Tuesday, August 31, 2010

சித்தர்களின் வழியில்...-குகை நமச்சிவாயர் #2

அவ்வாறு செய்ய உம்மால் இயலுமா?'' என்று
கேட்டான். அப்போது நமச்சிவாய தேவர்,
''பரம்பொருளாகிய சிவபிரானை உள்ளத்தே
நினைந்துருகிச் சிவாபிரான் திருவருளைத்
துணையாககொண்டு அவ்வாறு செய்யக்கூடும்''
என்று சொல்லித்தம் மாணவராகிய
விரூபாட்தித் தேவரை நோக்கினார்.
மாணவர் புரிந்து கொண்டார்.

புறமதத்தைச் சார்ந்த அரசன் விதித்த
நிபந்தனைகட்கு உட்பட்டு இணங்கினார்.
உடனே அரசன் கட்டளைப்படி இரும்புத்
துண்டம் ஒன்று நெருப்பிலிட்டு காய்ச்சப் பெற்றது.
இரும்பு துண்டு சூடேறியதை விரூபாட்சித்
தேவரிடம் தெரிவித்தனர்.

அப்போது விரூபாட்சித்தேவர், ''அந்த இரும்பு
இப்போதுதான் பூத்திருக்கிறது; மேலும் பக்குவம்
அடைய வேண்டும்'' என்றார். கொவ்வைக்
கனியினும் மேலாக சிவந்தவுடன்
விரூபாட்சித்தேவரிடம் தெரிவித்தார்கள்.

தீவண்ணராகிய சிவபெருமானை உள்ளத்தே
நினைத்துக்கொண்டு, ''கையில் அனல் ஏந்தி
விளையாடும் ஐயா போற்றி,"
செந்தழல் மேனிச் சிவனே போற்றி'' என்று
சிவபிரானைச் சிந்தனை செய்து, பழுக்கக்
காய்ச்சிய இரும்பைப் பார்த்துகொண்டே,
'சைவ சமயமே சமயம், அச்சமயம் சார்ந்த
சிவனே பரம்பொருள்'' என்று உரைத்தருளினார்.

பிறகு,..,

''அரியும், அயனும், அமரும் அஞ்சியோடுதற்குக்
காரணமாயிருந்த ஆலகால நஞ்சினை, அமுதத் திரள்
எனக்கருதியுண்டு. அனைவருக்கும் அடைக்கலம் தந்து,
நீலகண்டத்துடன் நிமிர்ந்து நின்ற சிவபிரானுக்கு
அடியவராகிய எமக்குப் பழுக்கக் காய்ச்சிய இவ்விரும்பும்
பழுத்ததொரு கனியேயாம்'' என்று சொல்லிக்கொண்டே
உட்கொண்டுவிட்டார்.

இந்நிகழ்ச்சிகளையும் நேரில் பார்த்துகொண்டிருந்த
புறச்சமயத்தைச் சார்ந்த அரசனும், அமைச்சரும்,
மக்களும் வியப்படைந்து விதிர்விதிர்த்து நின்றனர்.
பிறகு,வேற்று மதத்தினை சார்ந்த அம்மன்னன்
நமச்சிவாயருக்கும் அவர் மாணவராகிய
விரூபாட்சித் தேவர்க்கும், அவருடன் வந்த
முன்னூறு அடியவர்க்கும் வேண்டிய
சிறப்புகளை எல்லாம் செய்து பாராட்டினான்.

பிறகு, அங்கிருந்து புறப்பட்டு அடியவர்கள்
சூழ்ந்து திருவண்ணாமலை சென்று சேர்ந்தார்.
திருக்கோயிலுக்குச் சென்ற போது,
அண்ணாமலையாரைக் கைகூப்பி வணங்காமல்.

''நீர் நலமாக இருக்கின்றீரோ?'' என்று கையால்
சைகையால் செய்து வந்தார். நமச்சிவாய சுவாமிகள்
செருக்கினால் அவ்வாறு செய்தார் அல்லர்;
அவர்கள் பின்பற்றும் வீராகமம், ''அடியவர் சூழ
குருமூர்த்தியாக வந்த சிவபிரான் கோலத்தையன்றிப்
பிறரைக் கைகூப்பி வணங்குதல் கூடாது'' எனக்
கூறுவதனால் அவர் வணங்காமல் இருந்தார்.

''குரு லிங்க சங்கமம் எனும் முப்பொருளை யன்றிப்பிறரை
வணங்குதல் கூடாது'' என்னும் மரபினை ஒட்டி
அவ்வாறு நடந்தார். ''இலிங்கம் என்பது தம்
மார்பகத்தே எழுந்தளியிருக்கும் சிவபெருமானே
என்பது அவர்தம் கோட்பாடு';

அண்ணாமலையார் கட்டளைப்படியே தாம்
அவ்வூர்க்கு வந்திருப்பதனை உணர்ந்தாரில்லை;
என்றாலும் செந்தமிழ் மொழியில் அவர்க்குண்டான
மேம்பட்ட தெளிவினால் அண்ணாமலையாரை
சிறப்பித்து வெண்பாவினைப் பாடத்தொடங்கினார்.

கன்னட மொழியை அன்றி வேறு மொழியினை
அறியாத நமசிவாயர் மேலான தமிழ்ப்புலவர்களும்
பாராட்டத்தக்க வகையால் வெண்பாக்களைப்பாட
அருள் செய்தார் சிவபிரான்.

'நமச்சிவாயர் சிவபிரானிடம் சிறிதும்
அன்பில்லாதவர் என்றும் மற்றவர்கள்
கருதக்கூடிய வகையில் கைக்காட்டி வந்ததனை
அறிந்த சிவாக்கிரயோகி என்பார்,
உடல் பெரிதும் வருந்துமாறு நமச்சிவாயரைப்
பிரம்பினால் அடித்தார்.

''நல்ல சற்குருவாக வந்து இறைவன் என்னை
மோதியது கொல்வதற்காக அன்று; என்பாலுள்ள
தீக்குணங்களைப் போக்குதற்கேயாம்'' என்ற
கருத்தமைய ஒரு வெண்பாவினை இயற்றினார்,
நமச்சிவாயர்.

நமச்சிவாயருடைய உயர்ந்த மனநிலையை
உணர்ந்த சிவாக்கிரயோகியார் தாம் பிரம்பாலடித்தது
பற்றி வருந்தினார். நமச்சிவாயர் அவ்விடத்தை
விட்டு அகன்று, ''கோயிலுள் சென்று இறைவனை
வணங்குதல் சிறந்தது.'' என்று எண்ணினார்.

அப்போது அவர்க்கு அருகிலே, முன்னொரு
நாளில் தமக்கு மெய்ப்பொருள் உணர்த்திய
சற்குருவானவர் கல்லாடையுடுத்த தொண்டர்கள்
சூழ்தர முன்னே தோன்றினார்; தோன்றியவர்
உரிமையுடன் இவரோடு சில பேசி அடியார்
நமச்சிவாயர் குழாத்துடன் கோயிலுக்குள்
சென்றார் கருதினார்.

அதனைக் கண்ணுற்ற, '' குருமூர்த்தி
எழுந்தருளியிருக்கும் இடம் இதுதான் போலும்'' என்று.

அடியாருடன் சென்ற குருநாதர் தம்முடன்
வந்த மாணவர்களோடு அண்ணாமலையார்
அடிக்கமலங்களில் வீழ்ந்து பணிந்து எழுந்தார்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments: