Saturday, March 25, 2006

உத்திராக்கம்!

1. உத்திராக்கம் என்றால் என்ன?

உத்திராக்கம் மணிகள் எலியோகார்பS கனிற்றS றொக்Sப் (Elacocarpus Ganitrus Roxb)
என்றழைக்கப்படும் உத்திராக்க மரங்களிலிருந்து பெறப்படுகிறன. இவை தென்கிழக்காசியாவில்
குறிப்பிட்ட சில இடங்களில், f஡வா,கொரியா, மலேசியாவின் சில பகுதிகள்,தைவான்,சீனா,
தெற்காசியாவிலும் வளர்கின்றன.உத்திராக்க மணிகள் பயனுடன் கூடியவை.இவை ஆற்றல் வாய்ந்த
மின்காந்தப் (Electro- Magnetic) பண்புகளைக் கொண்டன. இவை அணிவோரின் அழுத்த நிலைகள்
(Stress Levels) இரத்த அழுத்தம்(Blood Pressure) மிக உயர்ந்த இரத்த அழுத்தம் (Hypertension)
ஆகியவைகளைக் கட்டுப்படுத்துவதுடன் அணிவோரிடம் சாந்தமான ஒரு உணர்வையும் தூண்டுகின்றன.
இவை அணிவோருக்கு ஒரு முகக்குவிவு (Concenration) கூர்ந்த நோக்கு (Focus), மந்த்திண்மை
ஆகியவற்றை மேம்படுத்துகின்றன். உத்திராக்கம் பல நூற்றாண்டுகளாக கீழ்த்திசைப் பண்பாட்டினராகிய
சீனர்கள்,பெளத்தர்கள், தாவோ, fப்பானியர்கள், சென் மதத்தோர், கொரியர்கள், இந்தியர்கள்
ஆகியோரிடையே பரவலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.கீழ்த்திசைப் பண்பாட்டின் இன்றியமையாப் பண்பான கூர்ந்த நோக்குத் தியானத்திற்கு உகந்ததாகக் கொள்ளப்படும் அமைதி, சாந்தம் ஆகியவற்றை இந்த மணிகளை இதயத்தைச் சுற்றி அணிவதால் பெறமுடிகின்றது எனக் கண்டுகொள்ளப்பட்டது.

ஒருவரின் ஆளுமையை மாற்றவும்,அவருக்கு நேரான நன்நோக்கு உண்டாக்கவும் வல்ல பலவேறு
ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உத்திராக்கத்தின் ஆற்றல் மிக்க பண்புகள்
உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த
போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது.குறிப்பாக,இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக்கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். க?஡S ராய் தலைமையிலான
அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே உத்திராக்கம் புகழ்பெற்றது.இவர்கள் உயிர்வேதியல் துறை
(Biochemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறைக(Psychiatry) பொது மருத்துவத்
துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து உத்திராக்கம் குறித்து ஆய்வு
மேற்கொண்டார்கள். இவர்கள் உத்திராக்கத்தின் தாம் ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன்,தாம்
கண்ட முடிவுகளை மீண்டும் செய்து காட்ட இவர்களுக்கு முடிந்தது.

உத்திராக்கத்திற்கு,சக்திமிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) காந்த முனைகளால்
ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை(Inductive) ஆகியன உள்ளன என்பதை இவர்கள் நிலை நிறுவினர்.மேற்கூறிய ஆற்றல்கள் உத்திராக்கத்தின் முகப்புகள் அல்லது முகங்கள் மேற்பரப்பிலுள்ள பகுப்புகளின் எண்ணிக்கை பொறுத்து அமையும். ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய உத்திராக்கத்தையோ அன்றேல் ஒரு தொகுதி முகங்கள் கொண்ட உத்திராக்க மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள்(Transformatiom in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம்,மனத்திட்பம், ஆகியன மாற்றம் பெறுகின்றன. மேலும் இந்த ஆய்வாளர்கள்,உத்திராக்க மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு,அதன் வழியாக மூளைக்கு செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் நிறுவினர்.

உயர்ந்த மன அழுத்தம் கூர்ந்த மனக்குவிவு ஆகியவை ஒருவருக்கு ஏற்படும் போது,மூளைக்கும்
மூளையிலிருந்து இரத்த ஓட்டம் பீறிட்டும் செல்வது நோக்கத்தக்கது. இந்த மணிகளின் துணையுடன்
ஒருவகைச் சாந்தம் ஒரு முகக்குவிவு, கூர்ந்த குவிவு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது.

இந்த ஆய்வாளர்களால் நரம்பு மாற்றிகள் (Neuro Transmiters) டொபமைன்(Dopamine),
செறொரின்(Serotinin), போன்ற செயல்பாடுகளில் உத்திராக்கமணிகளை அணிவதால் ஏற்படும்
தாக்கங்களையும் நிலைநாட்ட முடிந்தது. இத்தகைய தாக்கங்களினால் ஒருவரது ஆளுமையிலும்
மனப்பாங்கிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்கின்றன.உத்திராக்கத்தை அணிவோர், தமக்கு ஏற்படும்
ஏனைய நன்மைகளுடன்,அவர்களுடைய மன அழுத்த நிலை எதிர்பாராத அளவு குறைந்திருப்பதையும்
கண்டனர். இத்தகைய மன அழுத்த நிலைகுறைவு, இதுவரை சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்வதால் பெறப்பட்டுள்ளது மட்டுமே உருத்திராக்க மணிகள், ஆக்கபூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும், மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன. உத்திராக்க மணிகள் ஒருவரை 'அல்பா மன நிலைக்கு' (Alpha state of mind) இட்டு செல்கின்றன.

இந்த நிலையில் ஒருவரின் இதயத்துடிப்பு,இரத்தச் சுற்றோட்டம், என்டோ கிரையின் சுரப்பிகளின்
(Endorine glands) செயல்கள்,நியூரோன்களி (Neuron) செயல்கள்,சுவாசித்தல் ஆகியவை சாதாரண
நிலைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அத்துடன் ஒருவன் தன்னை அதிகளவுக் கட்டுப்பாட்டுக்குள்ளும்
வைத்துக் கொள்ள முடிகிறது.

அதாவது உடலில் தன்முனைப்புடன் செய்யும் செயல்களை மட்டுமன்றி, தன் முனைப்பு இன்றிச் செய்யும்
செயல்கலையும் கூட கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிகிறது. ஆகவே, இம்மணிகல் கீழ்த்திசை
மரபில் வியத்தக்க ஒன்றாகவும், இயற்கைக்கிகந்த ஆற்றல்களையும் கொண்டனவாகவும் கொள்ளப்பட்டன.

உன்மையான உருத்திராக்க மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கானோர்,இரத்த
அழுத்தம்,மனஅழுத்தம், மிக உயர்ந்த இரத்த அழுத்த்ம்,மனச் சோர்வு,நரம்புக்கோளாறு உட்பட்ட ஏனைய
மனம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து குறிப்பிடத்தக்க நிராவணம் கிட்டியுள்ளது என மீண்டும் மீண்டும்
உறுதி செய்கின்றனர். அத்துடன் உருத்திராக்கம்,அதை அணிவோருக்கு குறிப்பிடத்தக்க அளவு
மனத்திடத்தையும், உள்ளார்ந்த பலத்தையும் அளிப்பதாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாட்டிற்கான உருத்திராக்க மணிகளைவிட,ஒன்றிலிருந்து இருபத்தொரு முகங்கள்
வரை உள்ள அதிஅக் ஆற்றலுள்ள உருத்திராக்க மணிகளுமுண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும்,
நம்மைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான சக்திகளையும் ஒரு நிலைப்படுத்தி, செழிப்பு, ஆக்கம், உள்ளுணர்வுத்திறன், எதிர்கால நிகழ்வுகள் குறித்து ஆய்தல்,பாலிஅன் ஒத்திசைவு போன்ற சிறப்புப் பண்புகளை அளிக்கின்றன.

உறுதியாக, உருத்திராக்கள் நாம் இன்னும் திறம்படச் செயலாற்றவும், இன்னும் வெற்றிகாணும்
வாழ்க்கையை வாழ்வும் உதவுகின்ற வியத்தகு மணிகளாகும்.

2. உருத்திராக்கம் பற்றிய புனைகதை

உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் சிவனின் ''கண்களைக்'' குறித்தாலும், அவருடைய
அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின்
தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினதும் நன்மைக்காகச் சிவன்
பல்லாண்டு காலம் தியானம் செய்தார்.தியானத்தினின்றும் கண்ணை விழித்ததும்,சூடான கண்ணீர்த்துளிகள்
உருண்டோ டின.அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம் fபம்,சக்தி ஆகியன் வழியாகச் சமய ஈடேற்றம்,
அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன.
இமயத்திலும்,, ஏனைய காடுகளிலும் அலைந்து திரியும் ஞானிகளும் ரி"஢களும் உருத்திராக்கங்களையும்
அவற்றினால் செய்யப்பட்ட மாலைகளையும் அணிந்து,நோயற்ற,அச்சமற்ற,முழுமையான வாழ்க்கையை
வாழந்துள்ளார்கள்.இந்தத் துடிப்பவைகளுடனும் தொடர்பில்லாத எந்த ஞானியோ,இறை அவதாரமோ
அல்லது சங்கராச்சாரியர்களோ இல்லை எனலாம்.

3. நோய் தீர்க்கும் பண்புகள்

பல்லாயிரம் ஆண்டுகள்ளாக,நல்ல உடல் நலமும்,fபம்,சக்தி ஆகியன் வழியாக சமய ஈடேற்றம்,
அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன.
எங்கெல்லாம் உருத்திராக்கம் வணங்கப்படுகின்றோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராக்கத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராக்கம் குண்டலினியை(ஆதம இனபமுனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகபேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராக்கம் உதவுகின்றது. இது முழுக்குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச்செய்யும்.உருத்திராக்கம் அதனுடைய உயிரியல் மருத்துவப்(Biomedical) பண்புகளுக்கும், மன அழுத்தம், அதி உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் போனது.

உருத்திராக்கம் சுய ஆற்றலையும்,சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை
இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை,காக்காய் வலிப்பு,கக்குவான் போன்ற பல்வேறு
அபாயகரமான நோய்களைக் குணப்படுத்தவல்லது.குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதிமுறைகளைக்கேற்பக கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும்.

இது அணிவோருக்கு மன அமைதியையும்,மன ஊக்கத்தையும்,புத்திக் கூர்மையும் அளிக்கிறது.

4. முகப்புகள் அல்லது முகங்களை உடையன

ஒரு முகம்.

மந்திரம்-- '' ஓம் நமச்சிவாய, ஓம் ?ரீம் நம?''

ஒரு முகமுடைய உருத்திராக்கம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராக்கம் ஏனைய
எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் அரசனாகையால், இது தூய உணர்வைக்
(Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும் மோட்சமும் கிட்டும். இவர் ராf஡ fனகர்
போன்று வாழ்வர்.இவர் வேண்டும்போது எல்லா சுகங்களையும் அநுபவிப்பர்.எனினும் பற்றற்றவராய் இருப்பர்.

ஒரு முகத்துஉருத்திராக்கம், நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும்,அறுவை சிகிச்சையில் வெற்றி
பெறுவதற்கும் உதவுவதால் மருத்துவர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும்.

இரண்டு முகம்.

மந்திரம் -- '', கெளரி சங்கராய நம?, ஓம் நம?''

இரு முகமுடைய உருத்திராக்கத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி பார்வதியும்
(சக்தி) இணைந்த உருவமான அர்த்த நாரீSவரரைக் குறிக்கிறது.(மாதொரு பாகன்) இந்த உருத்திராக்கம்
அணிவோருக்கு 'ஒற்றுமை' (unity) உணர்வை அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சி?யன்,பெற்றோர்-
குழந்தைகள், கணவன் - மனைவி, நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கலாம்.
ஒருமைத் தன்மையை நிலை பெறச்செய்வது இதன் தனித்தன்மையாகும்.

மூன்று முகம்.

மந்திரம்-- '' ஓம் கிளீம் நம? ''

இந்த மும்முகமுள்ள உருத்திராக்கதை ஆளும் கோள் செவ்வாய்.இது தீக்கடவுளை குறிக்கிறது. எல்லாப்
பொருட்களையும் உண்டபின்னரும் தீ தூய்மை இருப்பது போல் மூன்று முகமுள்ள உருத்திராக்கத்தை
அணியவரும் அருள் கிட்டிய போது,தனது வாழ்க்கையில் பாவங்களில்,தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய
நிலையை அடைகின்றார். இந்த மூன்று முக உருத்திரக்கம் தாழ்வு மனப்பான்மை(Inferiority Complex)
உள்ளார்ந்த பயம் (Subjective fear)குற்ற உணர்வு(Guilt) மனச்சோர்வு போன்றவற்றால்
துன்பபடுவர்களுக்கும் உகந்ததாகும்.

நான்கு முகம்

மந்திரம்-- ''ஓம் ?ரீம் நம?''

இந்த நாலுமுகமுள்ள உருத்திராக்கத்தை ஆளும் கோள் புதன். இது பிரமனைக் குறிக்கிறது.
அணிவோருக்கு அருள் கிடைத்தபோது ஆக்க சக்தி கிட்டுகிறது.மாணவர்கள், அறிவியலாளகள்,
எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்கவல்லது.ஞாபகசக்தி,
கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நான்முக உருத்திராக்கங்கள்
மூன்றினை வலது கையில் கட்டினால்,அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது.

ஐந்து முகம்

மந்திரம் - ஓம் ?ரீம் நம?

ஐந்து முகங்களுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் வியாழன்.இது மங்களகரத்தின்
குறியீடான சிவனை குறிக்கும்.இந்த ஐந்து முகமுடைய உருத்திராக்க மாலை அணிதோருக்கு உடல்
நலம், அமைதி ஆகியன் கிட்டும்.இது ஒருவரின் இரத்த அழுத்தம்,இதய நோய்கள் ஆகியவற்றைக்
கண்காணிக்கிறது. இந்த உருத்திராக்க மாலை fபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை
அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும்.அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால
மரணம் ஏற்படாது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.

அறு முகம்

மந்திரம்-- ''Sவாமி கார்த்திகேயாய நம?''

இந்த ஆறுமுக உருத்திராக்கத்தை ஆலும் கோள் வெள்ளி. இந்த உருத்திராக்கம்
சிவனின் இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து
வேண்டியோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி,மனத்திட்பம்,திடமான மனம் ஆகியவை
அருளப்படும்.இந்த ஆறுமுக உருத்திராக்கம்,மேலாளர்கள்,வணிகர்கள்,நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள்,
ஆகியோருக்கு உகந்தது. இது ஒருவரின் பிறப்புறுப்புகளை ஆள்கிறது.

ஏழு முகம்

மந்திரம்-- ''ஓம் ம?஡ லட்சிம்யை நம? ஓஅம் ?ணம் நமக''

இந்த எழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும்.
இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள்பாலிக்கப்படும். உடல் தொடர்பான
துன்பங்கள்,நிதித்தொல்லைகள்,மனத்துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர்
இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை
ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம்,பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன்
அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.

எட்டு முகம்

மந்திரம் -- ''ஒம் ?ணம் நம?, ஓம் கணே"஡ய நம?''

இந்த எட்டு முகமுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக்]
குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது. அணிவோருக்கு
ரித்திகள்(Riddhis),சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிக்கும். இதை
அணிவோரின் எதிரிகள் அழிந்து போவார்கள். அதாவது இவர்கள் எதிரிகளின் மனத்தையும்,
நோக்கங்களையும் இந்த உருத்திராக்கம் மாற்றிவிடும்.

ஒன்பது முகம்

மந்திரம்-- ''நவ துர்க்காயை நம?, ஓம் ?ரீம் ?தம் நம?''

இந்த ஒன்பது உருத்திராக்கத்தை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்கையைக் (சக்தி)
குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள் வெற்றிகரமான
வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி,ஆற்றல்,செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.

பத்து முகம்

மந்திரம்-- '', நாராணாய நம?,, வை?ணவை நம?, ஓம் <௃ண௵ ிு?''  இந்த பத்து முகமுள்ள உருத்திராக்கத்திற்கு ஆளும் என்று ஒன்றுமில்லை.கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும்,பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக உருத்திராக்கத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம் போல்ச் செயல்பட்டு, எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும். பதினோரு முகம்

மந்திரம் - ''ஒம் , ருத்திர நம?, ஒம் ?ரீம் நும் நம?''

இது பகவான் அநுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு,நேர்மையான நீதி
ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை,வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும்
மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும்.இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார்.
தியானத்திற்கும் இது உதவும்.

பன்னிரண்டு முகம்

மந்திரம்-- ''சூர்யாய நம? ஓம் க்ரோன் ஧?஡ண் ரவுண் நம?''
இது சூரிய கடவுளை குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத்திறனைப் பெறுவர்.
அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும்
ஒளியுடனும், பலத்துடன்,பிறரை ஆட்சி செய்து நிலவுவர். இந்தப் பன்னிரண்டு முக உருத்திராக்கம்
மந்திரிகள்,அரசியல்வாதிகள்,ஆட்சியாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு
உகந்தது. இது வியக்கத்தக்க வகையில் பயனளிக்க வல்லது.

பதின்மூன்று முகம்

மந்திரம்-- '' ஓம் ?ரீம் நம?''

இது இந்திரனைக் குறிக்கும். தொழுது வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க எல்லா
சுகங்களையும் இது அளிக்கும்.செல்வம்,மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள்
அனைத்தும் இது நிறைவேற்றும்.அத்துடன் அ?டமா சித்திகளையும் இது அளிக்கவல்லது. இதை
அணிவோரை காமக்கடவுள் விரும்புவர்..மகிழ்ச்சி அடைந்த காமக்கடவுள் அணிவோருக்கு உலகத்து
ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.

பதினான்கு முகம்

மந்திரம் -- ''ஓம் நம? சிவாய''

இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராக்கமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக
மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராக்கம் அணிவோருடைய ஆறாவது
புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார்.
இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒருபோதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோர்
இடர்கள், துன்பங்கள்,கவலைகள் எல்லாவற்றையும் கடந்துவிட முடிகிறது.மேலும், அணிவோருக்கு
பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.

பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள்.

பண்டையக் கால முனிவர்கள் இந்த உருத்திராக்க மணிகளை பூநf மேடையில்
வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன
பகவான் உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.

கெளரி சங்கர்

மந்திரம் -- '' ஓம் கெள்ரி சங்கராய நம?''

இயல்பாகவே ஒன்றாக இணைந்த இரு உருத்திராக்கங்கள் கெளரி சங்கர் என
அழைக்கப்படுகின்றன. இது சிவனும் பார்வதியும் சேர்ந்த உருவாகக்
கொள்ளப்படுகின்றது. இது கணவனும் மனைவியும்
ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ள உதவுகிறது. எனவே இந்த உருத்திராக்கம் குடும்பத்தில்
அமைதியும் சுகமும் விளங்க வைக்கும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது.கெளரி சங்கர்
உருத்திராக்கத்தை ஒருவர் வழிப்படும் இடத்தில் வைத்துத் தொழுது வந்தால் அவருக்கு
ஏற்படும் துன்பம்,வேதனை,உலகியல் தடைகள் எல்லாம் அழிகின்றன. குடும்பத்தில் அமைதியும்
மகிழ்ச்சியும் மேலோங்குகின்றன.

5. உருத்திராக்கம் வழி நோய் நீக்கல்

இன்றைய உலகில் உங்களுக்கு என்ன செய்ய முடியும்?
உருத்திராக்கங்கள் ஒரு பயனுடன் கூடிய மணிகளாகும். இந்த மணிகள் மன அழுத்தம்,
உயர் இரத்த அழுத்தம்,மனச்சோர்வு மனம் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உகந்ததாக விளங்குகினறன.இந்த உருத்திராக்க மணிகள்,இந்தியாவின் சில இடங்களிலும் தென் கிழக்காசியாவிலும் வளரும் மரங்கலிலிருந்து பெறப்படுகின்றன. பொதுவாக நோய்களை நீக்குவதற்கும், தியானம் செய்வதற்கும் ஆசிய மக்களால் பரலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

உருத்திராக்க மணிகள் அணிபவர்களுக்குக் குறைந்துள்ளதையும் அவர்கள் கண்டனர். இவ்வாறு
மன அழுத்த நிலை குறைவது, தொடர்ச்சியாகச் சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில்
உட்கொள்வதால் மட்டுமே செய்ய முடிந்துள்ளது. உருத்திராக்க மணிகள் ஆக்கபூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன.

இந்த நிலையில் ஒருவரின் இதயதுடிப்பு,இரத்தச் சுற்றோட்டம், என்டோ கிரைன் சுரப்பிகளின்
[Endocrine glands] செயல்பாடுகள், நியூரோன்களின் [Neurons] செயல்கள்,சுவாசித்தல் ஆகியவை
சாதாரண நிலைக்குக் கொண்டு வரப்படுகின்றன.இந்த நிலையில் ஒருவன் தன்னை அதிகளவுக் கட்டுப்
பாட்டுக்குள்ளும் வைத்துக் கொள்ள முடிகிறது. அதாவது உடலில் தன் முனைப்புடன் செய்யும் செயல்களை மட்டுமன்றி, தன்முனைப்பு இன்றிச் செய்யும் செயல்களையும் கூட கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள
முடிகிறது.

யோகிகள் வியத்தகுவகையில்,மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்திருக்கின்றனர்.
அதாவது உடலில் தன்முனைப்புடன் கூடிய செயல்கள், தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்கள்
இரண்டையும், குறிப்பாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தக் கூடியவர்கள் இருந்தனர்.இவர்கள்,உடலின் பாதுகாப்பிற்கு எந்த விதத் துணிகளும் அணியாமலேயே இமாலய மலையின் கடுங்குளிரைத் தாங்கினார்கள். இவர்கள் தமது உடலிலுள்ள வெப்பத்தை வெளிக்கொணரும்போது அதைக் கட்டுப்படுத்தி அதன் வழி குளிரைத் தாங்கினார்கள். இது சாதாரணமாக செய்யத்தக்க செயல் அல்ல.

உத்திராக்க மணிகளுக்குச் சில விளக்க முடியாத, ஆனால் வியக்கத்தக்க மின்காந்தாப் பண்புகளும்,
ஊசி அடுத்த முறைப் பண்புகளும் [Acupressure] உண்டு என்பதைப் ஆய்வாளர்கள் எடுத்துக்
காட்டியுள்ளார்கள். கழுத்தைச் சுற்றி உத்திராக்கத்தை அணிவதால், அது இரத்தச் சுற்றோட்டத்தைக்
கட்டுப்படுவதுடன் நமக்கு உகந்ததாகவும் ஆகிறது. ந்மது இதயத்துடிப்புகளை கட்டுப்படுவதால்
சாத்தியமாகிறது.

உடலில் அல்லது மனதில் அசாதாரண நிலையோ அன்றேல் ஏதாவது நோயோ இருந்தால் அவற்றைச்
சுட்டிக் காட்டும் இரத்தச் சுற்றோட்டம் விளங்குகிறது.எடுத்தக்காட்டாக ஒருவர் உயர்ந்த மன அழுத்த
நிலையையோ அன்றேல் உறுப்பு உறுப்புகளில் சீர்கேட்டையோ உணரும் நேரத்தில் அவருடைய இரத்தச்
சுற்றோட்ட வீதம் அதிகமாகிறது. இதற்கு மாறாக இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்துவதால்
அவருடைய மன அழுத்த நிலை குறைகிறது. சோமடைசேசன்[Somatisation] அதாவது சீரற்ற சுவாசமும்
இரத்தச் சுற்றோட்டமும் கட்டுப்படுத்தப்பட்டவுடன் அதற்கான காரணி அதன் முக்கியத்துவத்தை இழந்து
விடுகிறது.இந்த அடிபப்டை விதிமுறையைக் கொண்டே எல்லா சைகோ பார்மகோலொf஢ன்[Psycho
pharmacological] மருந்துகளும் செயல்படுகின்றன். இரத்தச் சுற்றோட்டம் சாதாரண நிலைக்கு வந்ததும்,
ஒருவருக்கு மனத்தெளிவு ஏற்படுத்துவதுடன்,உடல் மனம் ஆகிய இரண்டின் செயல்பாடுகளிலும் கூர்ந்த
நோக்கு உண்டாகின்றது.

உத்திராக்கம் நமக்கு,உடலில் இலேசாக இருக்கும் உணர்வையும் சாந்தத்தை அளிக்கிறது.
அத்துடன் அது நமது ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது.உத்திராக்க மணிகளை
அணிவதால் மட்டும் ஏற்படும் வியத்தகு விளைவுகளைக் கண்ட பலர், இம்மணிகள் தெய்வீகமானவை
இறைவனால அனுப்பப்பட்டவை எனக் கருதி அவற்றை வணங்கினர்.

உண்மையான உத்திராக்க மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான் மக்கள்,அவை தமக்கு இர்த்த
அழுத்தம்,மனச்சோர்வு,மற்றும் நரம்புக்கோளாறு உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள்
ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரனம் கிடைத்ததாக அறிகிறார்கள்.அதை அணிவோருக்குத்
தன்னம்பிக்கை,உள்ளார்ந்த பலம் [Inner Strengh] இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கச்
செய்வதாக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பயன்பாட்டிலுள்ள உத்திராக்க மணிகளை விட, மிகச் சக்திவாய்ந்த ஒன்று முதல்
இருத்தொரு உருத்திராக்க மணிகளும் உண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும்,நம்மைச் சுற்றியுள்ள
ஆக்க பூர்வமான சக்திகளையும் நேர்ப்படுத்தி,அவற்றைச் செழிப்பு[PROSPERITY] படைக்கும் ஆற்றல்

[Creativity] உள்ளுணர்வுத் திறன்[Intutivity] எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை,தீமை பற்றி ஆய்ந்து
நோக்கும் திறன்,பாலின ஒத்திசைவு போன்ற செயல்படவும்,மேலும் வெற்றியுள்ள வாழ்க்கையை நாம்
வாழவும் உதவுகின்றன.

உத்திராக்கத்தை கொண்டு நோய் தீர்க்கும் முறையில் நம்மை உத்திராக்கத்தினால் எவ்வாறு
குணப்படுத்தக் கொள்ளலாம் என்பதைக் கற்றுக்கொள்கிறோம்.ஆக்கபூர்வமான நோக்கே எந்த
உத்திராக்கத்திற்கும் அதன் தனிச்சிறப்பாகும்.பயன்படுத்துவோருக்கு உத்திராக்கம் எந்தத்தீமையும்
அளிக்காது.இதிலுள்ள முகங்கள் அல்லது பகுப்புகளைப் பொறுத்து இதனுடைய தரமும்,இதனால்
விளைபயனும் வேறுபடும். உத்திராக்கம் கொண்டு நோய் தீர்க்கும் முறையில்,வாழ்க்கையில் ஏற்படும்
வேறுபட்ட தொல்லைகளையும்,நோய்களையும் எவ்வாறு உத்திராக்கத்தைக் கொண்டு தீர்க்கலாம் என்பதை
அறிந்து கொள்கின்றோம். இந்தச் செயல்திட்டம் உத்திராக்கத்தின் ஒவ்வொரு பண்பையும் அதன்
பயன்பாட்டையும் குறித்து விளக்குகிறது.

6. அடிக்கடி எழுப்படும் வினாக்கள்.

உத்திராக்க மணிகள் என்றால் என்ன? அவை எங்கே கிடைக்கின்றன?

எலியோகார்ப்பS கனிற்றால் றொக்Sப் [Elaeocarpus Ganitrus Roxb] என்ற தாவர இனப்
பெயரைக் கொண்ட உத்திராக்க மரங்களில் விளையும் பழங்களின் விதைகளே உத்திராக்க மணிகளாகும்.
இந்த மரங்கள் பெரும்பாலும் தென்கிழக்காசியத் தீவுகளான f஡வா,சுமத்திரா,டாருசலம்(போர்ணியோ)
பாலி,இரியன் fயா,தீமோர் போன்ற நாடுகளிலும், நேப்பாளம், இந்தியாவின் சில பகுதிகளிலும்
காண்ப்படுகின்றன. இந்த உத்திராக்க மரங்களில் 75 சதவீதம் இந்தோனேசியாவிலும், 25 சதவீதம்
நேப்பாளத்திலும், 5 சதவீதம் இந்தியாவிலும் காணப்படுகின்றன். உருத்திராக்க மணிகளின் மேற்பகுதியில்
பிளவுகள் உண்டு. இவைகள் முகங்கள் என அழைக்கப்படுகின்றன.

உத்திராக்க மணிகளின் சிறப்புத்தன்மை என்ன?

ஆசியர்கள் மரபு வழியாக உத்திராக்கத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆசியாவின் யோகிகளும்
துரவிகளும் உத்திராக்கத்தை வெறுமனே அணிவதால் மட்டும், அவர்களுக்கு வியத்தகு முறையில் அதிக
அளவு சாந்தியும்,குறிப்பிடத்தக்க மன அடக்கத்துடன் நீண்ட நேரம் தியானம் செய்யும் ஒரு முகக்குவியும்
ஏற்பட்டத்தைக்
கண்டனர்.


* உத்திராக்க மணிகள் தியானத்திற்கு மட்டுமே பயன்படுகின்றனவா?

இவை ஒரு குறிப்பிட்ட ஒரு பின்னிணியுடையவர்களின் பயன் பாட்டிற்கும் மட்டுமே உள்ளனவா?

இந்த உத்திராக்கத்தினை ஒரு குரு மூலம் அல்லது சான்றோர்கள் மூலமும்,அவர்களின் பெறுவது
சிறப்பாகும்.நல்ல உத்திராக்க மணிகளை இவர்கள் மூலம் பூநf செய்து,உரு ஏற்றி கொடுக்கும் போது
அணிவதனால், ஒருவருக்கு சாந்தி,மன அமைதி,கூர்ந்த நோக்கு,ஒருமுகக் குவிவு ஆகியன கிட்டுகின்றன.
இத்தகைய மனோநிலை தியானம் செய்வதற்கும்,இன்றைய உலகில் மனம் தொடர்பான செயல்பாடுகளுடன்
கூடிய தொழில் புரியவர்களுக்கும் உகந்ததாக அமைகிறது. ஒரு முகக் குவியும், கூர்ந்த நோக்குமே
எந்தத்துறையிலும் வெற்றியீட்டுவதற்கு மிக இன்றியமையாத பண்புகளாகும்.

ஐந்து முகப்புள்ள உத்திராக்க மணிகள் தவிர, ஒன்று முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள மணிகளும்
கிடைக்கின்றன.பதினைந்து முகப்புகள் முதல் இருப்பத்தியொரு முகப்புள்ள மணிகளும் கிடைக்கின்றன.
எனினும் பொதுவாகக் கிடைப்பதில்லை. இருபத்திரண்டு முகப்புகள் முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள வரை
உத்திராக்க மணிகள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இந்த உத்திராக்க மணிகள் மிகவும் ஆற்றல்
வாய்ந்தவை. அத்துடன் அவற்றிகு சில சிறப்புப் பயன்பாடுகளும் உண்டு.இந்தப் பல்வேறு முகப்புடைய
மணிகள் மனிதனுடைய ஆளுமையையும், மனநிலையும் ஆக்கபூர்வமான வழியில் மாற்றுகின்றன.

உத்திராக்க மணிகள் அனைத்தும் மனித குலத்தின் பயன்பாட்டிற்குகாகவே உள்ளன. இந்த உத்திராக்க
மணிகள் நமது மனம்,உடல்,ஆத்மா அனைத்தையும் மீண்டும் இளமை பெறச்செய்யும்.இம்மணிகளுக்கு
இயற்கைக்குகந்த ஆற்றலுடன்,தெய்வீகமானவை. புராதன இந்திய நூல்களிலும்,பெளத்தர்களது
நூல்களிலும் இந்த மணிகளைப்பற்றியும், அவற்றின் ஆற்றல்கள் பற்றி குறிப்புகள் உண்டு.

* வேறுபட்ட முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்த்து அணியலாமா?

பல்வேறு முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்ந்து அணியலாம். இவ்வாறு
சேர்த்து அணிபவருக்கு வேறுபட்ட மணிகளின் தனிப்பட்ட ஆற்றலை ஒரே நேரத்தில் உணர
முடியும். ஒருவர், குறிப்பிட்ட எண்ணுள்ள முகப்புகளைடைய மணிகளினால் செய்யப்பட்டதை கூட
அணியலாம்.

* எல்லோரும் உத்திராக்கத்தை அணியலாமா?

அணியலாம். பால்,வயது,பண்பாடு,இனம்,நிலம்,சமயப்பின்னணி குறித்த எந்தவிதப்பாகு
பாடுமின்றி எல்லோரும் இதை அணியலாம்.

எட்டு வயதுக்குட்பட்டவர்களால் எல்லா மணிகளையும் அணிய முடியாது.

* உத்திராக்கத்தின் தாக்கத்தை ஒருவர் உணர்ந்து கொள்ள எத்தனை நாட்கள் ஆகும்?

ஒருவர் தனது உள்ளங்கையில் உத்திராக்கத்தைப் பிடித்த மாத்திரத்திலேயே
அதனுடைய குறிப்பிடத்தக்க தாக்கத்தை உணர முடியும் என்பது வெளிப்படை. இது
ஆற்றலோடு இலேசக அதிர்ரும் சக்தியுண்டு. [இது அவரவர் உடல் மின்சக்தி ஆற்றலைப் பொறுத்தது]

* இந்த உத்திராக்க மணிகளுடைய உண்மைத் தன்மையை எவ்வாறு சோதிக்கலாம்?

நீரில் மூழ்கும் மணிகள் உண்மையானவை; நீரில் மிதக்கும் மணிகள் போலியானவை
என்ற அடிப்படையில் நிகழ்த்தும் சோதகள் சரியானவை அல்ல.மரத்தினால் செய்யப்பட்டு
உள்ளே ஈயத்தை அடைத்துள்ள மணிகள் கூட நீரில் எளிதாக மூழ்கிவிடும். இவற்றை
நம்பகமான இடத்தில் -நம்பிக்கையான நண்பர் மூலம் பெறுவது சிறந்த வழியாகும்.

* ஒரு நல்ல உருத்திராக்கத்தின் நாம் எவ்வாறு தேர்தெடுக்கலாம்?

உத்திராக்கத்தின் உருவம்,அளவு பற்றி பலருக்கு குழப்பம் ஏற்படுகின்றது.
இவை குறித்து அதிகம் கவலைப்படவேண்டாம். நன்கு வரையறுக்கப்பட்ட
முகங்கள்,சிறு மணிபோன்ற அமைப்புகள்,மேடுபள்ளக் கோடுகள் இவையெல்லாம்
இயல்பானதாக அமைந்துள்ளனவா என்று பார்க்கவேண்டும். அத்துடன் நடுவிலுள்ள
துளைக்கு அருகில் வெடிப்புகள் இல்லாது இருக்கின்றனவா என்றும் பார்க்க
வேண்டும். சிறிய அளவிலுள்ள மணிகள் கூட மங்களகரமானவைகள்.

* உத்திராக்கத்தை அணியும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

உத்திராக்க அணிந்திருக்கும் போது செய்யவேண்டியவை,செய்யக்கூடாதவை
என்று எதுவுமில்லை. நமது புனித நூல்களின்படி உத்திராக்கத்தை எப்போது
அணியலாம். அவற்றை நம்பிக்கை,மரியாதை,அன்பு ஆகிய பண்புகளுடன் அணியவேண்டும்.

* இந்துக்கள் மட்டும் இதை அணியலாமா?

இல்லை. எல்லோரும் உத்திராக்கத்தை அணியலாம். சூரியன்,சந்திரன்,ஆறுகள்
கோள்கள் ஆகியவற்றிற்கு மதம் என்பது ஒன்றில்லை.

* உத்திராக்க மணிகள் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?
எத்தனை ஆண்டுகளுக்கு இவை இருக்கலாம். இவற்றை நன்கு பாதுகாத்து
வைத்துக் கொண்டால் தலைமுறை தலைமுறையாகக்கூட வைத்துக் கொள்ளலாம்.

* வேறு எந்த வழியில் உருத்திராக்கம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும்

ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.முடிந்தால் சூரிய
அSதமனத்திற்கு பின்னர் இரண்டு ஐந்து முக உருத்திராக்கங்களை அந்த நீரில்
அமிழ்த்துங்கள்.காலையில் எழுந்ததும் வேறு எதையும் உண்பதற்கு முன்னர்
அந்நீரைக் குடியுங்கள். இவ்வாறு செய்வதற்கு பித்தளைக் குவளையைப்
பயன்படுத்த வேண்டாம்.

* தீடீரென்று ஏற்படும் நரம்புத்தளர்ச்சி உருத்திராக்கம் உதவுமா?

ஆம். ஒரு பெரிய அளவுடைய ஐந்து முக உருத்திராக்கங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியால் நரம்பு தளர்ந்து,குளிராக உணர்ந்த போதெல்லாம் வலது
உள்ளங்கையில் ஐந்து முக உருத்திராக்கத்தை வைத்து பத்து மணித்துளிகளுக்கு இறுக
மூடிக்கொள்ளூங்கள்.நீங்கள் உங்கள் மனத்திடத்தை மீண்டும் பெறுவதுடன்,உங்கள்
உடலிலும் சூடு ஏறத்தொடங்கும்.

* ஒரு குடும்பத்தில் வாழ்பவர்கள் கழுத்து மாலைகள்,fபமாலைகள்

உருத்திராக்க மணிகள் ஆகியவற்றை மாற்றிக் கொள்ளலாமா?
இல்லை. உருத்திராக்கத்திற்கு அதை அணிபவருக்கும் இடையே ஒருவகை
உறவுண்டு. இது மிக அந்தரங்கமானது. இதை வேறோருவருடனும் பகிர்ந்து
கொள்ளக் கூடாது. ஆனால்,இவற்றை வாழ்விறுதி விருப்பப் பத்திரத்தில்[Will]
எழுதி அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கலாம்.

அன்புடன்
கிருஷ்ணன்
சிங்கப்பூர்

No comments: