Thursday, July 03, 2008

சதுரகிரி யாத்திரை #3






அந்த வணிகனுக்காக தாம் உருவாக்கிய
வகாரத் தைலம் மேலும் மேலும் பொங்கி
வழிந்து கொண்டிருப்பதைப்
பார்த்தார் காலாங்கி நாதர் சித்தர்.

பூமியின் கீழ் ஒரு கற்கிணறு ஒன்றைக்
கொண்டு மூடிவிட்டார். துஷ்டர்கள்,பேராசைக்காரர்,
வீணர்களிடம் போய் சேர்ந்துவிடக் கூடாது
என்பதற்காக அதனைக் காக்க வேண்டி,
தைலக் கிணறு இருக்கிற சுந்தர் மகாலிங்க சுவாமி
இடத்தில் நான்கு திசைகளிலும் காவல் தெய்வத்தை
நியமித்துவிட்டு தவநிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.

சதுரகிரியில் தீர்த்தங்கள்

சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில்
'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர
தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி
ஒரு முறை நீராடினால் கொலை,
காமம், குருத்துரோகம் போன்ற
பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி
புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்.

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது
இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த
நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும்,
ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட,
ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து
ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில்
விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை
முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு.
இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும்
தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும்
உண்டு.

சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற
இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து
வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்கம தீர்த்தம்
என்று அழைக்கப்படுகிறது. உமையாள்
பிருங்க முனிவர் தம்மை வணங்காமல்
ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின்
காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து,
அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி
கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு
வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு
வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால்,
எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின்
பணிப்பெண்களான சப்த கன்னியர்கள்
தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய
'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட
'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி
முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர்,
போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட
'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்'
போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.

சதுரகிரி மலையில் அமைந்துள்ள ஆலயங்கள்.

கருப்பணசுவாமி கோயில், ஸ்ரீ ராஜயோக தங்கக்
காளியம்மன் ஆலயம், கணபதி சாயை,
இரட்டைலிங்கம் ஆலயம், ஓப்பிலாசாயை, பலாவடி கருப்பசாமி,
சுந்தரர் கோயில், சந்தன மகாலிங்கம் கோயில்
சந்தன மகாலிங்கம், சுந்தரலிங்கர் சன்னதி,
ஆனந்தவல்லியம்மை கோயில், பைரவ மூர்த்தி, காளியம்மை,
பேச்சியமை, கன்னிமார் கோயில், வெள்ளைப் பிள்ளையார் கோயில்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,
Singapore
For your Book Mark

2 comments:

jeevagv said...

பல செய்திகளை அறிந்து கொண்டேன், நன்றி.

சிங்கை கிருஷ்ணன் said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
பல செய்திகளை அறிந்து கொண்டேன், நன்றி.
//

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
அன்புடன்
கிருஷ்ணன்