Sunday, July 13, 2008

சதுரகிரி யாத்திரை #8 (நிறைவு)








நம்மைச் சுற்றிய உலகம் நம் கண்ணில் பிரதானமாக விழுந்தும் விழாமலும் போன்று நூற்றுக்கணக்கான உயிர் இயக்கங்கள் கொண்டது. இதில் பெரும் பகுதி நாம் அறிந்ததே இல்லை. அதிலும் மலை வாழ்விடங்களுக்குச் செல்லும்போது அங்கே நாம் காண நினைப்பது யாவும் புல்வெளியும் நீர்நிலையும்உணவங்களும்தான்.
மாறாக மலை வாழ்விடங்களில்தான் முன் அறிந்திராத
அதிகமான பூக்கள், செடிகள், மூலிகைகள், பறவைகள்
மற்றும் சிறு உயிர்கள் அதிகமிருக்கின்றன.
அவற்றை நாம் காண அக்கறை கொள்வதே இல்லை.
ரோஜாவிற்கு தரும் முக்கியத்துவத்தை வேப்பம்பூவுக்கு
தருவதில்லை. ஆனால், ரோஜா அளவிற்கு வேப்பம்பூவும்
தனித்துவமானது. மலை கற்றுக் கொடுப்பது எவ்வளவோ இருக்கிறது.
ஆனால், நாம் கற்றுக் கொள்வது மிக குறைவானதே.
காடுகளில் நமக்கு பெயர் தெரியாத மரங்களும்,
செடிகளும் இருக்கிறது. இது நமது காடுகளைப் பற்றிய
அறிவின்மைதான் காட்டுகிறது. பூக்களை புகைப்படம்
எடுப்பதில் உள்ள ஆர்வம் ''அது என்ன பூ'' என்று
அறிந்து கொள்வதில் நமக்கு ஆர்வம், நாட்டமில்லை.
காட்டில் ஏராளமான பூக்கள், மருத்துவ செடிகள்,
மூலிகை இருக்கிறது. காலில் மிதிப்பட்டு நசுங்கும்
மூலிகை எத்தனையே?எங்களின் சதுரகிரி
மலை பயணத்தின் போது உடன் வந்த அன்பர் சிவா
ஒரு இடத்தில் நின்று பாதையோரம் இருந்த ஒரு
செடியில் மிளகுபோல் கொத்து கொத்தாய்க் காய்ந்திருந்த
பழத்தினை பறித்து சாப்பிடும்படி கூறினார்.
அதன் மருத்துவ குணத்தினை கூறிய போது
வியந்தோம். இரத்த நாளங்களில் ஏற்படும்
அடைப்புகளை இந்த பிச்சிபழம் நீக்கும் என்றார்.
முறிந்த எலும்பை ஒட்டவைக்கும் மூலிகை
இலைப்பற்றி கூறும்போது மூக்கில் விரலை
வைத்து வியக்கவேண்டியுள்ளது.
ஒரு பச்சிலை காட்டி, இது புண் அல்லது
காயங்களுக்கு உகந்த பச்சிலைஎன்றார்.
உடனே ரணம் காயும் என்றார்.
ஆனால், பச்சிலையை பார்த்து உபயோக்கி வேண்டும்.
பச்சிலையின் மேல்பாகத்தைக் காயத்தில், புண்ணில்,
ரணத்தில் வைத்து கட்டவேண்டும்.
தவறாக தலை கீழாக வைத்துக் கட்டினால் காயம்,
புண் மேசமாகி பெரிதாகி விடும்; ரணமாகிவிடும்.
மலைவாசி காரணமில்லாமல் எந்தச் செடிகளையும்,
பூக்களையும் பறித்து விரயம் செய்வதில்லை.
அந்தச் செடிகளை, பூக்களை அறிந்திருக்கிறான்.
அதன் மேன்மையும் மருத்துவமும் அவனுக்குப்
புரிந்திருக்கிறது. நாம் பூக்களை வெறும் வணிகமாகவும்
அழகியல் பொருளாகவும் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறோம்.
வாகன இரைச்சலாலும் நெருக்கடியான வாழ்வுச்
சுமைகளாலும் நகரில் இயற்கையான சப்தங்களை,
சுகந்தத்தை, நெருக்கத்தை இழந்துவிட்டோம்.
காட்டை அறிந்து கொள்ள பயணிக்கும் போது
கண்ணையும் காதையும் மனதையும் திறந்து
வைத்திருக்கவேண்டும்.
காடு ஒவ்வொரு நிமிடமும் கற்றுத் தருகிறது.
நேற்றுப் பார்த்த சூரியன், மேகம், நேற்றுப் பார்த்த
குளிர் இன்றில்லை.
ஒவ்வொரு நிமிடமும் காடு மாறிக்கொண்டே இருக்கிறது.
அதை உணர்ந்து கொள்வதும் நம் கையில்இருக்கிறது.
சதுரகிரிக்கு ஒரு டூர் போய் வாருங்கள்.
தக்க ஏற்பாடுகளை முன்னமே செய்து கொள்ளுங்கள்.
விஷயமறிந்த அன்பர்களின்/தெரிந்தவர்களின் ஆலோசனை நாடி,
அறிந்து பயணம் மேற்கொள்ளவும்.
நல்ல, சுகந்த அனுவங்களைப் பெறுங்கள்.
''நம்மோடு பயணித்தமைக்கு நன்றிங்க''.
நிறைவு.
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

4 comments:

jeevagv said...

சுவையாகவும், பயனுள்ள செய்திகள் நிறைந்ததாகவும் உள்ளது.

rajsteadfast said...

Dear Sir,

Very nice Articles.

rajsteadfast said...

Dear Sir,

Sathragiri patriya yellaa pathivugalum arumai. Nanri.
Pani sirakka vazhthukkal.

rajsteadfast said...

Very Nice Articles.