சக்தியான அம்மை. இவள் ''கடவுளார் யாவர்க்கும் மேலையிறைவி'' ஆவாள்;
''புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியம்'';

''சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பராசக்தியாய் விளங்குபவள்'';

''இவள் எல்லா உலகங்களுக்கும் நாயகி'';
''நான்முகி,நாராயணி, சாம்பவி, சங்கரி, சாமளை,மாதங்கி'' --என்றெல்லாம் துதிக்கப்படுவள்.
இவளுடைய ''தாமம் கடம்பு; படை பஞ்ச பாணம்;தனு -கரும்பு''. இவளை அடியார்கள் ''பயிரவி;பஞ்சமி;
பாசாங்குசை;பஞ்சபாணி;சண்டி,காளி;வயிரவி; மண்டலி;சூலி; வாராகி; என்று ஏத்துவர்.

காரணம்,உலக வேதம் உலகமொழிகள் அனைத்திற்கும் அனாதியாயும்,ஆதியாயும் அமைந்திருக்கின்ற
ஓங்காரவடிவத்தோடுங் கூடிய எல்லாப் பிரபஞ்சங்களையும் ஈர்த்துக்கொண்டு அசைவறக்கிடப்பது சிவ
தத்துவம் என்னும் அற்புதம். அந்த அற்புதத்தினும் அதியற்புதமாக, ஹ்ரீங் கார வடிவத்தோடுங் கூடிய
காந்த சக்தியாய் எல்லாவற்றிலும் ஊடுருவி உயிர்ப்பாய் நிற்பது ஆதி சக்தியாம் சக்தி தத்துவம்.

இந்த ஆதிசக்தி வடிவம் பரபிரம்மாகிய சிவனின்று பிரிக்க முடியாத்தாய் அக்கினியிற் சூடு போலும்,
வெளியாகவும் மறைவாகவும் அதனோடு ஒடுங்கி உறைந்து நிற்பது. திரிபற்ற நிலையை இரண்டற்ற நிலை,
அர்த்தநாகரீச்சுர நிலை சிவசக்தி என்பார்கள் சான்றோர்கள்.சக்தியின் தத்துவம்

சக்தியின் தத்துவம்

இந்த ஆதிசக்தியையும் ஆதிசிவத்தையும் ஒன்றை விட்டு ஒன்றைத்தனியாக பிரிக்க முடியாது என்றாலும்,
உலக இயக்கத்திற்கு காரணமாகச் சிவத்திற்கு அசைவு,துடிப்பு,சலிப்பு ஆகிய தன்மைகளை உண்டாக்குகிறது
அந்த ஆதி சக்தி.அதனால்,சிவம் மறுநிலை எய்தி சூர்த்தெழுந்து படைத்தல்,காத்தல்,அழித்தல் என்னும்,
முத்தொழிலில் செய்ய முயல்கிறது.அதற்கேற்ப அச்சிவத்தொடு ஆதிசக்தி தன்மயமாகப் பராசக்தியை
படைத்துக்கொடுக்கிறாள். சக்தி கூடும்பொழுதுதான் எல்லா இயக்கங்களும் நடைபெறும்.


சக்தி கூடும்போது உருவமற்றதற்கு உருவமும்,நாமம் மற்றதற்கு நாமமும், குணமற்றதற்குக் குணமும்,
தெளிவற்றதற்கு தெளிவும்,நிலையற்றதற்கு நிலையும் உண்டாகின்றன. அதனால், அருட்பிழம்பாகிய ஆதிசக்தி
அந்தப் பராசக்தியின் உருவிலிருந்து,பிராஹ்மி,மகேஸ்வரி,கெளமாரி,வைஷ்ணவி,வாரகி,சாமுண்டி,துர்க்காதேவி,
ருத்திர காளி என அட்ட சக்திகள் துணையாகப் படைத்தாள்.இந்த சக்திகள்தான் இந்த பிரபஞ்சத்தில்
எண்ணிலடங்கா அற்புத செயல்களைச் செய்கின்றன.

எல்லா உயிர்களுக்கும் ஓங்கார பிரணவம் எப்படி அமந்திருக்கின்றதோ,எல்லா அசைவிற்கும் எல்லாத்
துடிப்பிற்கும், எல்லா இயக்கங்களுக்கும் உறைவிடமாக, ஹ்ரீங்கார பிரணவம் அமைந்திருக்கிறதென எல்லா வேதாந்த,
சித்தாந்த அருள் நிலைகளும், மகான்களும் முனிவர்களும்,மகரிஷிகளும் கூறியுள்ளனர்.

நமது இந்து சமயம் ஆதிச்சமயம் இந்து வேதம் ஆதிவேதம். அதில் சொல்லாதது ஒன்றுமில்லை.
அது பழமைக்குப் பழமையாயும்,புதுமைக்குப் புதுமையாயும்,விஞ்ஞானத்திற்கு விஞ்ஞானமாயும்,
மெய்ஞ்ஞானத்திற்கு மெய்ஞ்ஞானமாயும் நடைமுறைக்கேற்றவாறு அமைந்து இருக்கிறது.
அந்த வேதத்தை நன்கு ஆராய்ந்த அனுபவித்த, மாகபண்டிதர்கள், வேதரிஷிகள், சித்தகள் யாவரும் இந்த
ஆதிசக்தி இலட்சணங்களைப்பற்றி கூறும் பொழுது,இந்த மகாசக்தி, மூலாதாரத்தில் தீப்பிழம்பாகவும்
இருதயத்தில் ஞாயிறு ஒளியாகவும், நெற்றி உச்சியில் பூரண சந்திரனாகவும் காட்சி தருகிறாள்.
மேலும்,மந்திரத்தில் மந்திர சக்தியாகவும், குருவில் குரு குருசக்தியாவும், பிரமத்தில் பிரம சக்தியாவும்,
விஷ்ணுவில் விஷ்ணு சக்தியாவும்,சிவத்தில் சிவசக்தியாவும், இசையிலும்-நடனத்தில்,பாடலிலும் எல்லா
கலைகளிலும் இன்ப வடிவ சக்தியாவும்- மகாசக்தியாவும் அமைந்துள்ளாள்.

இதனை தாயுமானார் :--
எல்லாமுன் அடிமையே எல்லாமுன் உடைமையே
எல்லா முன்னுடைய செயலே
எங்கணும் வியாபி நீயெனச் சொல்லும்
இயல் பென்றிருக்க ஆதி வேத மெல்லாம்.
சர்வ அகிலத்திலும் அறுபத்து நான்கு கலையாய் இருப்பவள் அவளே.அவனன்றி அணுவும் அசையாது
என்கிறது அனுபவ உலகம். என்றாலும் அவளன்றி அவன் அசையவே மாட்டான் என்கிறது ஆதிவேதம்.
இச்சக்தியே முச்சக்தியாக வடிவெடுக்கிறாள்.

சதவ குணத்தில் சாந்தமாக பார்வதியாகவும், இராஜோத குணத்தில் வீரஉருவத்தில் துர்க்கையாகவும்,
தமோகுணத்தில் உக்கிர ருத்திர காளியாகவும் விளங்கி உலகு அனைத்து சீவன்களிலும், பல்வேறு
துறைகளிலும் பலவாறாக நல்வழிப்படுத்திப் பின் சிவ சன்னதியில் உறைகிறாள்.
இந்த முச்சக்திகளும் காரண காரியங்களுக்கேற்ப அவ்வடிவங்கள் ஒன்பது சக்தியாக[நவசக்தி] மாறி
நவராத்திரி நாயகியாக பூசனை செய்து அருள்பெற்று மகிழ்கிறோம்.அட்சரங்கள்,ஆதி ஒலி எழுத்துக்கள்
ஐம்பத்தொன்று.எனவே அம்பாளுக்கு ஐம்பத்தொரு பீடங்களை உண்டாகினார்கள். அவற்றுள் இன்றும் சிறந்து
இருப்பது காமரூபம், காசி,நேபாளம், கேதாரம், உஜ்ஜயினி, பிரயாகை, காமகோடி. இவைகள் பேரருள்மிக்க ஏழு சக்தி
பீடங்களாக இருக்கின்றன.

எனவே இப்பிரபஞ்சத்தாருக்கு பயம்,நயம் என்னும் இருவிதத்திலும் ஓயாது அருள் பாலிக்கும் மகா
சக்தி கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கிறாள்.இவளை வணங்குவோர் இரக்கமும் நயமும்,
நலமும், நற்சிந்தையும், அறச்சார்பும் பெற்று விளங்குவார்கள்.உண்மை மனத்தோடு தாயை வணங்கினால்
''தாயறியும் கன்றின் நிலை'' என்று நிலையும் நாம் பெறலாம்.''வேண்டத்தக்கது எதுவோ நீ அறிவாய்'ஒ

மெய்யன்பர்களிடம் அவர்களின் மனத்தகத்தே இருந்து நன்னோக்கம், நல்லுணர்வு தன்மைகளை
எழுப்புகிறாள். அன்பர்கள் அதை சூழ்ந்து ஆழச் சிந்திக்கிறார்கள். அவர்கள் எண்ணத்தில் உருவெழச்
செய்கிறாள்.அதைப் பிடித்துக்கொண்டு அவ்வுருவினை வெளிக்கொணர அன்பர்கள் படாது பாடு
படுகிறார்கள்.இடையில் இந்த நவீன உலகத்தில் பல இடைபாடுகள்,இடையூறுகளுக்கு ஆட்படுகிறார்கள்.
அவற்றைத் தமது அருளால் நீக்குயருள்கிறாள்.அவர்கள் எண்ணியபடி எண்ணம் நிறைவேறுகிறது.
அன்பர்கள் யாவரும் மன மகிழ்கிறார்கள்


அன்புடன்
சிங்கை கிருஷ்ணன்