Saturday, July 12, 2008

சதுரகிரி யாத்திரை #7

நாங்கள் சென்ற நேரம் கத்திரி வெயில் காலம்.
ஆகையால் கூட்டம் அதிகமில்லை.
ஆகையால் சற்று தாராளமாக இறங்கினோம்.
வேதங்கள் போற்றும் சிவமூர்த்தி இறைவன் சுந்தரலிங்கம்,
மகாலிங்கம், இராசலிங்கம், சிந்தனலிங்கம் என்னும்
நான்கு திருமேனிகளைக் கொண்டு இச்சதுரகிரி மலையில் எழுந்தருளியிருக்கிறார்.

பொதிகை மலையிலிருந்து மூலிகை
வளம் காண வந்த அகத்தியரால்
பிரதிஷ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்டு,
தமது திருமணக் காட்சியை அவருக்குத்
தந்தருளியவர் சுந்தரமகாலிங்கர்.

உமையொரு பாகராக அர்த்த நாரீஸ்வரர்
என்னும் பெயரில் எழுந்தருளும்
பொருட்டு உமையவளால் சந்தனமரத்தடியில்
பிரதிஷ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்டிருக்கும்
சந்தன மகாலிங்கர். பச்சைமால் என்னும்
ஆயர்குல முதல்வனுக்காகக் காட்சி தந்து
லிங்கவடிவாய் எழுந்தருயிருப்பவர் மகாலிங்கர்.

மகாலிங்கமும், இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கங்களாகும்.
ஆனந்த சுந்தரம் என்னும் வணிகனுக்கும்
அவனது துணைவி ஆண்டாள் அம்மாளுக்கும்
சங்கரநாராயணராகக் காட்சி தந்து எழுந்தருளும்
பொருட்டு அருள் வடிவாய் விளங்கும் மூர்த்தி
இரட்டை லிங்கர்.

மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக
வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில்
வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும்,
ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும்,
மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும்
இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும்
காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள்
தீர்கின்றன.

கடந்த எனது சதுரகிரி பயண குறிப்பில் நானும் முருகேஷன் சிவாவும் கடைசியாக வந்தாக குறித்து இருந்தேன்.
எங்களின்உரையாடலில் சித்தர்கள் மட்டுமல்ல,
மூலிகை பற்றியும் இருந்தது. பல அற்புத மூலிகைகளில்
முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலைப்பற்றியும்
கூறினார்.

முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி,
இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால்
அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும் என்பதை விளக்கினார்.
சதுரகிரி மலையும் இதற்கு விதிவிலக்கன்று.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும்,
சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள்,
மூலிகைகள், இலைகள் இம்மலையில்மேல் உள்ளன.
இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற
அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று
குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு.
மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின்
மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர்
தேங்கியசுனைகள் இருக்கிறது.

இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்'
என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல்
காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது.
இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.

விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை
மருத்தாகப் பயன்படுத்தவேண்டும்.
மலைமீது போக சில வரைமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்.

சேங் கொட்டை, தில்லை, தும்புலா போன்ற மருத்துவ
குணம் கொண்ட மரங்களில் பூ பூக்கும் காலங்களில்போகக்கூடாது.
காரணம், இப்பூக்கள் மிகவும் வீரியமுள்ள நச்சுத்தன்மை கொண்டவை என்பதால், அவற்றின் மேல்பட்டுவரும் காற்றைச் சுவாசிப்பதால் மயக்கம் உண்டாகலாம்.

சில, பல சமய்ங்களில் உயிருக்கே அது ஆபத்தாக முடியலாம்.
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும்.
அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும்.

விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும்
அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன்
கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும்.
இடையில் மழை, காற்றினால் மரத்தை
விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல்
தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

தமிழ்நாட்டில் பல போலி சாமியார்கள்
பெண்களை மிகவும் சுலபமாக ஏமாற்றி
வசியம் செய்து அவர்களை வசப்படுத்திக்
கொள்வதை தினம் தினம் கேள்விப்பட்டு
இருப்பீர்கள்.

இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து
எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும்
மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை
விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது
ஆட்கள் போர் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும்.

அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு.
இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும்.
வெட்டினால் பால் கொட்டும்.

நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின்
பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

அன்பொடு
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

No comments: