Tuesday, August 31, 2010

சித்தர்களின் வழியில்...- குகை நமச்சிவாயர் #3

அப்போது குருமூர்த்தியையும் உடன் வந்த
அடியவரையும் கண்டிலர் நமச்சிவாயர்.
உடனே நமச்சிவாய மூர்த்தி ''இச்செயல்
சிவபிரானுடைய அருட்செயலே''.
வம்பான சொற்களைக் கூறி வலக்கை தூக்கிச்
சைகை செய்து வந்த நாம், சிவபிரானை
உளமாரக் கைகூப்பி வணங்கவேண்டும்
எனபதற்காகவே சற்குரு நம்மை அடித்தார்
என்று உணர்ந்து கொண்டார்..

நமச்சிவாயரைப் பிரம்பால் அடித்த யோகியும்
நமச்சிவாயரும் சிவஞானம் கைகூடப் பெற்றமையால்
ஒருவரை ஒருவர் காணும் இடங்களில்
எல்லாம் அன்புற வணங்கி அளவளாவினர்.

உண்மை அடியாருடைய பண்பு இதுவென்று
பிறர்க்கும் உணர்த்தினர். பழைய வழக்கத்தினை
மாற்றிக்கொண்டு ஆலயத்துட் புகுந்து
அண்ணாமலையாரை கைகூப்பி வணங்கும்
வழக்கத்தினை மேற் கொண்ட நமச்சிவாயரும்,
சிவாகமங்ககளை தெளிவாகக் கற்றுணர்ந்த
சிவாக்கிரம யோகியும் அடியார்க்குரிய
அனைத்துப் பண்புகளும் நிறைய பெற்று,
முன்பிருந்த குறைகள் நீங்கப் பெற்று
வழிபாடாற்றி வந்தனர். குறைகள் நீங்க
பெற்று வழிபாடாற்றி வந்தனர். பின்பு
அந்தச் சிவாக்கிரயோகி சென்ற இடம்
தெரியவில்லை.

நமச்சிவாய மூர்த்தி அண்ணாமலையிலேயே
தங்கினார். அண்ணாமலையாரும் திருவுளம்
மகிழ்ந்து நமச்சிவாயர் தம் உண்மை அடியார்
என்பதனைப் பலகையாக உலகிற்கு உணர்த்தியருளினார்.

ஊரினிடத்தும் நாட்டின் கண்ணும் உலாவிக்
கொண்டிருந்த நமச்சிவாயரைப் பெரிய மலையிடத்தே
வசிக்குமாறு இறைவன் அருள் புரிந்தமையால்
குகை நமச்சிவாயன் என்ற பெயர் எங்கும் பரவிற்று.
குகை நமச்சிவாயருக்கு வேண்டிய பொருள்கள்
அனைத்தும் யாரவது வாயிலாக கிடைக்கும்படி
அண்ணாமலையார் அருள் புரிந்தார்.

இந்தக் குகை நமச்சிவாயருக்கு தகுதி நிறைந்த
சீடர் ஒருவர் இவாகக் கூடிய பெருமையை பெற்றார்!''
என்று பாராட்டினார். அன்று முதல் அவருக்குக்
குரு இருந்தார். அந்த சீடர் ஒருநாள்
குகைநமச்சிவாயர் தன் திருவடிகளைப்
பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தபோது,
ஆடையை அச்சத்துடன் பிடித்துக் கசக்கினர்.
அதனைக் கண்ட குகை நமச்சிவாயர்
'' ஏன் இவ்வாறு செய்தனை?'' என்று கேட்டார்.

அதற்கு அந்தச் சீடர், ''தில்லை மாநகரிலே
திருச்சிற்றம்பலத்தி தொங்கவிடப்பட்டிருந்த
திரைச் சீலையிலே தீப்பற்றியது. அத்தீயை
அகற்ற கசக்கினேன்'' என்றார். அப்போது
குகை நமச்சிவாயர் தம் அருகிலிருந்த
சீடனைக் கட்டித்தழுவி.....,, ''
‘’இனி நீ குரு நமச்சிவாய மூர்த்தி
என்ற பெயரால் வழங்குவதாக’’ என்றார்.

ஒருநாள் குகை நமச்சிவாய சுவாமிகள்
சீடராகிய குரு நமச்சிவாயரை பார்த்து,
''நாம் இருவரும் ஓர் ஊரில் இருப்பது
ஒரு மரத்தில் இரண்டு யானையைக்
கட்டி வைத்திருப்பது போன்றதாகும்;

ஆகவே நீ தில்லைமாநகருக்குச் செல்க!
என்று சொல்லி மகிழ்ச்சியுடன் அனுப்பினார்.
மல்லிகார்ச்சுனத்திலிருந்து இவருடன் வந்து,
பூவிருந்தவல்லியில் குருவின் கட்டளைப்படி
அருஞ்செயல் புரிந்த விரூபாட்சித்தேவர்,
குருவின் குகைக்கு மேலே குகை
அமைத்துக் கொண்டு, ஆசிரியர்க்குப் பல
பணிகளையும் செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அன்பர் பலருடன் தம் குகையில்
அமர்ந்திருந்தபோது, அவருடைய திருமேனி
மறைந்தது. அங்கு, விபூதிலிங்கம் தோன்றியது.
அந்த லிங்கம் இன்றுவரை இருந்து வருகிறது.

ஒருநாள், ஓரிடையன் இறந்த சினையாட்டினைத்
தாங்கி நின்று ''இந்த ஆட்டின் வயிற்றில்
இரண்டு குட்டிகள் உள்ளன; விருப்பம் உடையவர்
விலைகொடுத்துப் பெற்றுக் கொள்க'' என்று
பலரும் அறிய உரைத்து நின்றான்.
அங்கு வந்தவருள் ஒரு தீயவன்
இடையனை நோக்கி, '' இந்த மலையின்கண்
உள்ள குகையிலே ஊன் அருந்துவதில்
மிகுந்த இச்சையுடைவன் ஒருவன் இருக்கிறான்,
அவனிடம் கொண்டுபோ; நல்ல விலைக்கு
வாங்குவான்'' என்றான்.

அவன் உரைத்தவற்றை மெய் என்று கருதிய
இடையன் குகை நமச்சிவாய மூர்த்தியிடம்
சென்று நிகழ்ந்தவற்றைக் கூறினான். குகை
நமச்சிவாய சுவாமிகள் சினங்கொள்ளாமல்,
ஆட்டின் விலை எவ்வளவு என்று கேட்டறிந்து
விலைப் பொருளை நாளைத் தருகிறோம்
சென்று வருக!'' என்று அனுப்பிவிட்டார்.

கருணைக் கடலாகிய அண்ணாமலையாரை
நினைந்து பெருமானே இன்று ஏன் இறந்து
போன ஆட்டினை என்னிடம் அனுப்பினீர்?
என்று ஒரு இனிய பாடலை பாடி, திருநீற்றில்
ஒரு துளியினை எடுத்த ஆட்டின் மேலிட்டார்.
உடனே ஆடு உயிர் பெற்றெழுத்து இரண்டு
குட்டிகளை ஈன்றது

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments: