Monday, November 06, 2006

குரு நமச்சிவாய சுவாமிகள்!

குரு நமச்சிவாய சுவாமிகள

அண்ணாமலைக்கு வாவென்று அழைத்து ட்கொண்ட ஞான தபோதர் குகை நமச்சிவாயர் ஒரு சிவயோகியாக,சித்தராக சமாதி முக்தி அடைந்தார்.அவர் அண்ணாமலையில் ஒரு குகையில் சிவயோகத்தில் இருந்து வந்தமையால் குகை நமச்சியாவ மூர்த்தி எனக் கூறப்பட்டார்.

அவருக்கு நமச்சிவாயர் என்றொரு மாணவ சீடன் இருந்தார். அவர் ஞானாசிரியரின் அருகிலிருந்து அன்புடன் பணி செய்து வந்தார். குகை நமச்சிவாயர் குகையின் பக்கத்தில் வளர்ந்தோங்கி இருந்த ஆலமரத்தில் மரத்தில் ஊஞ்சலிட்டு அதில் யோக நித்திரை கொள்வது வழக்கம்.

[இன்றும் ஒரு வளர்ந்தோங்கி ஆலமரம் கோயில் நுழைவாயிலிலும்,
குகை நமச்சிவாயர் சமாதி அருகிலும் இருக்கிறது.]

அதன்போது ஞானாசிரியன் அருகிலிருந்து பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது சிரியர் அருகில் இருந்தபோதும் 'குலுக்' என்று நகைத்தார். ''நமச்சிவாயம் என்ன அதிசயம் கண்டு நகைத்தாய்?'' என்று குகை நமச்சிவாயர் கேட்டார்.

அப்பொழுது மாணவ சீடராகி நமச்சிவாயர், ''ஐயனே திருவாரூரின் கண் தியாகராசப் பெருமானைத் திருவீதியின் கண் எழுந்தருளச் செய்து உலா வரும் போது, நாட்டியப் பெண்கள் டிக்கொண்டு வர, அவர்களுள் ஒருத்தி கால் இடறி விழுந்தாள்; அங்கிருந்த அவைவரும் நகைத்தார். யானும் நகைத்தேன்'' என்றார்

இதுபோன்று ஒருநாள் ஞானாசிரியரின் அருகில் இருந்தபோது,தம் டையைப் பற்றி தேய்த்தார்.''ஏன் இவ்வாறு ஆடையைப் பற்றித் தேய்த்தனை" என்று குகை நமச்சிவாயர் கேட்ட போது. ''பெருமானே! தில்லை மாநகரிலே பொற்சைபையிலே திரைச்சிலை இட்டிருந்தார்கள். அதன் அருகில் குத்துவிளக்கு சுடர் விட்டு எரிந்துகொண்டிருந்தது, அதனை ஓர் எலி பற்றி இழுத்துகொண்டு சென்றது, அச்சுடர் திரைசீலையில் பட்டதனால் அத்திரைச்சிலையில் தீப்பற்றிக்கொண்டது. அங்கிருந்தவர்கள் அத்தீப் பரவாமல் சீலையைப் பற்றிக் கசக்கினர், யானும் கசக்கினேன்'' என்றார்.

பின்பு ஒருநாள் குகை நமச்சிவாயர் மாணவர் உள்ளத்தை அறியவும், சோதனை செய்யவும் தேர்ந்து அறியவேண்டி வாந்தி எடுத்து அதைத் திருவோட்டில் பிடித்து, ''இதை மனிதர் கால் அடிபடாத இடத்தில் இட்டுவருக'' என்று கட்டளை இட்டார்.அதை நமச்சிவாயர் ஏற்றுக்கொண்டு மனிதர் உலவாத, கால் அடிப்படாத இடம் எதுவென ராய்ந்து பார்த்தார். அப்படி ஒரு இடம் இல்லை என்று அறிந்து, அதனை தாமே உட்கொண்டார்.

சிரியர் இந்த அருஞ்செயலைக் கண்ணுற்று, ''அன்பனே! அடிபடாத இடத்தில் வைத்தணையோ?'' என்று கேட்டார். அதற்கு பதிலாக, ''அய்யனே, அதனை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தேன்...'' என்று மிகவும் பணிவாக விடை அளித்தார்.

மாணவர் செய்த மூன்று அருஞ்செயல்களையும் கண்ட நமச்சிவாய மூர்த்தி, மாணவருடைய ஞான நிலை நாளுக்கு நாள் உயர்ந்து அறிந்து ''அவரை அவர்க்கேற்றதொரு புனிதமான இடத்திற்கு அனுப்பிவைத்தல் வேண்டும்''
என முடிவு செய்தார். உடனே ஒரு வெண்பாவில் பாதி வெண்பாவினைக் குகை நமச்சிவாயர் இயற்றி பாடினார்.
நேரிசை வெண்பா....
''ஆல்பழுத்துப் பக்கியினுக் காகார மானதென
வேல் பழுத்து நின்றநிலை வீணிலெனச் --------

என்று பாடி நிறுத்தினார். அருகிலிருந்த குரு நமச்சிவாய மாணவ சீடன், ''சுவாமி! குறை வெண்பாவையும் முடிக்கலாமே'' என்றார். அப்போது குகை நமச்சிவாயர். ''அப்பா நமச்சிவாயம்! எஞ்சியுள்ள அரை வெண்பாவையும் நீயே முடிப்பாயாக!'' என்றார். ஆசிரியர் கூறியன கேட்டசீடன், ''பெருமானே! குருவின் வாக்கிற்கு அடாத எதிர்வாக்கினை அடியேன் கூறுதல் பொருந்தாதே'' என்றார். அப்போது குரு '' நீ அருள்நிறை மாணவன், தாலால் எஞ்சிய வெண்பா அடிகளைப் பாடுக!'' என்றார். அப்போது மாணவர், நல்லாசிரியன் கட்டளைக்கு கட்டுப்பட்டு,
-----''சால்வன
செய்யா வொருத்தாருடன் சேர்ந்து மிருப்பீரோ
வையா நமசிவா யா''
-- என்று முடித்தார்.

அருள்நிறை மாணவரைப்பற்றி அறிய வேண்டுவனவற்றை தெளிவாக அறிந்துகொண்ட ஞானாசிரியர், ''அப்பனே! நமசிவாயம்! உனக்கு ஒப்பான மாணவனை எங்கும் காண்டல் அரிது; கையால் இன்றுமுதல் நீ குரு நமச்சியாய மூர்த்தி எனத் திருப்பெயர் பெற்றாய்!'' என்று தழுவிக்கொண்டு,''என் கண்ணுட் கருமணியே!'' ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக்கட்டுதல் கூடாது;

ஆகையால் அறியாமையை நீக்கி அறவொளியை வழங்கும் அம்பலவாணர்
எழுந்தளிருயிருக்கும் திருத்தில்லை எனப்பெறும் சிதம்பரத்திற்குச் செல்க! அங்கு உம்மால் நடைபெற வேண்டிய பல திருப்பணிகள் உள்ளன'' என்று கட்டளையிட்டார். அப்போது கரு நமச்சிவாயர் ஞானாசிரியரை நோக்கி, ''ஐயனே! ஞானாசிரியர் திருவடிகட்குப் பணி செய்யும் பேற்றினை இழந்து, நாள்தோறும் செய்யும் குரு தரிசனத்தை இழந்து வேறொரு நகர்க்கு எவ்வாறு செல்வேன்'' என்றார்.

குகை நமச்சிவாயர் மாணவரை நோக்கி, ''நீர் பெருமான் எழுந்தளியிருக்கும் சிதம்பரத்திற்கு சென்று பொன்னம்பலத்தின் முன்னே நின்று கூத்தப்பெருமானை வணங்கி நிற்பீராக! அங்கே, அப்பெருமான் நம்மைபோல் தரிசனம் கொடுத்தால் இருப்பீராக; இன்றெல் இவ்விடம் வந்து சேர்க!'' என்று சொல்ல.மாணவர்,''நன்று! என்று நவின்று பத்துப்பாடல்களால் ஆசிரியர்க்கு வணக்கம் தெரிவித்து நினறார். ஆசிரியரிடமிருந்து ''புறப்படலாம்'' என்ற சொல் பிறந்தது. உடனே குரு நமச்சிவாயர் தனியாக சாயுங்கால் நேரத்தில் புறப்பட்டுக் கிழக்கு நோக்கி ஒரு காத தூரம் நடந்தார். இருள் வந்தது. அங்குதத் தகுதியானதொரு இடம் பார்த்து ஒரு லமரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார். பின் பசி மேலிட்டு, உண்ணாமுலை அம்மையாரை நோக்கி ஒரு வெண்பா பாடினார்.

''அண்ணா மலையா ரகத்துக் கினியாளே
உண்ணா முலையே உமையாளே- நண்ணா
நினைதொறும், போற்றிசெய நின்னடிய ருண்ண
மனை தொறும் சோறுகொண்டு வா...''

எனறு குரு நமச்சிவாய சுவாமிகள் இவ்வண்பாவினைப் பாடிய நேரத்தில், அண்ணாமலையாருக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து பொன்தபாளத்தில் இட்டு நிவேதித்துக் கோயிலில் வைத்து அதனை எடுத்துச் செல்ல மறந்தவராய்க் காப்பிட்டு அர்ச்சகர் முதலியோர் அவரவர் வீடு சேர்ந்தனர்.அதனை அறிந்த உண்ணாமுலைத் தாயார் அந்நிவேதனத்தைத் தட்டுடன் கொண்டு வந்து குரு நமச்சிவாயமூர்த்திக்குக் கொடுத்துவிட்டு சென்றார்.

விடிந்தபின் அர்ச்சகர் முதலியோர், கோவிலுக்கு சென்று கதவைத் திறந்து பார்த்தபோது,பொற்றாம்பாளம் காணப்படவில்லை.அர்ச்சகர்களும், ஊரின் உள்ள பெரியோரும் திகைப்புற்று, ''யாரோ கள்வர்தாம் களவாடி இருக்கவேண்டும்'' என்று கருதி ராய்ந்து பார்க்கலாயினர். இதனால் இருபது நாழிகை மட்டும் கோயில் பூசை நடைபெறாமல் இருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு அர்ச்சகர் சிறுவன் தெய்வமுற்று, ''நமச்சிவாயா மூர்த்தி சிதமபரத்திற்கு செல்லும் வழியில் ஒரு லமரத்தின் கீழ் இருக்கிறார். அவருக்கு உண்ணாமுலைத் தாயார் அமுது கொண்டு போய்க் கொடுத்தார். அங்கே தாம்பாளம் கிடக்கிறது எடுத்துக் கொண்டு வரவும்! என்றான்

அதனைக் கேட்ட அர்சசகர்களும் பிறரும் இறைவனை வாழ்த்தி அவ்விடம் சென்று தாம்பாளத்தைக் கண்டெடுத்துக் கொண்டு அண்ணாமலைக்கு வந்து சேர்ந்தனர். மறுநாள் பகலவன் தோற்றமாகும் போது குரு நமச்சிவாயர் எழுந்து தன் ஞானாசிரியைத் தொழுது கிழக்கு நோக்கிச் செல்லும்போது, இருடிவனம் என்பதொரு திரு நகரினைக் கண்டார்.அந்நகரினைக் கண்டார். அந்நகரில் அம்மையும்,அப்பனும் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் எழுந்தருளியுள்ளனர். அவ்வடிவம் அகத்திய முனிவரால் பூசிக்கப் பெற்றதாகும். அங்கு ஐயாயிரம் கொண்டான் என்றொரு புனிதத் தீர்த்தம் உண்டு. அதில் நீராடி பூசை முடித்துத் தூயமனத்துடன் சுவாமியை துதித்துச் சிவயோகத்தில் இருக்கும்போது பசி வந்தது.அப்போது, அன்னை பராசக்தியை நோக்கி,

''தாயிருக்கப் பிள்ளை தளருமோ தாரணியில்
நீயிருக்க நான் தளர்தல் நீதியோ - வேயிருக்கும்
தோளியோ விண்ணோர் துதிக்கும் திருமுத்து
வாளியே சோறுகொண்டு வா''

என்று ஒருவெண்பாவினை இயற்றினார். அம்மை அதனைத் திருச்செவியில் ஏற்று ''குருநமச்சிவாயா! நான் இடப்பாகம் பிரியாமல் இருப்பவும் நீ என்னை பிரித்துப் பாடியது முறையோ? இப்போது உன் வாக்கினால் சேர்த்துப் பாட வேண்டும்'' என்று கூற குருநமச்சிவாயா மூர்த்தி,

'' மின்னும் படிவந்த மேக களத் தீசருடன்
மன்னும் திருமுத்து வாளியே - பொன்னின்
கவையாளே! தாயே! என் கன்மனத்தே நின்ற
மலையாளே சோறு கொண்டு வா''
===============================================
என்று ஒரு வெண்பாவைவினால் சேர்த்துப் பாடினார்.உடனே அம்மையார் அமுதுகொண்டு வந்து கொடுத்தார். அதனை உட்கொண்டு புறப்பட்டு விருத்தாசலம் வந்து பழமலை நாதரையும் பெரியநாயகி அம்மையையும் வழிபட்டு ஒரு குளக்கரையில் சிவயோகத்திலிருக்கும் போது பசி அணுகிற்று. அப்போது,
''நன்றிபுனை யும் பெரிய நாயகியெ நுங்கிழத்தி
என்றும் சிவன்பா லிடக்கிழத்தி - நின்ற
நிலைக்கிழத்தி மேனிமுழு நீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறுகொண்டு வா...''
-என்ற வெண்பாவைப் பாடினார்.அம்மையார் தண்டூன்றி விருத்தாம்பிகையாய் வந்து, குரு நமச்சிவாயாரைப் பார்த்து, ''என்னப்பா! உன்னுடைய சொல்லினால் என்னைக் கிழத்தி கிழத்தி என்று பாடுதல் நலமா? கிழவிக்கு நடக்க இயலுமா? தண்ணீர் எடுக்க கூடுமோ? உகட்டுப்பட்டு, உணவு கொண்டு வர உடலில் உரம் இருக்குமோ? என்றார்.
உடனே, குரு நமச்சிவாய தேவர்
''அன்னையே! அண்ட கோடி ஈன்ற பின்னும் கன்னி என மறைபேசும் னந்த ரூப மயிலே!
பாலகாசியில் பாலாம்ப்஢கை; இது விருத்தகாசி; நீர் பெரிய நாயகி; இங்குள்ள இங்குள்ள இறைவனும் பழமலை நாதர்; அதுபற்றியே யான் அவ்வாறு சொல்லினேன்'' என்றார்.
அடியவர் கூறியன கேட்ட அம்பிகை
'' என் அருமை மகனே! நமச்சிவாயம்! உன்னுடைய இனிய வெண்பாவிலே என்னை இளமையாக வைத்துப் பாடுக!'' என்றார். குரு நமச்சிவாய தேவர்
''கருணை கடலே! இரண்டு அம்மையார் க கூடுமே'' என்று சொல்ல அம்மையார்
''அதனால் பிழை ஒன்றும் இல்லை பாடுக! என்றார்.
உடனே குரு நமச்சிவாயர் பின்வரும்
வெண்பாவினைப் பாடி மகிழ்ந்தார்.

''முத்தநதி சூழும் முதுகுன் றுறைவானே
பத்தர் பணியும் பதத்தாளே!
அத்தர் இடம்தாளே மூவா முலைமேல் எழிலார
வடத்தாளே சோறுகொண்டு வா...''

இவ்வெண்பாவைச் சொல்லியவுடன் அம்மையார் பாலாம்பிகையாய்ச் சோறு கொண்டு வந்து கொடுத்தார். அதனையுட்கொண்டு வழிநடந்து புவனகிரிக்கு வந்து னந்தத் திருநடனம் புரியும் ஐயன் தில்லை அம்பலவாணப் பெருமான் எழுந்தளியிருக்கும் தில்லைத் திருக்கோயில் கோபுரம் கண்டு வணங்கி,

'' கோபுரங்கள் நான்கினையும் கண்டமட்டில் குற்ற்மெலாம்
தீபரந்த பஞ்சதுபோல் சென்றதே - நூபுரங்கள்
ர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின்பாதம்
பார்க்கின்றார்க் கென்ன பலன்...''

என்ற இவ்வெண்பாவைக் கூறிகொண்டே சிதம்பரம் சென்று திருக்கோயிலுட் புகுந்து,
சிவகங்கையில் நீராடி,
''கண்டமட்டில் கண்ட வினை காதம்போம்
கையிலள்ளி கொண்டமட்டில் கொண்டவினை
வண்டமிழ்சேர் வாயார வேபுகழும் வண்ணச் சிவாமித்
தாயார் திருமஞ் சனம்....''
என்ற வெண்பாவினைச் சொல்லிக் கொண்டே கனக சபைக்கு முன்சென்று பெருமானை வணங்கும் போது, கூத்தப் பெருமான்,அண்ணாமலையில் குகைக்கண் அமர்ந்திருக்கும் குகை நமச்சிவாயரைப் போலவே காட்சி கொடுத்தார். அப்போது வாழ்த்தி வணங்கி நின்று,
''திருவண்ணா மலையிற் குகை நம சிவாய
தேசிக வடிவமா யிருந்து
கரவனா மடியேன் சென்னிமே லுனது
கழலினை வைத்தவா நுறுரேன்
விரகின் நாரியரைப் புதல்வரை பொருளை
வேண்டிய வேண்டிய தனைத்தும்
பரவினார் புகழ்வார்க் களித்திடும் பொன்னம்
பலவனே பரமா சிரியனே...''
என்ற பாடலை முதலாக கொண்டு தொடங்கி, ஒரு நாழிகை அளவிற்குள் நின்ற இடத்திலேயே, உலகத்தை மறந்து நின்று, ''என்று வந்தாய் எனும் எம்பெருமான்' என்ற திருக்குறிப்பில் ஒன்றி இருந்து நூறு பாடல்களைப் பாடினார். பிறகு ஓர் அறையில் அமர்ந்து சிவயோகத்தில் அமர்ந்தார்.

அந்நாளில் தில்லை மூவாயிரவருள், சீவன்மூத்தர், சடாமுத்தர்,மாகமுத்தர் என்ற மூவர் என்ற மட்டும் பல்லக்கேறும் தனிச்சிறப்புடையவர்களாக இருந்தனர். அவர்கள் கனவில் டல் அழகராகிய அம்பலவாணப் பெருமான் தோன்றி, ''திருவண்ணாமலையில் இருந்து ஞானி நம் திருநகரில் வந்து தங்கியிருக்கிறார்; அவர் சிவயோகத்தில் மிகுதியாக
ஈடுபட்டிருப்பவர். அவருக்கு தனிமையான இடத்தினைத் தருதல் வேண்டும். அவரால் நமக்குப் பற்பல பணிகள் நடைபெற இருக்கினறன. அவருக்கு தகுதியான இடத்தினை தருதல் வேண்டும் நாம் இருமுறை திருவடி வைத்திருக்கின்றோம்.
அவ்விடத்தில் குரு நமச்சிவாயரைக் கொண்டு போய் விடுவீராக" என்று திருவாய் மலர்ந்தளினார். அவ்வாறே அர்ச்சகர் மூவரும் குரு நமச்சிவாயரை அவ்விடத்தில் கொண்டு போய் விட்டுத்திரும்பினர். அங்கே யோகத்தில் இருக்கும்போது நமச்சிவாயருக்குப் பசியுண்டாயிற்று. அப்போது,
'' ஊன்பயிலும் காயம் உலராமல் உன்றனது
வான்பயிலும் பொன்னடியை வாழ்த்துவேன் - தேன்பயிலும்
சொல்லியல் நல்லார் துதிக்கும் சிவகாம
வல்லியே சோறு கொண்டு வா
-- இவ்வெண்பாவினைச் சொல்லினார்.
உடனே சிவகாமி அம்மையார் அமுது கொண்டுவந்து நின்று,
'' கொண்டுவந்தேன் சோறு குகை நமச்சி வாயரது
தொண்டர் அடியார் சுகிக்கவே - பண்டுகந்த
பேய்ச்சிமுலை யுண்ட பெருமாளுடன் பிறந்த
நாச்சி சிவகாமி நான்...''
என்ற வெண்பாவினைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறாகவே, சிவகாமசுந்தரி தேவியார் குரு நமச்சிவாயருக்கு ஒவ்வொரு நாளும் அன்னம் அளிக்க குரு நமச்சிவாயர் யோகத்தில் இருந்து வந்தார்.

இவ்வாறாக இவர், சிவயோகத்தில் இருக்கிற காலங்களில் இவரை காணவரும் அன்பர்கள் பொன்னையும் பொருளையும் எதிரில் வைத்துவிட்டுச் சென்றார்கள். அவற்றைக் கண்ட குரு நமச்சிவாயர், ''இவை இவ்விடத்திற்கு என் வந்தன? இவை ட்கொல்லி, இங்கு இது வேண்டாம்'' என்று அந்த நேரத்தில் இருந்தவர்களை எடுத்துச் செல்லுமாறு
கட்டளையிட்டு விடுவார். இவற்றை கண்ட தில்லை மூவாயிரம். ''இவ்வளவு செல்வமும் வீணாகிறதே!'' என்று தம்முடன் கூடிப்பேசிக் குரு நமச்சிவாயர் இடம் சென்று, ''சுவாமி,நீர் இவ்விடத்தில் இருப்பதனால், அன்பர்கள் தரும் பொருள்கள் வீணாகின்றன.திருக்கோயிலின் உள்ளே வந்து தங்கினால், எல்லாப் பொருளும் பல்வேறு வகையான திருப்பணிகள் செய்வதற்கு பயன்படும்.பல கட்டளைகள் நடைபெற வழியுண்டாகும்'' என்று வேண்டிக்கொண்டனர்.

அப்போது குரு நமச்சிவாய தேவர், அர்ச்சகர்களை நோக்கி. ''நாம் நமது குருவின் ணைப்படி இவ்விடத்தில் வந்திருக்கிறோம்.தலால் யாம் அங்கு வர இயலாது'' என்று மறுத்துவிட்டார்.உடனே, தில்லை மூவாயிரவருள் சிறப்புற்றிருந்த சீவன்முத்தர்,சடாமுத்தர், மகாமுத்தர் கிய மூவரும் அம்பலத்தாரிடம் சென்று, ''பெருமானே! குரு நமச்சிவாய மூர்த்தி கோயிலுக்குள்ளே வந்தால் பல திருப்பணிகள் நடைபெறவும்,பல அறக்கட்டளைகள்
தொடர்கள் தொடர்ந்து நடைபெறவும், வழியுண்டாகும்.'' என்று சொன்னார்கள்.''நன்று, நீவீர் சென்று அழைத்தால் வாரார் யாமே சென்று அழைப்போம்'' கூறி, மூப்பு நிறைந்த அடியவராய்த் தண்டு கமண்டலம் பிடித்துக் கொண்டு திருப்பாற்கடல் என்னும் இடத்திற்கு வந்து குரு நமச்சிவாய மூர்த்தியின் எதிரே நின்றார். குரு நமச்சிவாயர்யோகம் தெளிந்து முன் நிற்பவரைப் பார்த்தார். குரு நமச்சிவாயர் யோகம் தெளிந்து முன் நிற்பவரைப் பார்த்தார். கண்ணுற்றவுடனே, ''ஐயனே!போற்றி'' என்றார்.வந்து நின்ற வரும் ''போற்றி போற்றி'' என்றார். குரு நமச்சிவாயர், வந்து நின்ற முதுமை நிறைந்த அடியாரைப் பார்த்து, ''ஐயா!நீங்கள் இருப்பது எந்த ஊர்?'' என்றார். அவர் ''நாம் இருப்பது தில்லைவனம்''
என்றார் உம்முடைய பெயர் என்ன?'' என, ''எம் பெயர் அம்பலத்தாடுவார்'' என்றார்.
''நீர் என்ன அலுவலாக இங்கு வந்தீர்'' என்று கேட்க எனக்கு அன்னம் தேவையாக இருக்கிறது; இவ்வூர் எங்கும் சுற்றினேன், அன்னம் கிடைக்கவில்லை, இவ்விடத்தில் அன்னம் கிடைக்கும் என்று சொல்லினர். கவே, உம்மிடம் வந்துள்ளேன்'' என்றார்.முதியராய் வந்து நின்ற அடியவர்,. அப்பொழுது குரு நமச்சியாவாய மூர்த்தி, ''ஐயா! என்னிடம் அன்னம் இல்லை. எனக்குச் சிவகாசுந்தரி அம்மையார் உணவளித்து வருகிறார். எம்மிடம் பாத்திரம் கூட இல்லை'' என்று சொல்லினார்.அப்போது வந்த முதியவர்''சுவாமி! என்னிடம் பாத்திரம் இருக்கிறது''என்று சொல்லிச் சந்திரனைப் பாத்திரமாக வைத்தார்.அப்போது குரு நமச்சிவாயர்,அன்னை சிவகாமசுந்தரியைச் சிந்தனை செய்தார். அன்னம் வந்தது! முதிய அடியவரை நோக்கி ''இதனை ஏற்றுக்கொள்ளும்''என்றார்.

அப்போது அம்பலத்தாடுவார், 'நாம் இதனை ஏற்றுக்கொள்ளோம்' என்றார். குரு நமச்சியாவர் ''காரணம் என்ன?'' என்று வினாவ, அடியவர், ''ஐயா! இவ்வாறே ஒவ்வொரு நாளும் உணவளிப்பதாக உறுதி கூறினால் ஏற்றுக்கொள்வோம், இன்றேல் ஏற்றுக்கொள்ளோம்'' என்றார்.அது கேட்ட குரு நமச்சிவாயர், ''நீர் மிகவும் மூப்படைந்திருக்கின்றீர்! யானோ, இன்று இவ்வூரில் இருக்கிறேன், நாளை காசியோ,இராமேசுவரமோ அறியேன்; இவ்வாறு இருப்ப உமக்கு நித்தியம் அன்னம் கொடுக்கிறோம் என்று எவ்வாறு கூற இயலும்?'' என்றார்.அப்போது அம்பலத்தாடுவார், ''ஐயா! நீர் செல்லும் திசைகளில் யாம் உமக்கு முன்னே நடந்தால் அன்னம் கொடும். உமக்குப் பின்னால் நடந்தால் அன்னம் வேண்டாம் என்றார்.அப்போது, குரு நமச்சிவாயர், 'நீர் முன்னே நின்றால் அன்னம் கொடுக்கிறேன், இன்றேல் இயலாது'' என்றார்.அம்பலத்தாடுவாரும் அதற்கு இசைந்தார். கவே குரு நமச்சிவாயர் சுவாமியை பார்த்து ''உணவு கொள்ளும்''என்றார்.அதற்கு அவர்,' திருநீற்றுக் கோயிலையும் உருத்திராக்கத்தையும் தொட்டு உறுதி கூறிக்கொடுத்தால் கொள்வோம்''என்றார்.குரு நமச்சிவாயர் அவ்வாறே செய்ய, வந்த அடியவர் கொடுத்த அமுதைக் கொள்வது போல் காட்டி, ''நீர் வேட்கை தணியுமாறு தண்ணீர் தரவேண்டும்'' என்றார். குரு நமச்சிவாயர் அருகிலிருந்த திருப்பாற்கடல் எனப்படும் நீர் நிலைக்காட்டி,''அதன்கண் நீர் அருந்துக!'' என்றார். அவ்வாறே நீர் அருந்தச் செல்பவர் போல் காட்டி மறைந்தருளினார்.

மறைந்தருளிய அம்பலத்தாடுவார் தில்லை மூவாயிரவரிடம், 'நாம் சென்று குரு நமச்சிவாயன் கோயிலுக்குள் வருவதற்குரிய வழியை வகுத்து விட்டோ ம், நீவீர் அனைவரும் கூடி விருதுகளுடனும் நாம் ஏறும் பல்லக்கு உடனும் சென்று, வீதிவலமாக நம்மிடம் அழைத்து வருக!'' என்றார்.அவ்வாறே தில்லை மூவாயிரவரும் சென்று வணங்கிப் பல்லக்கில் ஏறுமாறு வேண்டினர். குரு நமச்சிவாயரை நோக்கி,''சுவாமி! இது பல்லக்கன்று, சூந்ய சிங்காசனம் என்றனர். அப்பொழுதும் குரு நமச்சிவாயர் மறுத்துவிட்டார்.

=====================================

பிறகு மூவாயிரம், '' ஐயனே! நேற்று நண்பகலில் எம்பெருமான் உம்மிடம் வந்தார் அல்லவா, நீர் அவரிடம் யாது கூறினீர்'' என்றார்கள்.குரு நமச்சிவாயர் யோகக் காட்சியினால் பார்த்தார். சபாபதியின் காட்சி கிடைத்தது. ''சபாநாயகர் இவ்விடத்தில் வந்து என்னுடன் உடையாடி அங்கும் சென்று செய்தி கூறினரோ!'' என்று பரமன் அருளைப்பாராட்டி,
சங்கயமாய் அம்பலவர் தாமே எழுந்தருளி
யிங்கெமக்குப் பிச்சை யிடுவென்ன-வங்கமுது
திட்டமு டன் நமக்கு நீதினமு மேசர்வ
கட்டளையுண் டாக்குகென்றார் காண்''
என்றவெண்பாவைப் பாடிக்கொண்டே பல்லாக்கில் ஏறி, அல்லாகிய இருவினை தனையறுத் தடியினை தருவாரோ? மல்லல் நீடிய புவியின் மேலின்னமும் வரும் பிறப்பறுப்பாரோ? நல்ல மாமுலை மாதுமை நாயகர் நாயகர் நான் நிதம் நவின்றேத்தும் தில்லைநாயகர் அம்பலத் தாடுவார் திருவுளம் தெரியாதோ! என்ற ஓதிக்கொண்டே கோயிலுக்குட் சென்று கொடி மரத்தருகே பல்லாக்கில் இருந்து இறங்கிப் பஞ்சாக்கரமதில் மட்டும் பாதக்குறடு இட்டு சென்றார்.பிறகு பொன்னம் பலத்தை அணுகி, திருநடம்புரி தேசிகனை வணங்கி தில்லை மூவாயிரவரைப் பார்த்து, இப்போது நாம் உண்டாக்க வேண்டிய கட்டளையாது!'' என்று வினவினார்! அப்போது சபாநாயகர்,''சர்வ ஜனத்துக்கும் சர்வ கட்டளை என்று அசரீயாய் நின்று உணர்த்தினார். ''சபாநாயகர் பிச்சை கொடுத்தால் கட்டளை எப்போதும் தொடந்து
நடைபெறும்'' என்று சொல்லிக்கொண்டே பொற்றாம்பாளத்தைக் கையில் ஏந்தி
''காத லுடன் சர்வ கட்டளையாய் உன்னுடைய
பாத மலர்ப்பூசை பண்ணவே - ஓது
குருவா யெனையாண்டு கொண்டவனே! பிச்சை
தருவாய் சிதம்பர நாதா''
என்ற வெண்பாவைப் பாடினார்.
அப்போது குரு நமச்சிவாயர் வேண்டுளுக்கிணங்கி அங்கு வந்திருந்த அடியார்களும்
அன்பர்களும் காணுமாறு தங்ககாசு ஒன்று தட்டிலே வீழ்ந்தது ''நடராசப்பெருமானே நாம் அனைவரும் காணுமாறு பிச்சையிட்டார். கவே நாமும் நன்கொடையளிக்க வேண்டும்'' என்று வந்திருந்த பெரும்பான்மையினர் பொன்னும்,பொருளும் போட்டார்கள்.குரு நமச்சிவாயர் தங்கத் தட்டினைத் தனக்கு முன்னிருந்த அர்ச்சர்களிடம் கொடுத்து அவ்விடத்தை விட்டு புறப்பட்டார். அப்போது சிறிது தாங்கிற்று. உடனே குரு நமச்சிவாயர் ''இதற்குக் காரணம்
என்ன?'' என்று மூவாயிரவரை கேட்டார்.

அதற்கு அவர்கள் ''நாங்கள் ஏதும் அறியோம்''என்றனர். குரு நமச்சிவாயர் யோகக் கண்கொண்டு நோக்கினார். மூவாயிரைவரை நோக்கி,சுவாமிக்கு அணிகலன் இருந்ததுண்டா? என்று வினாவினார். அவர்கள்''இல்லை'' என்றனர். பின், சிறிது நேரம் சிந்தைனை செய்து ''பதஞ்சலியாக்கிர பாதர்காலத்தில் பாதச்சிலம்பும் கிண்கிணியும் இருந்தன' என்று சொல்வார் யாம் கண்டதில்லை என்றார்கள். அவர் தம் கூற்றினைக் கேட்ட குரு நம்ச்சிவாயர், சிற்பிகளை அழைப்பித்துப் ''பாதச்சிலம்பும் கிண்கிணியும் விரகண்டா மணியும் செய்யவேண்டும், அவற்றைச் செய்ய எவ்வளவு பொன் தேவைப்படும்'' என்றார் சிற்பிகள்'' அவற்றைச் செய்ய ஐம்பதினாயிரம் பொன் தேவை'' என்றார். வந்து சேர்ந்திருக்கின்ற பொன்னையும் பொருளையும் கொடுத்துத் திருவாபரணம் செய்து முடிக்குமாறு சிற்பிகளிடம் கூறி அனுப்பிவிட்டு திருக்கோயிலின் ஒருபுறத்தே அமர்ந்திருந்தார்.

அப்போது தில்லை மூவாயிரவர்கள் ஒன்று சேர்ந்து ''நாம் அனைவரும் இவரைத்
துணையாகக்கொண்டு நல்வாழ்வு வாழலாம் என்று நினைத்திருந்தோம்.செல்வத்தை எல்லாம்
சிலம்பும், கிண்கிணியும் வீரகண்டாமணியும் செய்யக் கொடுத்துவிட்டாரே!'' என்று குரு நமச்சிவாயர் மேல் குறைகூறிப் பேசினார். அன்றியும்''சிலம்பும் கிண்கிணியும் வீரகண்டா மணியம் அணிந்துவிட்டால்,அம்பலவாணர் இவருக்கு நடனம் செய்து காட்டுவரோ?'' என்று ஏளனமாகப் பேசினர்.

இவர்தம் உரையாடல் குரு நமச்சிவாயர்தம் செவியில் பட்டது. இவர்தம் நிலை இவ்வாறு இருப்ப, நாற்பதாம் நாள் சிலம்பும் கிண்கிணியும் செய்யபெற்று வந்து சேர்ந்தன. அப்போது குரு நமச்சிவாயர் தில்லை மூவாயிரம் பிறரையும் அழைத்து, இப்போது தில்லை அம்பகூத்தன் நடனம் செய்து காட்டினால் அவைவரும் காண்பீரோ?'' என்றார். அங்கிருந்தார் அனைவரும் ''அம்பலவாணர் திருக்கூத்தினைக்காண எத்தனை பிறவிகளில் நாங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும்ம். மூவேழ்தலை முறையினரும் கரையேறிவார்களே! என்றார்கள்.

குரு நமச்சிவாய மூர்த்தி நடராசப்பெருமான் திருவடிகளில் சிலம்பும் கிண்கிணியும் அணிந்து தரிசனம் செய்யுமாறு சொல்லியபின் இறைவன் திருநடனத்தை காண் விரும்பினராய்,

''அம்பலவா ஓர்கால் அடினால் தாழ்வாமோ
உம்பாரெல்லாம் கண்டதென கொப்பாமோ - சம்புவே
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
ஒத்துப் பதஞ்சலிக்கு மோ''
என்ற பாட்டினை பாடினார்.

உடனே கல கல வென்றொரு ஓசை கேட்டது. குரு நமச்சிவாயர் நின்று தோத்திரம் செய்வாராயினர். தில்லை கூத்தன் நடனம் செய்யத் தொடங்கினார். எல்லோரும் கீழே விழுந்து வணங்கி அசைவற்றிருந்தார்கள். அப்போது மூவாயிரவருள் மூன்று பேர் ''நீண்ட நேரமாகத் திருநடனம் நிகழ்கிறபடியால் நடனத்தை நிறுத்தவேண்டும்'' என கூறக் குரு நமச்சிவாயர், ''ஆடச் சொல்கிறவர் நாமோ?'' என்றார். மீண்டும் அந்த மூவரும், '' தாளம் போடுகினறவர்கள் நிற்கவேண்டும்'' என்றனர். அப்போது குரு நமச்சிவாயர் அம்பலவாரை நோக்கிப் ''பெருமானே! தூக்கிய கால் நோகாதோ? துட்டன் முயலகன் மேல் ஊன்றிய கால் சலியாதோ? என்று கருத்து அமைய ஒரு வெண்பா இயற்றினார். உடனே, நடனம் மிகவும் சிறப்பாக நடைபெறலாயிற்று.

குரு நமச்சிவாயர் மீண்டும் மனமுருகி வெண்பா ஒன்றினை பாட திருநடனம் நின்றது.
அதற்கு மேல் தில்லை மூவாயிரம் கூடி, ''குரு நமச்சிவாயர் பரிபூரணத்தை அடைந்து காரணமானதால் நாங்கள் பூசிப்போம்'' என்று சொல்லிக்கொண்டார்கள். குரு நமச்சிவாயர் மேல் குடிமக்களும் 'பெருசெல்வரும் வள்ளல் தன்மையுடையவர்களும், குறுநில மன்னர்களும், அளவற்ற அன்புக்கொண்டு அவர் பெயரால் நடைபெறும் அம்பலவாணர்
திருக்கோயில் திருப்பணிக்கு நிறைவான பொருளைக் கொடுத்தனர். பல்வேறு அறக்கட்டளைகள் ஏற்பட்டன.அன்றியும் எழுபத்திரண்டு தம்பிரான்களுக்குப் பல்லக்கும் விருதும் மற்றும் கொடுத்து நாடெங்கும் அனுப்பிக் கோயில் திருப்பணிகளும், அறக்கட்டளைகளும் விரிவாகவும் சிறப்பாகவும் நடைபெற வழி வகுக்கப்பெற்றது. இவ்வாறாக் குரு நமச்சிவாய சுவாமிகள் காலத்தில் சைவம் தழைத்து ஓங்கிற்று, கோயில் திருப்பணிகள் விரிவாக நடைபெற்றன. பல்வேறு அறக்கட்டளைகள் உண்டாயின.

குரு நமச்சிவாய மூர்த்தி, தலயாத்திரை பல இடங்களுக்குச் சென்று, ஆங்காங்குள்ள பெருஞ்செல்வர்கள் தானமாகக் கொடுத்த பல கிராமங்களைத் திருமடத்தில் நடைபெறும் அன்றாட தருமங்களுக்காவும் அம்பலக் கூத்தர் திருக்கோயிலில் நடைபெறும் சர்வ கட்டளைக்காகவும் சிலாசனம் செய்து வைத்தார். இவ்வாறாகப் பல சிவ தருமங்கள்
சிறப்பாக நடைபெற வழிவகுத்த பின்னரும் பல்லாண்டு வாழ்ந்திருந்து, திருப்பெருந்துறை
சென்று அங்கே இலிங்காரம் யினர்.

''வத்தீச் சுரவருடம் வைகாசி தேதிநவம்
இந்துநா னாழிகை யேழரைமேல் - வந்தகுரு
தானா மருணகிரி தாணுசிவ லிங்கத்துள்
னால் நம்ச்சிவா யன்.."

குரு நமச்சிவாயர் அம்பல கூத்தருக்கு அளித்த நிலங்கள் அணிகலன்கள், தோப்புகள் பற்றிய கல்வெட்டுகள் தில்லைக் கோயிலிலும் பிற இடங்களிலும் மிகுதியாகக் காணப்படுப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.

நன்றி, வணக்கம்.
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments: