Wednesday, July 02, 2008

சதுரகிரி யாத்திரை #1

உலக முழுதுந் தொழுதேத்தி
...உய்ய வெனவே சதுரகிரி
இலக வமர்ந்த பெருமானை
...யிலிங்க மயமா யிருப்பாவைக
கலக மயக்கங் கழன்றோடக்
...கடையே னுளத்துங் குடி கொண்ட
அலகில் சோதி மகாலிங்கர்
...ஆடிப்பு என்றன் முடிக் கணியே.

தென் தமிழகத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில்
சதுரகிரி மலை அமைந்துள்ளது. சதுரம்-நான்கு, கிரி-மலை, நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்திருப்பதால் இதனை 'சதுரகிரி' என்றுஅழைக்கிறார்கள்.

கிழக்குத் திசையில் இந்திரகிரியும்,
தென்திசையில் ஏமகிரியும்,
மேற்குத் திசையில் வருணகிரியும்,
வடதிசையில் குபேரகிரியும்,
இவற்றின் மத்தியில் சிவகிரி,
பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சப்தகிரி
என்னும் நான்கு மலைகளும் அமைந்திருக்கிறது.

இது தவிர இந்நான்குமலைக்கு மத்தியில்
சஞ்சீவி என்ற ஓர் அற்புத மலையும் இருக்கிறது.
இத்திருத்தலம் பஞ்சபூச லிங்கத்தலமாகும்.

இவற்றில் அருள்மிகு சுந்தரமூர்த்தி ஆரிடலிங்கமாகும்.
அருள்மிகு சந்தன மகாலிங்கம் தைவிக லிங்கமாகும்.
அகத்தியர் முதலான பதினெட்டுசித்தர்கள் வாழ்ந்து வழிப்பட்டதும் இத்திருத்தலம்.

இத்திருத்தலத்திற்கு ஒரு முறைவருகை தந்து
சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.

இத்தலத்தில் அமைந்துள்ள சந்திர தீர்த்தம்,
கெளண்டின்ய தீர்த்தம்,
ஆகாய கங்கைதீர்த்தம்
ஆகியவற்றில் நீராடிவர்கள்
பரமானந்த வாழ்வைப் பெற்று மகிழ்வார்.
புத்துணர்வு பெறுவர்.

திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி;
சிதம்பரத்தை வணங்கினால் முக்தி;
திருவாரூரில் பிறக்க முக்தி கிடைக்கும்.;
காசியில் இறக்க முக்தி.
இந்தச் சதுரகிரி தலத்திலோ
இந்த நால்வகை முக்தி கிடைக்கும் என்பர்.

இம்மலைத் தலத்தின் சஞ்சீவி மூலிகைக்
காற்றில்னால் ஆயுள் அதிகரிப்பதோடு,
நோயில்லா வாழ்வு அமையும் என்கிறார்கள்.
*சதுரகிரியில் சஞ்சீவி மலை* இராமாயணப் போரில்
இந்திரஜித்து, இலக்குவன் முதலானோரைத்
தனதுபிரம்மாஸ்திரத்தால் மூர்ச்சித்து மயங்கி
கீழே விழும்படி செய்ய, இது கண்டுவருந்திய இராமன்,
சுக்ரீவன் முதலானோர் வாயுபுத்திரனாகிய
ஆஞ்சநேயரிடம்விபரம் கூறி சஞ்சீவி மலையிலுள்ள
சஞ்சிவி மூலிகையை எடுத்து வரும்படிசொல்ல,
அனுமன் உடனே அங்குச் சென்று
அம்மலையையே தூக்கிக் கொண்டு வந்து இலக்குவன்
முதலானோரை மூர்ச்சைத் தெளிவித்த பின்பு,
திரும்பவும் அம்மலையை இருந்த இடத்திலேயே
வைத்துவிட்டு வருவதற்காக, வடதிசை
நோக்கிப் பறந்து செல்கையில்,
சதுரகிரியில் தவம்செய்து கொண்டிருந்த
சித்த முனிவர்கள் அந்த சஞ்சீவி கிரியில்
தங்களுக்கு வேண்டியஅனேக மூலிகைகள்
இருப்பதை தங்களது ஞான திருஷ்டியினால்
தெரிந்து கொண்டு அம்மலையின் ஒரு பகுதி,
இந்நான்கு கிரிகளுக்கும் [சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரி]
மத்தியில் விழவேண்டும் என்று நினைத்தவுடனே
அவர்களது பிரம்ம ஞான தவ வலிமையால்
பெரிய காற்றை உண்டாகியதால் அச்சஞ்சீவி
மலையின் ஒரு பகுதியானது இச்சதுரகிரிக்குமத்தியில் விழுந்தது.

<http://mail.google.com/mail/ui=1&attid=0.1&disp=inline&view=att&th=11a89e1b63fa5e1a>
(சதுரகிரி-தாணிப்பாறை மூலிகைவனம்)

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
தமிழ் எமது மொழிஇன்பத்தமிழ் எங்கள் மொழி

Krishnan,
Singapore
For your Book Mark:
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/

1 comment:

KRICONS said...

சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை பதிவிறக்க http://kricons.blogspot.com/2008/08/blog-post_18.html