Monday, August 11, 2008

பொதிகை புனித யாத்திரை #3

பக்தர்கள் கல்விளக்கில் ஏற்றி வைக்கும் தீபம்,
அசையாமல் சுடர்விட்டு எரியும்.

முனிவரை தரிசித்து விட்டு இறங்கினால்,
காற்று ஆளைத் தூக்குவது போல அடிக்கும்.
சில இடங்களில் தவழ்ந்தபடிதான் இறங்க வேண்டும்.

அகத்திய முனிவரை தரிசித்து வரும் அனைவரும்
அங்கே அனுபவித்தாக ஒருமித்த குரலுடன்
சொல்வது புத்துணர்வு. அகநிறைவு.

அந்த சித்த புருஷனை தரிசித்தால்,
மனதில் மட்டுமல்ல வாழ்விலும் புத்துணர்வு பிறக்கும்.

அகஸ்தியர் கூடத்திற்கு நாம் நினைத்த
மாத்திரம் சென்று விட முடியாது.

சனவரி,பிப்ரவரி,மார்ச்,ஏப்ரல் மாதங்களில்
மட்டுமே செல்லலாம்.

அதற்கு கேரள வனத்துறைபினரின் முன்
அனுமதி பெற வேண்டும். ஒருமுறை சென்று வர
குறைந்தது மூன்று தினங்கள் தேவைப்படும்.

திருவனந்த புரத்தில் உள்ள வன வகுப்பு அலுவலகத்தில்
இருந்து இங்கு செல்வதற்கான அனுமதி சீட்டு
வழங்கப்படுகிறது.

பாண்டி பதின்நான்கு என்று அழைக்கப்படும்
பாடல் பெற்றத் தலங்களுள் திருக்குற்றாலமும் ஒன்று.
பொதிகைமலையுடன் சார்ந்த மலை, மூர்த்தி, தலம், தீர்த்தம்
மூன்றும் சிறப்புடையதாகும்.

பொதிகைமலைக்கு செல்லும் வழியில்
அகத்திய முனிவர் இங்கு வந்தார்.

*பாபநாசம் *

அடுத்துள்ள விக்கரம சிங்கபுரம் சேர்ந்த செல்லையா சிவபவனன்
என்ற இதனை ஒரு சேவையாக செய்து வருகிறார்.
இவர்கள் முறையாக அகஸ்தியரை
வணங்கி,பூஜைகள் செய்து அன்பர்களை அழைத்துசெல்கிறார்கள்.

திருநெல்வேலியிருந்து சுமார் 85 கி.மீ. தொலைவிலுள்ளது பொதிகை மலை.
உயரம் 6200 அடி.தமிழுக்கு இலக்கணம் வகுத்த தெய்வச்சித்தர் அகஸ்தியர்
இன்றும் வாழ்ந்து கொண்டுடிருப்பதாக ஐதீகம்.

பொதிகை மலை ஏக பொதிகை என்றும் கூறுவர்.
சிவபெருமான் பார்வதி திருமண கோலத்தைக்
காண வந்த அகஸ்தியர், சிவபெருமானின் உத்தரவு
பேரில் தென்பகுதியான பொதிகைக்கு
வந்ததால் இந்தமலை அகஸ்தியர் மலை
என்றும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் இப்புனித பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

காரையார் அணை சென்று பின்னர் இந்திரப் படகில்
அக்கரை செல்ல வேண்டும். பின்னர் நடை பயணம் ஆரம்பமாகிறது.
நாம் நடக்கும் ஒவ்வொரு அடியும் பொதிகைச் சிகரத்தை
நோக்கியே செல்கிறது.

பொதிகை மலை உயரம் 6125 அடியாகும்.
வழியில் துலுக்கமொட்டை என்னும் இருக்கிறது.

இதன் உயரம் 1867 அடி. இம்மலையைக் கடந்துதான் செல்ல
வேண்டும்.சிரமான நடைப்பயண என்பதால் களைப்படைந்து
விடும்.முதல் நாள் நடை யாத்திரையில் இதுவே மிகவும் சிரமான பகுதியாகும்.

சுமார் ஒரு மணி நேர நடைக்கு பயணத்திற்கு பின்
உள்ளாறு என்ற ஆறு குறுக்கிடும். தெளிந்த நீரோடை.
மதிய உணவுக்கு பிறகு ஓய்வு . சுமார் ஒரு மணி நேர
ஓய்வுக்குப்பின்,மீண்டும் நடைப்பயணம் ஆரம்பமாகும்.

ஒரு மணி நேர பிரயாணத்திற்குப் பின்
கன்னிகட்டி என்ற பகுதியை அடைந்து விடலாம்.
இங்கு ஆங்கிலயர்களால் கட்டப்பட்ட
வன இலாகா பங்களா உள்ளது. இன்று
நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

பங்களாவைச்சுற்றி அகழிகள் தோண்டப்பட்டு,
பங்களா செல்வதற்கு ஒரு நபர்
செல்லக்கூடிய பலகை பாதை இருக்கிறது.

இது யானைகள் வராதபடி செய்துள்ள ஏற்பாடு.

முதல் பயணத்தின் இறுதியில் இந்த பங்களாவில்
தங்கிச் செல்லாம். இரவில் விலங்குகளின்
நடமாட்டமும், அதன் சத்தங்களை கேட்கலாம்.
நேரம் செல்ல குளிர் அதிகமாக இருக்கும்.

--பயணம் தொடரும்-

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை

4 comments:

வேளராசி said...

பதிவினை படித்தேன்,மகிழ்ந்தேன்.நன்றி.

சிங்கை கிருஷ்ணன் said...

அன்புடையீர்,

தங்கள் வருகையும் கருத்தும்
கண்டு மகிழ்கிறேன்.

அன்புடன்
கிருஷ்ணன்

ocean said...

Anna,, nan pothikai malai ahasthyar thavam seitha antha idathirku chella mika avalaka ullaen.nan tharpothu coimbatoril irukkiren.enakku udava mudiyuma?

vinu said...

" விக்கரம சிங்கபுரம் சேர்ந்த செல்லையா சிவபவனன்
என்ற இதனை ஒரு சேவையாக செய்து வருகிறார்.
இவர்கள் முறையாக அகஸ்தியரை
வணங்கி,பூஜைகள் செய்து அன்பர்களை அழைத்துசெல்கிறார்கள்."
தயவு செய்து இவருடைய , முகவரி மற்றும் தொலை பேசி என்னை எனக்கு அளிக்க முடித்தால் அனைவரும் பயன் பெறுவார் ... தயவு செய்து vinupdy@yahoo.com என்ற முகவருக்கு மின்னஞ்சல் அனுப்பவும்... மிக்க நன்றி