Thursday, July 03, 2008

சதுரகிரி யாத்திரை # 2

சதுரகிரி நுழைவாயில்:






இம்மலையின் மூலிகைகள் தவத்தியானம்
புரிந்து வருகின்ற முனிவர்களும், சித்தர்களும் பெறுவதற்கும், உலக வசியம், மோகனம்,
தம்பணம், பேதனம், மரணம், உச்சாடனம், வித்துவேடணம்
போன்ற அஷ்ட காரியங்களுக்கு அனேக மந்திர சக்திகளுக்கும் உதவுகிறது.


தவிர இம்மலையின் காற்றானது உடலில்
பட்டவுடன் சகல வியாதிகளும் எளிதில் குணமாகின்றன.
சதுரகிரியில் செம்பை தங்கமாக்கும் மூலிகை
இருப்பதாக பரவலான ஒரு செய்தி உண்டு.
பல மூலிகையின் சாற்றுடன், நவபாஷாணங்களையும் சேர்க்கையால் செம்பை தங்கமாக உருவாக முடியும்.

இந்த வித்தைகளை கற்றுக்கொள்ள தங்கள் வாழ்நாளையும்,
பொருளையும் இழந்தவர்கள் பலர்.

அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.
இது சாமானிய மக்களுக்கு கைவராத கலை.
பொருளாசை இல்லாதவர்களுக்கு மட்டும்
இது சாத்தியமாகும். யாருக்கு சாத்தியமாகும்
என்ற ஒரு விதியும்/ பிராப்த்தமும்
உண்டு.

எனக்குக் குருவாக திருவண்ணாமலையில்,
ஈட்டும், தொட்டும், சுட்டிக்காட்டியும்,
அருளும், தீட்சையும் அளித்த சித்தர்/வைத்தியர்
சி.இராமசந்திரன் அவர்கள் பல காலம் கழித்து
எனக்கு செம்பை தங்கமாக மாற்றும் வித்தையை,மூலிகையின்
கூட்டையும், நவபாஷாணத்தின் கலவை அறிவிக்கிறேன்,
கற்பிக்கிறேன் என்றார்.

ஆனால், நான் மரியாதையுடன் வேண்டாம் என்று மறுத்திவிட்டேன்.

'மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தினை எண்ணி தரம் தாழாதே,
தங்க இடம் பாரப்பா...'

-என்பதே என்பதே எனது வேண்டுகோள்.
சதுரகிரி மலையில் காலங்கிநாதரால் உருவாக்கப்பட்ட
வகார தைலக் கிணறு உண்டு. உலோகத்தைத் தங்கமாக
மாற்றும் தைல மூலிகை கிணறு.

சிருங்கேரி என்னும் நகரத்தைச் சேர்ந்த வாலைபுரம்
எனும் கிராமத்தில் இறைபக்தியும், திருப்பணி
கைங்கர்யங்களில் சிறந்த வாமதேவன்,
கிராமத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டுவதற்கு
எண்ணி தன் சொத்தை எல்லாம் விற்று
ஆலயப்பணியை தொடந்தான்.

ஆலயம் பாதிப்பாகம் கட்டி முடிவதற்குள்
பொருள் பற்றாகுறையால் பணியை தொடர இயலவில்லை.
பலரிடம் யாசித்தும் யாரும் உதவிபுரியவில்லை.
சதுரகிரியில் தவம் புரிந்துக்கொண்டிருக்கும்
காலாங்கி முனிவரைப் பற்றிக் கேள்விபட்டு
அவரை சந்திக்க சென்றான். நடந்தவற்றைக் கூறி
நின்று போன சிவாலயப் பணி தொடர வழி
செய்ய வேண்டுமென, காலில் வீழ்ந்து வேண்டி
நின்றான்.

ஆனால், காலாங்கி பதிலேதும் கூறாது மெளனமாக
இருந்தார்.
ஆலயத்தை எப்படியும் கட்டிமுடிக்க வேண்டும்
என்ற வேட்கையில் உறுதியுடன் அவருக்குப்
பணிவிடைகள் செய்து வந்தான்.
வாமதேவன் உண்மையிலேயே ஆலயம்
கட்டும் எண்ணத்தில் தம்மிடம் தங்கியுள்ளான்
என்பதை உணர்ந்து அவனது எண்ணத்தை
நிறைவேற்ற நினைத்தார்.

மலையிலிருந்த அபூர்வ மூலிகைகளான உரோம வேங்கை,
உதிர வேங்கை, ஜோதி விருட்சம், கருநெல்லி முதலியவற்றாலும், முப்பத்திரண்டு பாஷாணச் சரக்குகளாலும் முப்புக்களாலும் வகாரத் தைலத்தைச் செய்தார்.

அந்த வகாரத் தைலத்தைக் கொண்டு உலோங்களை
தங்கம் உண்டாக்கினார்.

'வணிகரே..! ஈசன் கோயில் கட்ட உனக்கு
எவ்வளவு பொன் தேவையோ அதனை எடுத்துக்
கொண்டு போய் திருப்பணி வேலைகளை முடித்து
கோயிலை கட்டி முடி போ'' என்றார்.

காலாங்கிநாதரை வணங்கி அங்கிருந்த
பொன்னை எடுத்துச் சென்ற வணிகன்
வாமதேவன் தன் விருப்படியே சிவாலாயம் கட்டி
முடித்தான்.

(தொடரும்)

அன்புடன்
சிங்கை கிருஷ்ணன்







No comments: